Monday, December 5, 2016

ஜெயலலிதா-சரித்திர நாயகி..

   புத்தகங்கள் தவிர வேறெதையும் ஏறெடுத்துப்பார்க்காத  இரும்பு மங்கை .




மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். ஜெயலலிதா என்னும் சரித்திர நாயகி பற்றி காண்போம்.
              
            2013 ஜனவரி 31 ந் தேதி நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரும்,தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் கூறியதாவது...  
                சில பெண்கள் இருக்கிறார்கள் , பெரும்பாலான பெண்கள் , இளம் வயதில் தகப்பனை சார்ந்திருப்பார்கள் , பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள் , வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள் , ஆனால் என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள்
நான் யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை . யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமைய வில்லை . எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் , எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு , வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன் . இது என்னுடைய தனித் திறமை என்று நான் சொல்ல மாட்டேன் , இது விதி . தலையெழுத்து .



ஜெயலலிதா_ஒரு_இரும்பு_மனுஷி :
  நான் கட்சிகாரனல்ல ... நான் மனப்பூர்வமாக நேசிக்கும் ஒரு மனுசியை பற்றி தெரிந்ததை கூறுகிறேன் ... இதில் ஏளனப்படுத்தவோ, பகிரங்கப் படுத்தவோ ஒன்றும் இல்லை.. அவரே அவரது சொந்த வாழ்க்கை பற்றி பேட்டி தந்திருக்கிறார்.சோபன் பாபு பற்றியும் வெளிப்படையாக பேட்டி தந்திருக்கிறார்.
இதில் தவறேதும் இருக்கிறதா என்ன...எல்லா அரசியல்வாதிகள் போல மறைக்கவோ, புளுகவோ, இல்லையே., இன்று அரசியல்வாதிகள் வாழும் வாழ்க்கைக்கு அது ஒன்றும் அவ்வளவு சாக்கடை அல்ல ...
இதிலிருந்து புலப்படும் உண்மை " அவர் என்றுமே அரசியலுக்கு வரவிரும்பவே இல்லை " என்பதே...
தனக்கான, அமைதியான சந்தோசமான வாழ்வை அடையமுடியாமல் தடுத்த நயவஞ்சகர்கள் இடையே தன் வாழ்வை எப்படியாவது அமைத்துக் கொண்டு புகழ் வெளிச்சத்தில் இருந்து வெளியேறவே ஜெயலலிதா விரும்பினார்... மீண்டும் மீண்டும் அவரின் சொந்த விருப்பை பறித்து சினிமாவிலும், அரசியலிலும் அவர் தள்ளப்பட்டார்.அதனால்தான்  அவர் அரசியலிலாவது தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பி தனக்கான சரித்திரத்தைத்  தானே அமைக்கத் துவங்கினார்.. 
(இவ்வாறாக தன்னையே உருவாக்கிக்கொண்ட இன்னொருவர் ராதிகா) ..
இயல்பாக ஜெயலலிதா குடும்பம், குழந்தை என தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே விரும்பினார். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவராக வந்து நுழையவே இல்லை .. மெட்ரிக் தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா .. அவர் படிப்பை நிறுத்தி சினிமாவில் கொண்டு வந்தது அவர் தாயின் பொருளாதார நிர்ப்பந்தம் ..
பல மொழிகளைப் பேசும் வல்லமையும், தீர்க்கமான அறிவும், புத்திசாலித்தனமும் இருந்தும் அவர் நினைத்த வாழ்வை அடைய முடியாது அவரது துரதிர்ஷ்ட்டம்... .
