Wednesday, December 31, 2014

LOGO - LIST


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.நமது இயக்கம் சம்பந்தப்பட்ட லோகோ மற்றும் பிற படங்கள் தேவைப்படும்போது தேடல் காரணமாக நேரம் விரயமாகிறது.எனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.





















அரசு போக்குவரத்துக்கழகம் தொழிலாளர்களின் போராட்டம் ஏன்?


மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்..பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்..ஆனால் மக்களிடையே மற்றவர்களிடையே நன்மதிப்பை சம்பாதிக்க ஆயுள்வரை நல்லொழுக்கத்தைப்பேணி காக்க வேண்டும்..
              அரசு போக்குவரத்துத்தொழிலாளர்களின் போராட்டம் செய்யக்காரணம் உங்க பார்வைக்காக..
முயற்சிக்கலாம் வாங்க!.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இனிவருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொதுவான இடத்தில் அதாவது மக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாரா? இங்கு குறிப்பிட்ட '' சம்பந்தப்பட்ட அனைவரும்'' என்பவர்கள்(1)அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து அதிகாரிகள்,(2)அரசு போக்குவரத்துக்கழகங்களின் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள்,மற்றும் பணியாளர்கள்,(3)நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டஅரசுத்துறைகள்,(4)மக்கள் பிரதிநிதிகள்,(5)சமூக நல ஆர்வலர்கள்,(6)பொதுமக்கள்(7)போக்குவரத்து வாகன உற்பத்தியாளர்கள்,மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள்(8)ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள்,(9)நீதித்துறைகள்,(10) பாதிக்கப்பட்டோர்,(11)அன்றாடம் பயணிப்போர் (12)பயணிகள் சங்கங்கள் (13)மக்கள் மன்றங்கள் (14)அனைத்து மாணவர்கள் அமைப்புகள்(15)நடுநிலை சிந்தனையாளர்கள் என அனைவரையும் குறிப்பிடுகிறேன்.பொதுவான இடம் என்பது மக்கள் கூடும் இடங்களில் பொதுமேடை அமைத்து விவாதிப்பது.அதுவும் நாகரீகமாக நியாயமாக விவாதம் செய்வது.அவரவர் தவறுகளை அவர்களே உணர வைப்பது...இன்னும்.... இன்னும்..... இன்னும்........தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுக....செயல்படுத்துவோம் வாங்க..



விவாதிக்கலாம் வாங்க!....
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அத்தியாவசிய சேவையான பேருந்துப் போக்குவரத்து நிர்வாகம் மக்களுக்கு உண்மையிலேயே சிறப்பான சேவை செய்கிறதா??? சேவைக்குறைபாட்டிற்கு காரணம் யார்? அரசாங்கமா?அரசு போக்குவரத்துக்கழகமா? போக்குவரத்து தொழிலாளர்களா? பயணிகளா? உங்க எண்ணத்தை மற்றும் அனுபவத்தை பகிருங்க... முதல் கருத்தாக எனது அனுபவமான கருத்து உண்மையிலேயே தொழிலாளர்கள் என்றால் ஏற்க இயலாது..காரணம் அனுபவமிக்க தொழிலாளர்கள் எங்கோ ஒரு மூலையில் யாரும் ஏறாத ஓட்டைப் பேருந்தில் பணி புரிய நிர்ப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றுவதால்.முறையான சீனியாரிட்டி முறையில் பணி ஒதுக்கீடு செய்யாமல் ...சொகுசுப்பேருந்து,நீண்டதூரப்பேருந்து இரவுநேர பேருந்து,போன்ற பேருந்துகளில் அனுபவமே இல்லாத,போதிய பயிற்சி இல்லாத நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்தை வைத்து அவ்வாறான பேருந்துகளில்பணியாற்றுவதால்தான் அத்தனை முறைகேடுகளும் நடைபெறுகின்றன..தற்போதைய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அவர்களின் பணியின்போது கடமையும்,பொறுப்பும் பற்றியே தெரியாத நிலை..பயணிகளை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களாக எண்ணிக்கொள்ளாத நிலை..அதனால்தான் பயணிகளைப்பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்படும் அவலநிலை..இறுதியில் தொழிலாளர்கள் மீது வீண்பழி....



