மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு துவக்கத்தில் வரும் எழுத்துக்களைப் பற்றிக் காண்போம்.
மொழி முதல் எழுத்துகள்
ஒரு சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி இந்தப் பாடத்தில் காணலாம். சொல்லுக்கு முதலில் உயிர் எழுத்துகளோ
மெய் எழுத்துகளோ வரும். சொல் என்பதும், மொழி என்பதும்,
பதம் என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். முதலில்
சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகளைப் பற்றிப்
பார்ப்போம்.
5.2.1 சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துகள்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
எடுத்துக்காட்டு:
அம்மா | அல்லி |
ஆடு | ஆறு |
இடை | இரண்டு |
ஈடு | ஈரம் |
உடை | உடல் |
ஊர் | ஊக்கம் |
எறும்பு | எலி |
ஏணி | ஏடு |
ஐந்து | ஐப்பசி |
ஒன்று | ஒட்டகம் |
ஓடு | ஓடம் |
ஒளவையார் | ஒளவியம்
(பொறாமை) |
|
5.2.2 சொல்லுக்கு முதலில் வரும் மெய் எழுத்துகள்
இந்தப்
பாடத்தின் முதல் பகுதியில் உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள் இயல்பாக
மெய் எழுத்தில் தொடங்குகின்றன என்பது விளக்கப்பட்டது. இப்போது சொல்லின்
முதலில் வரும் மெய் எழுத்துகள் பற்றிக் காணலாம். மெய் எழுத்துகள் உயிர்
எழுத்துகளுடன் சேர்ந்தே சொல்லின் முதலில் வரும் என்று கூறப்பட்டது.
மெய்எழுத்துகள் எந்தெந்த உயிர்எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லின் முதலில்
வரும் என்றும் பின்வரும் பகுதியில் விளக்கப்படும்.
ஒரு மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளை வருக்க எழுத்துகள் என்று
கூறுவர். எடுத்துக்காட்டாக, க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர்
எழுத்துகளும் சேர்ந்து உருவான க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ,
கௌ என்னும் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளையும் ககர வருக்கம் என்று கூறுவர்.
• க் என்னும் மெய்எழுத்து
ககர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்தும் சொல்லுக்கு முதலில் வரும்.
கல் | கரும்பு |
கால் | காகம் |
கிளி | கிழமை |
கீரி | கீரை |
குயில் | குரங்கு |
கூடு | கூத்து |
கெட்ட | கெடுதி (அழிவு) |
கேள்வி | கேணி (கிணறு) |
கை | கைத்தடி |
கொடி | கொம்பு |
கோடு | கோட்டை |
கௌதாரி |
|
|
• ங் என்னும் மெய் எழுத்து
ஙகரம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகளுக்குப் பின்னும், யா, எ, ஆகிய வினா எழுத்துகளுக்குப் பின்னும் சொல்லுக்கு முதலில் வரும்.
அங்ஙனம் (அப்படி)
இங்ஙனம் (இப்படி)
எங்ஙனம்
(எப்படி)
யாங்ஙனம் (எப்படி)
சுட்டு, யா, எகர வினா வழி, அவ்வை
ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே (106)
என்னும் நன்னூல் நூற்பா, ஙகர எழுத்து மொழிக்கு முதலில் வருவதை விளக்குகிறது.
• ச் என்னும் மெய்எழுத்து
சகரம் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து
மொழிக்கு முதலில் வரும். ஆனால் பழங்காலத்தில் அ, ஐ, ஒள
என்னும் ழூன்று உயிர் எழுத்துகளுடனும் மொழிக்கு முதலில்
வருவதில்லை. அ என்னும் எழுத்துடன் சேர்ந்து சக்கரம், சங்கு,
சங்கம் முதலான சொற்கள் பழங்காலம் முதலே பயன்படுத்தப் படுகின்றன. ஐ,
ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சகரம் சேர்ந்துவரும் சொற்கள் தமிழில் இல்லை.
சைகை, சௌக்கியம் முதலான
பிறமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.