எத்தனையோ முறை சினிமாவில் இருந்து அவர் வெளியேற முயற்சித்ததும், அது முடியாமல் மீண்டும் சினிமாவிலேயே இருக்க வைக்கபட்டார், சினிமாவில் தவிர ஒரு பொழுதும் அவர் யாருக்காகவும் நடித்ததில்லை ... கோபமாகட்டும், ஆவேசமாகட்டும், சூட்டிங் ஸ்பாட்டிலேயே கர்ஜித்து விடுவார்.. எந்த தயாரிப்பாளருக்கும் அவர் ஒரு போதும் கூழை கும்பிடும் போட்டதில்லை .. எந்த ஹீரோவுக்கும் அவர் வாய்ப்புக்காகவேனும் நயைந்து ஒரு சிரிப்பும் சிரித்ததில்லை .... எப்பேற்பட்டவரையும் "ஷட் அப் " என்று சொல்லி விட்டு போய்க்கொண்டே இருப்பார்.. படப்பிடிப்பில் தன் நடிப்பு நேரம் முடிந்ததும் புத்தகங்கள் தவிர ஏறெடுத்தும் யாரையும் கவனிக்கக்கூட மாட்டார்! என்று பலரும் கூறி கேள்விப்பட்டதுண்டு ...
அவரின் ஆசைகளோ, காதலோ, அமைதியான வாழ்வோ எல்லாமே அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன, தனிமையாக்கப் பட்டார்.. தாயும் இறந்தபின் யாருமில்லாத தனிமரமானார் .. அதற்கு பின்புதான் வேறு வழியில்லாமல், போக்கிடமில்லாமல் அரசியலி நுழைந்தார் .. சீண்டினால் பாயும் புலி என்பது அறியாமல் சீண்டியதன் விளைவே அவரின் அரசியல் அத்தியாயம்! என்பது யாவரும் அறிந்த ஒன்று ..
அவரை படுகுழியில் தள்ளியவர்கள் முன்பு பிரமாண்டமாக எழுந்து நின்றார்... அந்த கோபமே இன்றும் அடங்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.. நடிகை என்று எள்ளி நகையாடியவர்கள் முன்பு "நடிகை" என்ற அடையாளத்தையே துடைத்து எறிந்து "ஜெயலலிதா" என்று துணிச்சலாக நின்று காட்டினார்.. எப்பேர்ப்பட்ட சாதனை ....
அவரை கேவலப்படுத்திய அதே சமுதாயத்தை தலை நிமிர்ந்து பார்க்கவைத்தார், எட்டி உதைத்து துகிலுரிந்த அதே ஆண் வர்க்கத்தை "அம்மா" என்று வணங்க வைத்தார், அதே ஆண்கள் இவரை வணங்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் கடந்த கால காயங்களுக்கு மருந்தாகவே அவர் நினைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன் ... தான் துடைத்து எறிந்த காயங்களுக்கு சான்றாகவே நினைத்திருப்பார் என்றே நான் நினைப்பேன் ..
சாதிக்க இயலாது என்று நினைத்த ஒவ்வொன்றிலும் அவர் சாதித்தே காட்டினார்..  அவர் டெல்லி செல்லும்போது  திரளும் பத்திரிக்கையாளர் கூட்டமும், கோட்டை அடையும் பரபரப்பும் இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு மரியாதை.. யாரும் மிரளும் தன்மை கொண்டவராக நம் முதல்வர் இருந்ததில் பெருமையே... இதை ஜால்ரா எடுத்து கொண்டாலும்,எனக்கு கவலை இல்லை.. நான் பேசுவது ஒரு தனிப்பட்ட மனுசியை ..
நான் இன்று வரை ஜெயலலிதா அவர்களை அன்றும் - இன்றும் என்று மட்டுமே பிரித்து காண்கிறேன்.. அன்றைய ஜெயலிதாவின் இன்னல்கள் ஒரு ஆணுக்கு இருந்திருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு காணாமல் போயிருப்பான் என்பது மட்டும் நிச்சயம்.. தற்போது புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் செயல்பாடுகள் விவாதத்திற்கு உலாவுவது உண்டு... ஏன் என்றால் அன்று என்பது வரலாறு... இன்று என்பது வேற்று பேச்சு.. அவ்வளவுதான் ... இந்த வேற்றுபேச்சில் எத்தனை வரலாறு உருவாக போகிறது, என்பது திறமையின் சான்று... அதை ஜெயலலிதா நிருபித்து கொண்டே இருந்தார் ..