இனியாவது பதில் கிடைக்குமா????கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுமா??
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மக்கள் சேவைக்காக இயக்கப்படும் பேருந்துகளில் நஷ்டத்தைக் கணக்குக் காட்டி டீசலை மிச்சம் செய்...வருமானத்தைப்பெருக்கு..என்று கூடுதலான தொல்லைகளை மாதந்தோறும் கூடுதலாக்கிக்கொண்டே வரும் நிர்வாகத்தின் செயல்பாடு சரியா? ஒரு பேருந்தின் சட்டப்படியான கொள்ளளவு 55 நபர் என்றால் ஏற்றுவதோ 150க்கும் அதிகமான பயணிகள்??? அப்படியானால் இலவசமாக பயணிக்கும் மாணவர்களை கணக்கெடுப்பது எப்படி?..அளவுக்கதிகமாக ஏற்றிக்கொண்டு அபாயமாக இயக்கி வரும் நிலையில் அதே பேருந்தில் இன்னும் ஏற்று என்று கூறும் நிர்வாகம் ஒரு பேருந்தில் எத்தனை பயணிகளை ஏற்றுவது என்று எண்ணிக்கையில் கூறவேண்டும் அல்லவா?அல்லது மக்களே நீங்களாவது கூறுங்க..எத்தனை பயணிகளை ஒரேதடவையில் ஏற்றுவது? என்று கூறுங்க...டீசல் சிக்கனப்படுத்து என்றால் ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓட்டலாம் என்று ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஓட்டி அதன்படி அளவு கொடுக்கலாம் அல்லவா?அதையும் செய்வதில்லை..வாகன உற்பத்தியாளரே அதாவது அசோக் லேலண்ட் கம்பெனி பொறியாளருக்கே சித்தோடு பயிற்சியின்போது என் சந்தேகமான கேள்வியான ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்று சொல்லத் தெரியவில்லை?? என்ன கொடுமை இது...தொழிலாளர்களின் ஆயுள்காப்பீட்டுப்பணத்தை,அஞ்சலக சிறுசேமிப்பு மாதாந்திரப்பணத்தை,விடுப்பு சரண்டர் பணத்தை,பிரவிடன்ட் பண்ட் பணத்தை,மாதம் தவறாமல் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அந்தந்தத்துறைகளுக்கு உரிய முறையில் கட்டாமல் முறைகேடு செய்வது தனியார்துறையில்கூட நடைபெறாத அநீதி அல்லவா? மற்ற அரசுத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு,அலுவலர்களுக்கு,பணியாளர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு அரசு போக்குவரத்துக்கழகத்தில் மட்டும் இல்லையே? ஓட்டுநர்,நடத்துநர் மட்டுமல்லங்க,தொழில்நுட்ப பணியாளர்களும் படும் அவஸ்தை வெளியில் சொல்லமுடியாத கொடுமை....

மறக்கமுடியுமா?
உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்!!!.......
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
போக்குவரத்துத்தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி முகநூல் நண்பர் அதிரை தவ்ஹீத் சகோதரி அவர்களின் ஆதங்கம் இதோ...
''அதிரை தவ்ஹீத் சகோதரி - பாவம் ஒருபக்கம் பழிஒருபக்கம்.என்பார்கள்
அதைபோல்தான் உங்களை போன்றோரின்நிலையும்
அரசு என்பது அதிகாரிகள்மட்டும்மல்ல பொதுமக்களும் சேர்த்துதான்
பொதுமக்களுக்கு எவ்வளவு கஸ்டம் யோசித்துபாருங்கள்
உங்களின் நியாயமான கோரிக்கை அரசுக்கு வேறுவழியில் தெரியபடுத்தியிருக்களாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் வேளைநிருத்தம் போராட்டம் செய்யலாம்'' என்று
மேற்படி தனது வேதனையை தெரிவித்துள்ள நண்பருக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமை என் போன்றோருக்கு உள்ளது. அதற்கான பதில்..
கடந்த பதினைந்து மாதங்களாக பல்வேறு தளங்களில் தொழிலாளர்களின் பிரச்சினையையும்,குறைகளையும் தீர்த்து வைக்கச்சொல்லி ஆர்ப்பாட்டம்,பேரணி,என்றெல்லாம் நடத்தியும்,திருச்சிராப்பள்ளியில் எச்சரிக்கைக்கான பேரணி நடத்தியும்,சட்டப்படியான முறையில் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தும் இந்த அரசு மிகவும் அலட்சியம் செய்து விட்டது (2001லேயே வேலை நிறுத்தம் நடந்தவிதம் உணரவில்லைபோலும்)..
தற்போது பேசுவதாக இறங்கி வந்துள்ள அரசாங்கம் முன்னரே செய்து இருந்தால் இந்த அவலம் நடந்திருக்காது அல்லவா?..

இது மட்டும் அல்லாமல் ,தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளத்தைக்கூட ஒரு மாதம் தள்ளிக்கொடுப்பது..ஆயுள் காப்பீடு ,அஞ்சலக சிறு சேமிப்பு,வீடு கட்ட வாங்கிய வங்கிக்கடன்,பிராவிடன்ட் பண்டு போன்ற தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய துறைகளில் செலுத்துவது இல்லை.மாறாக தொழிலாளர்களின் பணத்தை முறைகேடாக நிர்வாகம் செலவழித்து வருகிறது.
இது தனியார் துறையில் கூட நடக்காத கேவலம்.இதனால் பாதிப்பு தொழிலாளிக்குத்தானே!..

