Monday, September 19, 2011

தோழர்; அ.சவுந்திரராசன்.M.A. அவர்கள், C.I.T.U.


                                  A.SOUNDARARAJAN.C.I.T.U.


                                       

அன்பு நண்பர்களே,வணக்கம்.
                தோழர் அ.சவுந்திரராசன் .M.A.,அவர்கள் பற்றிய சிறு குறிப்பு இந்தப்பதிவில் காண்போம்.

                   தோழர் அ.சவுந்திரராசன் அவர்கள் -தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்-C.I.T.U.பத்திரிக்கையான   ''போக்குவரத்து தொழிலாளி''     மாதாந்திரப் பத்திரிக்கையின் ஆசிரியர்.


       மற்றும் சி.ஐ.டி.யூ. தமிழ் மாநிலக்குழு பத்திரிக்கையான  ''சி.ஐ.டி.யூ-செய்தி'' பத்திரிக்கை ஆசிரியர் 

        தோழர்; அ.சவுந்திரராசன்.M.A, அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியில்  பயின்று  M.A., பட்டம் பெற்றவர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1971- ஆம் ஆண்டு முதல் முழு நேர ஊழியராகப் பணி புரிந்து வருகிறார்.
          


        அரசு போக்குவரத்துக்கழக C.I.T.U.. சங்க பொதுச்செயலாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு தற்போது C.I.T.U.. சங்க தலைவராக உள்ளார்.

       C.I.T.U. தமிழ் மாநிலக்குழு பொதுச் செயலாளராக எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றுகிறார். 

       C.I.T.U.வின்  அகில இந்திய செயலாளர் மற்றும் அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் என அகில இந்திய பொறுப்புகளில் இருந்து வருகிறார். 

     தொழிற்சங்க மாநாடுகளில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
    
        தோழர் அ. சவுந்திரராசன் M.A.,அவர்கள் கடின உழைப்பாளி.  
      சிறந்த எழுத்தாளர்,பேச்சாளர்,சிந்தனையாளர், சிறந்த மனிதாபிமானி,தற்போது தோழருக்கு வயது 64 ஆண்டுகள்.

       C.I.T.U.தொழிற்சங்கத்தலைவர் தோழர்: அ.சவுந்திரராசன் அவர்கள் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக உள்ளார். என,

    Paramesdriver.blogspot.com // sathy & thalavadi - ஈரோடு மாவட்டம்.

No comments:

Post a Comment