இந்த உலகில் யாருக்கு எந்த பட்டம் பொருத்தமோ இல்லையோ ஜெயலலிதாவிற்கு மிக பொருத்தம் "புரட்சி தலைவி " என்ற பட்டம் தங்கள் வாழ்வில் ஒருபோதும் யாரும் விரும்பியே தவறுவதில்லை.. நயவஞ்சக நரிகளை தவிர... அவ்வாறான கருத்து நோக்கத்தில் பார்க்கும்போது ஜெயலலிதா ஒரு பெண் புலியே!,இரும்பு மனுஷியே!! 
என அன்பன்,
செ.பரமேஸ்வரன், 9585600733
செயலாளர்,
விதைகள் வாசகர் வட்டம்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
 சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.

Saturday, December 3, 2016

மின்னணு பண பரிவர்த்தனை


 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.டிஜிட்டல் கரன்சி என்னும் மின்னணு பண பரிவர்த்தனை எங்கெங்கு நடைபெற்றால் நமக்கு நல்லது என்பதைப்பற்றி ஒரு ஆலோசனை உங்களுக்காக...நமது நாட்டில் உயர் மதிப்புக்கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்த பிறகு ஆங்காங்கே பலரிடமும் பல்வேறு ஆலோசனைகள் வந்துகொண்டே இருக்கின்றன.அவற்றில் ஒன்று இதோ.....
Digital currency எங்கு எங்கெல்லாம் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்...
ஆனா நீங்க இங்கயெல்லாம் கொண்டு வர மாட்டிங்க.???
இன்றைக்கு , SBI அதிகாரிகள் சிலர் மயிலாப்பூரில் தெருவோர கடைக்காரர்களிடம் சென்று பிரசாரம் செய்தார்களாம் அந்த seen போடுற வேலையை எல்லாம் விட்டு விட்டு எங்கே அதை கட்டாயம் ஆக்க வேண்டும் ?
digital currency முதலில் அமல்படுத்த வேண்டிய இடம் , sub-register office ,RTO office,all govt offices including thasildhar office and collector office, மொத்தமாக-அனைத்து அரசு அலுவலகங்கள் இங்கே ரொக்க பரிவர்த்தனையே கிடையாது என்று ஆக்கட்டும் , அங்கே ரொக்க பணம் ஒரு ரூபாய் இருந்தாலும் , அவர்கள் கொண்டு வருபவர்கள் அல்லது பணியாற்றும் நபர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படட்டும் .
---
digital currency காட்டாயம் ஆக்க பட வேண்டிய இடம் , அனைத்து மத, சாதி , கலாச்சார அறக்கட்டளையின் வங்கி கணக்குகள், கோவில்களின் digital hundi's
---
அனைத்து தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அரசே இடங்களை நிரப்பும் என்று admission நிர்வாகத்தை மட்டும்அ ரசு கையில் எடுத்து கொண்டு அதை digital currency வழியே பணி செய்யும் என்றால் பாராட்டலாம்
---
digital currency கட்டாயம் ஆக்கப் பட வேண்டிய இடம் அனைத்து தனியார் மருத்துவமனைகளில்
---
digital currency கட்டாயம் ஆக்கப்படவேண்டிய முக்கிய இடம் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் self Air ticket booking system not through any agents
---
digital currency கட்டாயமாக்கப் பட வேண்டிய இடம் அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகள், அனைத்து அரசியல்வாதிகள், MLA,MP, அமைச்சர்கள் , அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் நிர்வகிக்கும் அவர்களின் சொந்த தொழில்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை கண்காணித்து அதிலும் digital currency மூலம் மட்டுமே பரிவர்த்தனை வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் .
---
digital currency கட்டாயமக்கப் பட்டு , 50,000 க்கு மேல் யார் காசை கையில் வைத்திருந்தாலும் சிறை என்று சொல்லட்டும் வரவேற்போம் .
---
digital currency மிக கட்டாயம் என்று இருக்க வேண்டிய இடங்கள் அனைத்து சம்பள நடவடிக்கைகள் .
---
digital currency கட்டாயம் இருக்க வேண்டிய இடங்கள்
அனைத்து அரசு ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அவரை சார்ந்த அனைவரின் வங்கி கணக்குகள்.
---
கலைத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும், மற்றும் அந்த பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் , ஒரு திட்டம் (ஒரு project ) இல் ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதில் இருந்து மட்டுமே digital currency மூலம் பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் . இதை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சிறை என்பதை கட்டாயம் ஆக்க வேண்டும்.
---
தேர்தல் நடக்கும் தொகுதியில் , முழுவதும் தேர்தல் முடியும் வரை , ஐம்பது ரூபாய்க்கு மேல் கையில் யாரிடமும் , அது அரசியல்வாதியாக இருந்தாலும் சரி வாக்காளராக இருந்தாலும் சரி , காசு இருந்தாலும் சிறை தண்டனை , எந்த பரிவர்த்தனையும் digital currency மூலம் மட்டுமே என்பதை உறுதி செய்யட்டும் .
---
நீதி துறையில் அனைத்து நடவடிக்கைகளும் , வக்கீல்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் digital currency முறை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் .என்று திரு.
பெருமாள்சாமி சுப்புராஜ் அவர்கள் பதிவிட்டுள்ளார்.நல்ல விசயம்தானே! நாமும் வரவேற்போம்.....