தாங்கள் தயவு செய்து ஈரோடு வடக்கு ஆயுள் காப்பீடு அலுவலகத்தைத்தொடர்பு கொண்டு கேளுங்க..மற்றும் ஈரோடு தலைமை அஞ்சலத்தை தொடர்பு கொண்டு கேளுங்க.கோயமுத்தூர் HDFC வங்கியைக் கேளுங்க...
போதாக்குறைக்கு டீசலை செலவழிக்காதே என்றால் எப்படி என்ற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பதில்லை..ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்தாவது சம்பந்தப்பட்ட பேருந்தை ஓட்டி டீசல் செலவு நிர்ணயம் செய்து ஓட்டுநர்களுக்கு போதிய விழிப்புணர்வு அறிவிக்கலாம் அல்லவா??
இதைவிட மோசமான அவலநிலை என்னவென்றால் ..அசோக் லேலண்டு கம்பெனியாளரே வருகை தந்து பயிற்சியளித்தபோது எனது கேள்வியான ''ஒருபுதிய பேருந்து அனுமதித்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லிட்டர் டீசல் செலவுக்கு எத்தனை கி.மீ. தூரம் சமதளத்தில்,மலைப்பகுதியில்,நகர்ப்பகுதியில் இயக்கலாம்'' என்று கேட்டபோது தெரியாது? என்று மழுப்பிக்கொண்டு பதில் சொல்லும் படு கேவலமான நிலை..
போதாக்குறைக்கு .சில தரங்கெட்ட அதிகாரிகளின் சுயநலத்திற்காக வேண்டுமென்றே பொய்வழக்குப்போட்டு தொழிலாளர்களை பழிவாங்குவது..இதற்குத்தாங்க கண்காணிப்புக்கேமரா பொருத்துங்க! என்று ஒருமுறை பேட்டியளித்த கலைஞர் டிவியிலும் கூறியுள்ளேன்.தற்போது நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நான் கருத்துரை ஆற்றச் செல்லும் அனைத்து நிகழ்வுகளிலும்,விழாக்களிலும் சொல்லி வருகிறேன்.நாட்டைக்காக்கும் பணிக்கே பயன்படும் கண்காணிப்புக்கேமரா பேருந்து நடவடிக்கையை கண்காணிக்காதா??? செலவும் ஒரேமுறை செலவு அதுவும் மிகக்குறைவான செலவில் இருபத்தி நான்கு மணி நேரமும் சென்னை தலைமையகத்திலேயே கூட கண்காணிக்கலாம்.நேர்மையான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.அநியாயமாக தண்டனை பெற மாட்டார்கள்..ஒரு மாதத்திற்கு வழித்தடப்பரிசோதனை என்ற பெயரில் சொகுசாக உலா வரும் அதிகாரிகளுக்கு? ஆங்காங்கே தொழிலாளர்களிடம் வறட்டுக் கௌரவம் காட்டும் அதிகாரிகளுக்கு
(சம்பளமாக கொடுக்கப்படும் மக்கள் வரிப்பணமான)
மாதாமாதம் ஆகும் இலட்சக்கணக்கானரூபாய் செலவும் மீதமாகும்.அவர்களது சுய தேவைகளை நிவர்த்தி செய்யச்சொல்லி தொழிலாளர்களுக்குத்தொல்லை தரும் கேவலமும் இல்லாமற்போகும்.இது எனது அனுபவம்..தேவைப்பட்டால் தங்களது இன்பாக்ஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்.அல்லது ஓரிடத்தில் கருத்துக்களம் விவாத மன்றம் அமைத்து அனைத்து தரப்பினரையும் அழைத்து விவாதிக்க ஏற்பாடு செய்தால் நான் தயார்..ஆதாரத்துடன் விவாதிக்க..ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி வரமாட்டார்..அவர்களையும் வரவழைக்க முடியுமா??
சாப்ட்வேர் கம்பெனிகளில் நடத்தும் 360 டிகிரி அப்ரைசல் முறையை கடைப்பிடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டுகிறேன்.அவர்கள் பெறும் சம்பளமும் மக்களின் வரிப்பணம்தாங்க..
முதலில் கீழிருந்து மேல் வரை அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.தீய பழக்கங்கள் இல்லாதவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.அப்போதுதாங்க என் போன்றவர்களின் நல்ல பழக்கங்களான புகைத்தல் இல்லாமை,மது போதை பழக்கம் இல்லாமை,பிறமாது உறவு இல்லாமை போன்றவை தனிமனித ஒழுக்கம் பற்றி அனைவரும் உணர முடியும்..இதற்காக என்போன்றவர்களை பாராட்ட வேண்டாம்.தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரி..அதாவது அதிகாரிகளுடன் மது அருந்த வரச்சொல்லாமல் இருந்தால் சரி.(இன்னும் பல தீயவைகள் நடந்தேறி வருகின்றன.அவைகள் நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லைங்க).இது.2000இல் தாளவாடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கிளை மேலாளர் ராமனாதன் அவர்கள் சுய நலனுக்காக என்னிடம் கேவலமாக நடந்துகொண்டது.அதுமட்டுமின்றி அப்போது பணியிலிருந்த செக்யூரிட்டி கார்டு அவர்கள் அந்த மானேஜருக்கு மாமா வேலை பார்த்து காவல் இருந்தது.அதைக் கண்டித்த எனக்கு இட மாறுதல் செய்து சொல்லொண்ணா துன்பங்களைக்கொடுத்தது..மறக்க முடியுமா?? அவசியம் ஒவ்வொரு கிளையிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும்.அப்போதுதாங்க பணி புரியும் இடம் புனிதம் ஆகும்.பணியாற்றுபவர்களுக்கு பய உணர்வு வரும்..இதோ பகிர்ந்துள்ள போர்டுகளிலுள்ள வாசகங்களைப்படித்துப்பாருங்க...இது தங்களுக்கான மாதிரிதாங்க.தற்போது தாளவாடி கிளையில்பணியாற்றும் கிளை மேலாளர் உட்பட அனைவருமே சிறப்பான முறையில் பணியாற்றுகிறார்கள்..அவர்களுக்கு எனது பதிவால் வருத்தமடைந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
உண்மையைச்சொல்லித்தானே ஆக வேண்டும்.
மனித நேயம் வேண்டும் முதலில்.மக்களின் துன்பங்களை உணர வேண்டும்..மக்களோடு மக்களாக வாழ்ந்து பார்க்க வேண்டும்.மனச்சாட்சி வேண்டும்.
கீழே  தங்களது பார்வைக்கான ஒரு உதாரணமே! 
        4.12.2011அன்று அனைத்து தொழிற்சங்கங்களின் அறிவிப்பு பலகைகளில் கிளை மேலாளர் பற்றிய விமர்சனம்