சக்கரம் | சந்தனம் |
சாலை | சாறு |
சிரிப்பு | சிலந்தி |
சீற்றம் | சீப்பு |
சுட்டு | சுண்ணாம்பு |
சூடு | சூடாமணி |
செறிவு | செம்பு |
சேறு | சேரன் |
சைகை | சைவம் |
சொல் | சொட்டு |
சோறு | சோழன் |
|
• ஞ் என்னும் எழுத்து
ஞகரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
ஞமலி (நாய்) | ஞலவல் (மின்மினிப் பூச்சி) |
=ஞ்+அ |
ஞாலம் (உலகம்) |
ஞாயிறு |
=ஞ்+ஆ |
ஞெகிழி (தீப்பொறி)
|
ஞெலிகோல் (தீக்கடையும் கோல்) |
=ஞ்+எ |
ஞொள்குதல் (இளைத்தல்) |
|
=ஞ்+ஒ |
|
அ, ஆ, எ, ஒவ்வொடு ஆகும் ஞம் முதல்
(நன்னூல்.105)
(பொருள் : ஞகர மெய் எழுத்து அ, ஆ, எ, ஒ, ஆகிய நான்கு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
)
• த் என்னும் மெய்எழுத்து
தகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
தரை | தம்பி |
தாமரை | தாய் |
திசை | திணை |
தீர்ப்பு | தீமை |
துடிப்பு | துன்பம் |
தூண் | தூக்கம் |
தென்னைமரம் | தென்றல் |
தேன் | தேங்காய் |
தைமாதம் | தையல் |
தொழில் | தொட்டி |
தோட்டம் | தோகை |
தௌவை (அக்காள்) |
|
|
• ந் என்னும் மெய்எழுத்து
நகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
நன்றி | நகை |
நாடு | நாள் |
நிறம் | நிழல் |
நீர் | நீளம் |
நுங்கு | நுனி |
நூல் | நூறு |
நெல் | நெஞ்சு |
நேற்று | நேர்மை |
நையாண்டி(கேலி) | நைதல் |
நொடி | நொறுங்குதல் |
நோக்கம் | நோட்டம் |
நௌவி (மான்) |
|
|
• ப் என்னும் மெய்எழுத்து
பகரமெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
பல் | பழம் |
பால் | பாட்டு |
பிடி | பிரிவு |
பீலி (தோகை) | பீடு (பெருமை) |
புகழ் | புல் |
பூங்கா | பூட்டு |
பெட்டி | பெண் |
பேச்சு | பேழை (பெட்டி) |
பை | பையன் |
பொன் | பொங்கல் |
போட்டி | போர் |
பௌத்தர் (புத்த சமயத்தவர்) |
|
|
• ம் என்னும் மெய் எழுத்து
மகர மெய் எழுத்து, பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
மண் | மக்கள் |
மான் | மாடு |
மின்னல் | மிதியடி |
மீன் | மீண்டும் |
முரசு | முடி |
மூங்கில் | மூன்று |
மெய் | மெழுகு |
மேடு | மேளம் |
மை | மையம் |
மொழி | மொட்டு |
மோதிரம் | மோசடி |
மௌனம் | மௌவல்(முல்லை மலர்) |
|
• ய் என்னும் மெய்எழுத்து
யகர மெய்
எழுத்து அ, ஆ, உ, ஊ, ஓ, ஓள ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து
சொல்லுக்கு முதலில் வரும். யகர மெய் எழுத்து, பழங்காலத்தில் ஆ (ய்+ஆ=யா)
என்னும் எழுத்துடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
யவனர் | யவை (நெல்வகை) |
யானை | யாழ் |
யுகம் (கால அளவு) |
|
யூகி (அறிவாளி) |
|
யோகம் (இணைந்து நிற்றல்) |
|
யௌவனம் (இளமை) |
|
|
அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள யம் முதல்
(நன்னூல். 104)
(பொருள்: அ, ஆ, ஊ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் சொல்லுக்கு முதலில் வரும்.
)
• வ் என்னும் மெய் எழுத்து
வகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
வணக்கம் | வரிசை |
வால் | வாய் |
வில் | விண் |
வீடு | வீண் |
வெற்றி | வெண்மை |
வேல் | வேங்கை |
வைகை | வையகம் (உலகம்) |
வௌவால் |
|
|
உ, ஊ, ஒ, ஓ அலவொடு வம் முதல்
(நன்னூல் - 103)
(பொருள்:
வகர மெய் எழுத்து உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு தவிர மற்ற (அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ,
ஒள) எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.)
5.2.3 சொல்லுக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்
க, த, ந, ப,
ம, ச, ஞ, ய, வ, ங என்னும் பத்து மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்
என்பதை அறிந்தோம். இவை தவிர உள்ள ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு
மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால் இந்த எழுத்துகளைக்
குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும்.
‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.
தமிழ்மொழி
பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு
அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள்.
அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும்
தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள்
பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற
என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.
ராமன்
லலிதா
முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில்
பயன்படுத்துகிறோம். இவ்வாறு பிறமொழிப் பெயர்களைத் தமிழ்மொழியில்
பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ்மொழியின் இயல்புக்கு ஏற்பவே
காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
ரகர வருக்க
எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை
என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை
எழுதுகிறோம்
ராணி | இராணி |
ரவி | இரவி |
ராமன் | இராமன் |
லலிதா | இலலிதா |
லாபம் | இலாபம் |
லாடம் | இலாடம் |
|
மேலே ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல்
‘அ’என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.
ரங்கன் அரங்கன்
இ, அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவதுபோல்
‘உ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு.
ரோம் | உரோம் |
ரோமம் | உரோமம் |
ரொட்டி | உரொட்டி |
|
இவ்வாறு
பிறமொழியிலிருந்து பெற்றுப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் பெயர்ச்
சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அந்தப் பிறமொழிப்
பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப்
பயன்படுத்துகிறோம். பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப்
போல் பிறமொழி வினைச் சொற்களையும் பிறசொற்களையும் பயன்படுத்தக் கூடாது.
• ஒலிக்குறிப்புச் சொற்கள்
சில ஒலிக்குறிப்புகளை நாம் நமது அன்றாடப் பேச்சில் பயன்படுத்துகிறோம்.
கோழி கொக்.
. . கொக் என்று கொக்கரிக்கும்
காக்கை கா. . . கா
என்று கரையும்
நாய் லொள் . . .
லொள் என்று குரைக்கும்
இவற்றில் இடம்பெற்றுள்ள கொக். . . கொக். . ., கா. . .கா. . ., லொள். . . லொள்.
. . என்பவை ஒலிக்குறிப்புச் சொற்கள். இவை போன்று வேறு பல
ஒலிக்குறிப்புகளையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய ஒலிக்குறிப்புச்
சொற்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகளும் இடம்பெறுவது உண்டு.
மணி டாண். . . .டாண் என்று ஒலித்தது.
பட்டாசு டமார். . . டமார் என்று வெடித்தது.
இவை போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களைத் தமிழ்மொழியில்
இரட்டைக் கிளவி என்று சொல்கிறோம்.
எழுத்து வரிசை |
எண்ணிக்கை |
எடுத்துக்காட்டு |
உயிர் வரிசை |
12 |
அடை, ஆடை, இலை, ஈயம், உரல், ஊர்தி, எலி, ஏணி, ஐவனம், ஒளி, ஓக்கம், ஔவியம் |
க வரிசை |
12 |
கலை, காலை, கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேயல், கைதை, கொண்டல், கோடை, கௌவை |
ச வரிசை |
9 அ, ஐ, ஔ நீங்கலாக |
சாலை, சிலை, சீற்றம், சுரும்பு, சூழ்க, செய்க, சேண், சொல், சோறு |
ஞ வரிசை |
3 ஆ, எ, ஒ மூன்றில் மட்டும் |
ஞாலம், ஞெகிழி , ஞொள்கிற்று |
த வரிசை |
12 |
தத்தை, தாடி, திற்றி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேவர், தையல், தொண்டை, தோடு, தௌவை |
ந வரிசை |
12 |
நண்டு, நாரை, நிலம், நீர், நுங்கு, நூல், நெய், நேயம், நைகை , நெடி, நோக்கம், நௌவி |
ப வரிசை |
12 |
படை, பாடி, பிடி, பீர்க்கு, புகழ், பூண்டு, பெண், பேய், பைதல், பொன், போர், பௌவம் |
ம வரிசை |
12 |
மடல், மாடு, மிடல் , மீன், முள், மூடி, மெய், மேனி, மையல், மொழி, மோதகம் , மௌவல் |
ய வரிசை |
1 (யா மட்டும்) |
யான், யாண்டு, யாறு |
வ வரிசை |
8 உ, ஊ, ஒ, ஓ நீங்கலாக |
வலை, வானம், விலை, வீடு, வெள்ளி, வேம்பு, வையம், வௌவுதல் |
குற்றியலுகரம் |
1 |
நுந்தை |
- |
ஆக மொத்தம் 94 |
- | | |