Tuesday, December 8, 2015

உசாரய்யா! உசாரு!!...........வெள்ள நிவாரண உதவி செய்பவர்களே உசாரு!!!......

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களது உழைப்பையும்,நேரத்தையும்,நிதியையும் செலவழித்துக்கொண்டு கடலூர் சென்றால் அங்கு சுறையாடி திருடி கொள்ளையடிக்கும் சிலரைப்பற்றி நினைத்தால் மிகவும் வேதனையை தருகிறது...கோபிசெட்டிபாளையத்திலிருந்து உதவும் எண்ணத்துடன் சென்ற நமது நண்பர்கள் பட்ட வேதனையை இங்கு பதிவிட்டுள்ளேன். கடலூர் நோக்கி நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் உதவும் நெஞ்சங்களே எதற்கும் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஒரு ஆளும்கட்சி அடிமை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னல் மிகுந்த வலி கொண்டது. மஞ்சக்குப்பம் என்ற கிராமத்தில் 11 லாரி வைத்திருக்கும் ராகவன் என்ற நபர்தான் அவர். ஆதலால் உங்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட ஆட்சியர் கைப்பேசி எண்ணும் 9444139000, மாவட்ட வருவாய் அலுவலர் எண்ணும் தந்துள்ளேன். 9445000907


 எங்கள் குழுவிற்கு தங்குவதற்கும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுத்த திண்டிவனம் மருத்துவர் illayaraja அவர்களுக்கு எங்கள் புல்வெளி அறக்கட்டளை மற்றும் தென்றல் கலைக்கூடம், கோபி ஆயுள் காப்பீட்டுக்கழக பணியாளர்கள், கோபி காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட நண்பர்கள், போக்குவரத்து ஊழியர் நண்பர்கள், சமையல் கலைஞர் சங்கர் உள்ளிட்ட நண்பர்கள், ல.கள்ளிப்பட்டி கண்ணப்பர் அறக்கட்டளை பெருமக்கள் அனைவரின் பங்களிப்பும் பாராட்டிற்குரியது.