Tuesday, December 30, 2014

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடவுளா?மந்திரவாதிகளா?

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.28.12.2014 ஞாயிறு முதல் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தால் தமிழக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கான காரணங்களில் சில தங்களது பார்வைக்காக..
ஓட்டுநர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி பற்றி பார்ப்போம்.
            (1) பேருந்து வாகன உற்பத்தியாளர்களுக்கே புதிய பேருந்து ஒருலிட்டர் டீசல் செலவழித்தால் எத்தனை கிலோமீட்டர் ஓடும்
என்று கூறத்தெரியாத நிலையில்
(டீசலிலும் மூன்று வகையான தரம் உள்ளன.அவற்றில் எந்த தரமுள்ள டீசல் கழகத்தில் உபயோகம் எனத்தெரியாது)   
          ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து வழித்தடத்தில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்யாத நிலையில் பணியிலிருக்கும் ஓட்டுநர்களே  பழைய பேருந்துகளில்,அதிக பயணிகளை ஏற்றிய நிலையில்,வழித்தடக்குறுக்கீடு,தடைகள்,அதிக நிறுத்தங்கள்,குறைவான பிரேக் என பல்வேறு சிக்கல்களில் பேருந்து பராமரிப்பு குறைந்தநிலையில்,முகப்பு விளக்குகள் வெளிச்சமே இல்லாத இரவு இயக்கத்தில்,வாகன வேகத்தைக் குறைத்துள்ள நிலையில்,இஞ்சின் சக்தியைக் குறைத்துள்ள நிலையில்,தனியார் பேருந்துகளுக்கு இணையாக நிமிட நேர இடைவெளியில் போட்டியிட்டு அதுவும் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி எடுத்து இயக்கி பயணநேரத்தை நிர்வகித்து வரும் சிக்கலான நிலையில் ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் இயக்க வேண்டும் என்ற கிளை நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடி?(இதன் விளக்கம் கடைசியில் பதிவிடுகிறேன்.)
            (2)தற்போது ''புதிய தலைமுறை தொலைக்காட்சி''யில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த பேட்டியில் வாகனம் ஓட்ட உரிமம் இருந்தாலே அவர்கள் சிறந்த ஓட்டுநர்கள்தான் அவர்களை வைத்து பேருந்துகளை இயக்குகிறோம் என்று உரிமம் இருந்தாலே சிறந்த ஓட்டுநர் என்று சான்றளித்துள்ள நிலையில்  தனியார் வாகனங்களிலும்,பல மாநிலங்களுக்கும் ஓட்டும் தொழிலைச்செய்து தற்போது அரசுப் பேருந்து ஓட்டும் என்னைப்போல முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணி (உரிமம் எடுத்துள்ள தேதியின்படி) அனுபவம் பெற்று இருந்தும்,எங்களைப்போன்றவர்களை  அப்போதைய பொதுமேலாளர் அவர்கள் சோதனை ஓட்டம் பார்த்து மூன்று மாதங்கள் பவானிசாகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி கொடுத்து பிறகு வாகனம் ஓட்ட அனுமதியளித்துள்ள நிலையில் தற்போது பணிக்கு வந்துள்ள புதிய அதிகாரிகள் எங்களைப்பார்த்து ஓட்டுநர் பணிக்கே லாயக்கில்லை? எவனய்யா லைசென்ஸ்கொடுத்தது? யாருய்யா வேலைக்கு சேர்த்தது? என்று கேவலமாகத்திட்டும் அவலநிலை!..
              (3)மனநிலை மற்றும் உடல்நிலை சரியில்லை என்றாலும் ஒரு ஷிப்டு பணி புரிந்துவிட்டு விடுப்பு எடு! என்று நிர்ப்பந்தித்து மனித உயிருடன் விளையாடும் ஆபத்தான பணி என்ற உண்மை தெரிந்தும்? மோட்டார் வாகன சட்டத்தையே குழிதோண்டி புதைக்கும் அவலநிலை  அவலநிலை!(உடல்நிலையும்,மனநிலையும் பொறுமை காத்து வேலை செய்யுமோ?)
           (4)அனைத்து போக்குவரத்துக்கழகங்களிலும் தினமும் அனைத்து தொழிலாளர்களுக்கும்  புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதே பயிற்சியாளர்களை ஓட்டுநர் பயிற்றுநர்களை வைத்து வழித்தடங்களில் ஒரு பேருந்தை ஓட்டவைத்து ஒரு லிட்டர் டீசலுக்கு இயக்கும் தூரத்தை நிர்ணயம் செய்யாமல் (வாகன உற்பத்தியாளர்களுக்கே ஒரு லிட்டர் செலவுக்கு எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று தெரியாது அதனால் அவர்களை விடுங்க) பாதையின் தன்மை பயணிகளின் ஏறும் மற்றும் இறங்கும் தன்மை  கொள்ளளவுக்கும் அதிகமாக ஏறும் பயணிகளின் ஆரோக்கியம்,மற்றும் நோயாளிகள்,வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,என பயணிகளின் தன்மை பற்றி கவலைப்படாத நிலை,
