Monday, November 30, 2015

சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள்..

மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.

        சமையல் உணவுப் பெயர்களை ஆங்கிலத்தில் அறிவோம்!!!

அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்கள் பெயர்களை ஆங்கிலத்தில் அறிவோம்!!!
ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்
ஜாதிபத்திரி – Mace – மெக்
இஞ்சி – Ginger – ஜின்ஜர்
சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்
பூண்டு – Garlic – கார்லிக்
வெங்காயம் – Onion – ஆனியன்
புளி – Tamarind – டாமரிண்ட்
மிளகாய் – Chillies – சில்லிஸ்
மிளகு – Pepper – பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies
பச்சை மிளகாய் – Green chillies
குடை மிளகாய் – Capsicum
கல் உப்பு – Salt – ஸால்ட்
தூள் உப்பு – Table salt
வெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ
சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்
கற்கண்டு – Sugar Candy
ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts
கிஸ்மிஸ் – Dry Grapes
லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்
கசகசா – Poppy – பாப்பி
உளுந்து – Black Gram – பிளாக் கிராம்
கடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு – Moong Dal
கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்
உழுத்தம் பருப்பு – Urid Dhal
துவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு – Millet – மில்லட்
கேழ்வரகு – Ragi – ராகி
கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்
கோதுமை – Wheat – வீட்
கோதுமை ரவை – Cracked Wheat
சோளம் – Corn
சோளப்பொறி – Popcorn
எள்ளு – Sesame seeds / Gingelly seeds
நெல் – Paddy – பாடி
அரிசி – Rice – ரய்ஸ்
அவல் – Rice flakes
பச்சை அரிசி – Raw Rice
புளுங்கல் அரிசி – Par boiled rice
கடலை மா – Gram Flour
மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்
வாற்கோதுமை – Barley – பார்லி
பச்சை பட்டாணி – Green peas
சேமியா – Vermicelli
சவ்வரிசி – Sago
ரவை – Semolina
கொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa
கடுகு – Mustard – முஸ்டார்ட்
சீரகம் – Cumin – குமின்
வெந்தயம் – Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds
பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா
மஞ்சள் – Turmeric – டர்மரிக்
ஓமம் – Ajwain / Ajowan
தனியா – Coriander – கோரியண்டர்
கொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை – Curry Leaves
கஸ்தூரி – Musk – மஸ்க்
குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்
பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்
கற்பூரம் – Camphor – கேம்ஃபர்
மருதாணி – Henna – ஹென்னா
துளசி – Tulsi
எலுமிச்சை துளசி – Basil
எண்ணெய் – Oil – ஆயில்
கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் – Gingili Oil/Sesame oil – ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் – Neem Oil – நீம் ஆயில்
பாமாயில் – Palm Oil
ஆலிவ் ஆயில் – Olive Oil
பால் – Milk – மில்க்
பால்கட்டி – Cheese – ச்சீஸ்
நெய் – Ghee – கீ
வெண்ணெய் – Butter – பட்டர்
தயிர் – Curd/Yoghurt – க்கார்ட்
மோர் – Butter Milk – பட்டர் மில்க்
கீரை – Spinach – ஸ்பீனச்
அவரை – Beans – பீன்ஸ்
கர்பூரவள்ளி – Oregano
நார்த்தங்காய் – Citron – சிட்ரான்
திருநீர்பச்சை – Ocimum-basilicum
சீத்தாப்பழம் – Custard-apple
மாதுளை – Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் – Pumpkin
கருங்காலி மரம் – Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் – Bermuda Grass
வல்லாரை கீரை – Pennywort (Centella asiatica)
புதினா இலை – Mint leaves
வெற்றிலை – Betel leaves
நொச்சி இலை – Vitexnegundo (Chaste Tree)
அத்தி – Fig
கீழாநெல்லி – Phyllanthus nururi
தாழை மரம் – Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை – Purple-fruited pea eggplant
துத்திக்கீரை – Abutilon indicum
பிரமத்தண்டு – Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் – Coccinia grandis
முடக்கத்தான் கீரை – Cardiospermum halicacabum
குப்பைமேனி – Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி – Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை – Aloe Vera
நாவல் பழம் – Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி – Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி – Heliotropium
நிலக்குமிழஞ் செடி – Gmelina Asiatica
நெல்லிக்காய் – Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) – Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் – Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு – Sida caprinifolia
அகத்திக்கீரை – Sesbania grandiflora
செண்பகப் பூ – Sonchafa (champa)
சுண்டைக்காய் – Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி – Hibiscus(Shoe Flower)
கரும்பு – Sugar cane
நீர்முள்ளி – Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ – Star Anise
பூவரசு – Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை – Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி – Indian winter cherry
கத்தரிக்காய் – Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் – Guava
மரவள்ளிக் கிழங்கு – Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு – Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு – Yam
விளாம் பழம் – Wood apple
முள்ளங்கி – Radish / parsnip
புடலங்காய் – Snake gourd
பாகற்காய் – Bitter gourd
வெண்டைக்காய் – Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை – Peanut
வாழைக்காய் – Ash Plantain
வாழைப்பழம் – Banana
ஊறுகாய் – Pickle
உருளைக் கிழங்கு – Potato
தேங்காய் – Coconut
இளந்தேங்காய் – Tender Coconut
இளநீர் – Tender Coconut water
பதநீர்/பயினி – Neera /Palmyra juice
கள்ளு – Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு – Lime
ஆப்பச் சோடா – Baking Soda
தீப்பெட்டி – Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி – Incence Stick

Monday, November 2, 2015

வருங்கால வைப்புநிதி -

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.
வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.
இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.
தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.
இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.
பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015
குறிப்பு: பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், தங்களது பி.எஃப். இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். (தகவல் உதவி ; முகநூல் நண்பர் .Ramesh Tirupur) பதிவிட்ட முகநூல் நண்பர் திருமிகு.செல்வம் பழனிசாமி அவர்களுக்கு நன்றி.