          (5) வானூர்திக்கு தனிவழி, கப்பலுக்கு தனிவழி, புகைவண்டிக்குக்கூட தனிவழி,ஆனால் சாலைப்போக்குவரத்தில் பேருந்துக்கு மட்டும் பொது வழி?!?...அதாவது பல்வேறு தன்மையுள்ள ,பராமரிப்புள்ள ,ஒரு வாகனம் செல்லும் பாதையில்,பல்வேறு வேகங்களில்,பல்வேறு எடைகளுள்ள,பல்வேறு வடிங்களுள்ள, பல வாகனங்கள் செல்லும் நிலையில் பல்வேறு மனநிலையிலுள்ள பொதுச்சாலை அனைவருக்கும் சொந்தம் என்று தெரிந்தும் சாலைவிதிகளை அலட்சியம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் பெரும் நிறுவன அதிபர்கள்,பெரும்முதலாளிகள்  போன்ற சொந்த வாகன ஓட்டிகள்,அதிகார வர்க்கம்,உள்ளூர்வாசிகள்,அரசியல்வர்க்கம்,அதிகாரிகளின் தாமதமான தவறான போக்கு,பிற வாகன ஓட்டிகளின் தவறான ஓட்டம் மற்றும் வழிவிடாமல் மெதுவாக நடுப்பாதையில் வாகனம் ஓட்டுவது,(அதாவது பேருந்துஓட்டுநர்களை பழி எடுப்பதாக நினைத்து பேருந்தில் பயணிப்பவர்களை பாதிப்படையச்செய்வது) தற்காலிக குறுக்கீடுகள்,தடைகள்,சாலை ஆக்கிரமிப்புகள்,என எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு இயக்கும் பரிதாப நிலையில் ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு அது என்ன தரம்?என்றும் தெரியாது..வாகன உற்பத்தியாளருக்கும் தெரியாது...ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஒருமுறை ஓட்டி சோதித்தும் டீசல் செலவு நிர்ணயம் செய்யமுடியாது....கண்காணிப்புக்கேமராவும் பொருத்த முடியாது..கடமையாற்றும் நேர்மையான ஓட்டுநர்களையும் தெரியாது...ஏதோ ஒரு கேஸ் எழுதியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மலைப்பகுதியில்,அதுவும் இரவு நேரத்தில் போக்குவரத்தே இல்லாத இடத்தில் பேருந்தை சோதிக்கிறேன் என்ற தோற்றத்தில் பொய்யான வழக்கினைப்போட்டு பழிவாங்கும்  படு கேவலமான நிலை..
      (6) ஒரு பேருந்தின் கொள்ளளவு 55 பயணிகள் என்றாலும் சூழ்நிலை காரணமாக 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தினுள் காலியாக இடமே  இல்லாதநிலையில் வழித்தடத்தில் பயணிகளையோ,பள்ளி மாணவர்களையோ ஏற்ற இயலாமல் விட்டுவர வேண்டிய சூழ்நிலையில் ஏற்றி வராமைக்கு கொடுக்கப்படும் தண்டனைகள்..இதை எப்படி ஏற்க முடியும்?உண்மைநிலை அறியவேண்டியது நிர்வாகத்தின் கடமையல்லவா?..
           (7)அனுபவமுள்ள மற்றும் ஒழுக்கமான தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காதது...
இன்னும் ஏராளமான பிரச்சினைகளை,நெருக்கடிகளை,பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தித்து.சகித்து.பொறுமையுடன் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற கடமையின் காரணமாக மந்திரவாதிகளாகவும்,கடவுள்போலவும் (கடவுளுக்கு உணர்வு உள்ளதா?) உணர்ச்சியற்று பணி புரியும் நிலை..
இதற்கெல்லாம் தற்போதைக்கு ஒரே வழி.. அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமராக்களை அதுவும் TWO FACE என்னும் இருமுகமுள்ள கேமராக்களைப்  பொருத்தி பேருந்தின் உள்ளே மற்றும் வெளியே  இருபத்திநான்கு மணி நேரமும் கண்காணித்து  உண்மையான நிலை அறிய வேண்டும்.செலவு ஒரே முறை அதுவும் குறைந்து செலவு..தற்போதுள்ள பரிசோதனை முறையால் ஏகப்பட்ட செலவு  அதுவும் ஒரு பேருந்தை சில நிமிடங்கள் மட்டுமே சோதிக்கும் குறைபாடான சோதனை..(செலவு ஒரு அதிகாரிக்கு மாத சம்பளம் ரூபாய் 60,000.00க்கும் மேல். உடன் வரும் பரிசோதகர்கள் இருவருக்கு மாதம் ரூபாய்30,000.00 வீதம் 60000.00 ரூபாய் சம்பளம்,ஜீப் ஓட்டுநருக்கு மாதம் ரூபாய்20000.00 அதுபோக ஜீப் பராமரிப்புக்கான செலவு மற்றும் எரிபொருள் செலவு நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்க இவ்வாறு ஒரு மாதத்திற்கான செலவால் அனைத்து பேருந்துகளுக்கும் கேமரா பொருத்திவிடலாம்..


 சாதாரண டீக்கடையில் கூட கண்காணிப்புக்கேமரா பொருத்தி பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள இன்றைய நிலையில்...பேருந்துகளுக்கும் பொருத்தி  பயணிகளுக்கும்  முழு நேரப் பாதுகாப்பு, பணியிலிருக்கும் தொழிலாளர்களின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிப்பும்  செய்யலாம்...
               இந்த அரசு செய்யுமா???


Monday, December 29, 2014

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சரியா?

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.இன்றைய விரும்பத்தகாத நிகழ்வான அரசு போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் சரியா?அதாவது  2014 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் அரசு பேருந்துகளின் வேலை நிறுத்தத்திற்கான காரணங்களில் சிலவற்றை  எனது அனுபவம் மற்றும் எண்ணத்திற்கு எட்டிய சில தகவல்களை இங்கு பொதுமக்களாகிய தங்களுக்காக பகிர்கிறேன்.
  தற்போது  புதிய தலைமுறை தொலைக்காட்சி உட்பட பல்வேறு ஊடகங்கள் அரசுப்பேருந்தையே நம்பி தினமும் பயணிக்கும் கிராமப்பகுதியிலுள்ள,மலைப்பகுதியிலுள்ள ஏழை மக்கள்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்ற உண்மையான நிலையை எடுத்துரைக்கும் நிலையை உணர்கிறோம் காரணம் அரசுப்போக்குவரத்துக்கழகங்களில் தொழிலாளர்களாகிய எங்களது குடும்பம் உட்பட உறவினர்கள்,நண்பர்கள் என மற்ற அனைவருமே பேருந்துகளில் பயணிப்பவர்களே!..அனைவரின் சிரமங்களையும் உணர்ந்து   இதற்காக மிகுந்த வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.......இருப்பினும் பெரும்பாலான தொழிலாளர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகிவரும் காரணத்தால் தவிர்க்கமுடியாததாகிவிட்ட இந்த நியாயமான வேலை நிறுத்தத்திற்கு காரணத்தை இங்கு தங்களின் பார்வைக்காக பதிவிடுகிறேன்.


        மேற்கண்ட அறிவிப்பு மூலமாக அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கான காரணம் என்றாலும் என் போன்ற ஒவ்வொரு தொழிலாளர்களின்  தனிப்பட்ட காரணம் மற்றும் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் நேர்மையற்ற கஷ்டங்கள், சில தொழிளர்களால் பயணிகள் அனுபவித்து வரும் துன்பங்கள் இவைகளுக்கு உரிய நிவாரணம் வேண்டி உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்தக்கோரி இந்தபதிவின் வாயிலாக தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
 முதலில் பயணிகளுக்கான கோரிக்கை;
   அரசு போக்குவரத்துக்கழகங்களில் நீண்ட தூர,அதுவும் இரவு நேர வழத்தடங்களில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களே கடமையை மறந்து விட்டு தனியாக பயணிக்கும் இளவயது பெண் பயணி என்று பாராமல் அலட்சியம் செய்யும் கேவலமான நிலையை சீர்படுத்த வேண்டும்.முன்பதிவு செய்த பயணிக்கே உரிய இருக்கையை வழங்க வேண்டும்.நடத்துநர் சொந்தம் ,நண்பர்கள் என்ற காரணத்திற்காக முன்பதிவு செய்த இருக்கையை மாற்றச்சொல்லி துன்புறுத்தி பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடாது.இரவுநேர மற்றும் நீண்ட தூரப்பயணிக்கும்போது ஏற்படும் இன்னல்களை உடனே புகார் கொடுக்க அனைத்து பேருந்துகளிலும் கிளை மேலாளர்,பொதுமேலாளர்,சம்பந்தப்பட்ட காவல்துறை தொடர்பு எண்களை எழுதி அனைத்து பயணிகள் பார்வைக்குப் படும்வகையில் வைத்து பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.அனைவரையும் பெயர்வில்லை அணிந்திருக்க கட்டாயமாக்க வேண்டும்.
முதலில் அனுபவமுள்ள ஓட்டுநர்களை மட்டும் நீண்டதூர வழித்தடப் பேருந்துகளில் பணிபுரிய ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதாது.நடத்துநர்களையும் அவ்வாறு அனுபவம்,ஒழுக்கம்,அனுசரிப்பு,சகிப்புத்தன்மையுள்ளவர்களை நியமித்து பயணிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.குறுக்குவழியில் யாருக்கோ ஏதோ ஒரு பணம் மட்டும் மாதந்தோறும் வருமானமாக வந்தால் போதும்?என்ற கேவலநிலையை ஒழித்து பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கடமையை கடைபிடிக்க வேண்டும்.(கடந்த காலத்தில் சென்னையிலிருந்து  சத்தியமங்கலத்திற்கு அரசுப்பேருந்துவில்  இரவு பயணத்திற்காக முன்பதிவு செய்து பயணித்த  பெண் இளவயது பெண் பயணி ஒருவர் நடத்துநரால் துன்பத்திற்கு ஆளாகி அந்த நிகழ்வின் உண்மை நிலை அறிய முதலமைச்சர் தனிப்பிரிவிற்கே புகார் அனுப்பியும் அந்தப்புகார் சம்பந்தப்பட்ட ஈரோடு மண்டலத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் இன்றுவரை பாதிப்புக்குள்ளான பயணிக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் பயணியே முழுத்தவறுக்கும்? காரணம் என தவறான முடிவை தயாரித்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள கொடுமை?நீதி விசாரணை என்பது இருவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.ஆனால் இங்கு குற்றவாளியை மட்டும் அழைத்து பேசி முடிவு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.இந்தக்கொடுமையை எங்கே சென்று முறையிடுவது?..ஆதாரம் என்னிடம் உள்ளது.)
அடுத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கை;
அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் 
(1)தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக செலுத்தப்படும் ஆயுள் காப்பீடு,அஞ்சலக சிறுசேமிப்பு,வீடு கட்ட வாங்கிய கடன்,போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மாதந்தோறும் தொழிலாளர்கள் செலுத்தும் அதாவது தொழிலாளிகளிடத்தில் பிடித்தம் செய்யும் தொகையினை அந்தந்த துறைகளுக்கே உரியமுறையில் செலுத்தி தொழிலாளர்களுக்கு உரியத் தார்மீக உரிமையை,கடமையைச் செய்ய வேண்டும்.
(2)எரிபொருள் சேமிப்பு அவசியம் தேவையே!ஆனால் வாகன உற்பத்தியாளர்களான அசோக் லைலேண்டு கம்பெனியாளரே பயிற்சியளிக்கும்போது ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கி.மீ. என்ற நிர்ணயத்தைக் கூற மறுப்பது அல்லது தெரியாது என்று மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.உண்மைநிலை கூற வேண்டும்.அல்லது அரசு போக்குவரத்துக்கழகமே ஓட்டுநர் பயிற்சியாளரை வைத்து சமதளம் மற்றும் மலைப்பகுதி மற்றும் நகர வழித்தடங்களில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்ய வேண்டும்.அதிக நெருக்கடி கொடுத்து வாகனத்தை உருட்டுவது மற்றும் நியூட்டரல் செய்து ஓட்டும் அவலநிலையை போக்கி பயணிகளுக்கு பாதுகாப்புத்தர வேண்டும்.
(3) சாலைப்போக்குவரத்தில் பேருந்து இயக்குவது வான்வழித்தடத்தைப்போல,நீர்வழித்தடத்தைப்போல,புகைவண்டி வழித்தடத்தைப்போல தனி வழித்தடம் இல்லை என்பதை உணர்ந்து பேருந்து இயக்கத்தின்போது ஏற்படும் திடீர் குறுக்கீடுகள்,தடைகள்,நெரிசல்கள்,போன்ற நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(4)அரசு போக்குவரத்துக்கழகம் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ஏற்றப்படும் பயணிகள் அனுமதி கொள்ளளவு எண்ணிக்கையையும்  கவனத்தில் கொண்டு நிர்வாகம் எத்தனை பயணிகளை அதிகபட்சமாக ஏற்றலாம் என்ற  அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.அதை விடுத்து 150பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இடையில் நிறுத்தங்களில் ஏற்ற இயலாத சூழலில் புகார் பெறும்போது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

(5)தற்போதைய போக்குவரத்துப்பயன்பாட்டில் பேருந்து நிறுத்த,இயக்க,மாணவர்கள்,குழந்தைகள்,நோயாளிகள்,முதியோர்,மாற்றுதிறனாளிகள்,
பெண்கள் போன்ற பயணிகள் ஏற,இறங்க  ஆகும் கால தாமதத்தையும் கணக்கில் கொண்டு இயக்க நேரத்தை நிர்வகிக்க வேண்டும்.
(5)அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும்.
(6)அரசுப்பேருந்துகள் அனைத்தும் பொதுமக்கள் சேவைக்காக இயக்கப்படுகின்றன என்ற போதிலும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.
(7)அரசு போக்குவரத்து அதிகாரிகள் அவர்களது சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்குதல்,பொய்வழக்குப்போடுதல் போன்ற கேவலமான நடவடிக்கையை விட்டுஒழிக்க வேண்டும்.
(8)உள்ளக விசாரணைப்பிரிவு போதிய காரணங்களையும்,சாட்சியங்களையும் வைத்து நடுநிலையாக விசாரிது முடிவு எடுக்க வேண்டும்.உதாரணமாக ஸ்பிரிங் பிளேட்டுகள் நடுப்பகுதி உடைவதற்கு காரணம் என்பதை உணராமல் ஓட்டுநரே என்பதை தவிர்க்க வேண்டும்.தண்டனையை விலக்க வேண்டும்.அந்த ஸ்பிரிங் பிளேட்டுகள் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள ஆயுட்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.அவை தாங்கும் எடை அளவினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(9) பணி முடித்த ஓட்டுநர்களுக்கு  டீசல் செலவு பற்றி தொலைபேசி வாயிலாக வீட்டிற்கே தொடர்பு கொண்டு கேவலமாக திட்டுவதை தவிர்க்க வேண்டும்.
(10)அரசியல் காரணங்களுக்காக அனுபவம் வாய்ந்த ,உண்மையாக உழைக்கும் தொழிலாளர்களை! பயணிகள் வரத்தே இல்லாத கடைக்கோடி கிராமங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்துவிட்டு அனுபவமில்லாத,பயிற்சியில்லாத,பணியின் தன்மை தெரியாத,தான் பயணிகளின் வேலையாள் என்பதை மறந்து அதிகாரப்போக்கு செய்யும் அறியாத தன்மையுள்ளவர்களை நீண்டதூர மற்றும் இரவு நேர இயக்கப் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்து அதன் விளைவுகளால்? பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்படும் செயலை தவிர்க்க வேண்டும்.
அரசுப்பேருந்துகளின் இயக்கத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் சோதனைக்காக செலவிடும் மாதந்திரச்செலவு தொகை கணக்கிட்டுப்பார்த்தால் மிக அதிக அளவு.அதே சமயம்  அதற்கேற்ற பயன் முறைக்கேடாகவே உள்ளது.ஒவ்வொரு பேருந்துகளிலும் கண்காணிப்புக்கேமரா பொருத்தி கண்காணித்தால் வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்திநான்கு மணி நேரமும்  உண்மையான நிலையை அறிய முடியும்.இதனால் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கும்.நேர்மையாக நிர்வாகமும் நடைபெறும்.இதனால் ஒரேமுறை குறைந்த செலவே ஆகும்.குறிப்பாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அவலநிலை இல்லாமற் போகும்.தவறு செய்ய நினைப்பவர்களும்  பயணிகளிடம் கனிவாகவும் எச்சரிக்கையாகவும் பணி புரிவார்கள்...
          இவற்றில் தவறான கோரிக்கை என்று நிர்வாகமோ,பொதுமக்களோ,தொழிலாளர்களோ  கருதினால் அதற்காக எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் அதனை சட்டப்படியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
         காரணம் மக்களுக்கு நல்ல சேவை செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்...
    இன்னும் பல காரணங்கள் உள்ளன இருப்பினும் தங்களது கவனத்திற்கு இதுவே  போதும் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன். நன்றிங்க..
     (இடுகையிட்ட தேதி;30.12.2014 காலை 8.00மணி) (பார்வை 19568)