                       கூடுதலாக மின்னணு பயன்பாடு பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள இணைய வழி தகவலை தங்களுக்காக பதிவிடுகிறேன்.படித்து பயனடையுங்க..
                  ( CALCULATER ):கால்குலேட்டர்களை கணக்குப்போடுவதற்கு மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பல்வேறு பயன்பாட்டுக்கும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். சமையலில் எந்தப் பொருளை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை அளந்து பார்க்க கிச்சன் கால்குலேட்டரை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தனது உடல் எடைக்கு ஏற்ப எவ்வளவு சாக்லெட் சாப்பிடலாம் என்று பார்க்க சாக்லேட் கால்குலேட்டர் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மிகுந்திருக்கிறதா? என்பதை கவனிக்க கார்பன் கால்குலேட்டர் இருக்கிறது. மருந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு சரியான அளவில் மருந்து சாப்பிட உதவும் `ஆர்கிமெடிஸ்` கால்குலேட்டர்கள் இருக்கின்றன.
                   ( CREDIT CARD) :கிரெடிட் கார்டை விட வேகமாகவும், பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய டிஜிட்டல் வாலட் உதவுகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரெடரிக் பாம்பிளாட், `வாலட்` கருவியை வடிவமைத்தார். இது கடிகார வடிவிலான சிப். இதை கணினியுடன் இணைத்து யாருக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விவரத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். பிறகு சம்பந்தப்பட்ட இருவரது வாலட் கருவிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, கருவியின் மேல்புறம் உள்ள திரையில் கொடுப்பவரும், பெறுபவரும் கைரேகையைப் பதிவு செய்தால் இருவர் கணக்கிலும் பணப்பரிமாற்றம் பாதுகாப்பாக நடந்து விடும். ஏமாற்றத்துக்கு வழியே இல்லை.
                       ( CREDIT CARD ALARM:) கிரெடிட் கார்டின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் அது நிறைய சிக்கல்களையும் வரவழைக்கலாம். கார்டை தொலைத்துவிட்டால் எடுப்பவர் தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைத் தடுக்க `கிரெடிட்கார்டு அலாரம்` இருக்கிறது. கார்டை, பாதுகாப்பாக வைக்க உதவும் இந்த சிறு பெட்டி, கார்டை எடுத்த 20 விநாடிகளுக்குள் திரும்ப வைக்காவிட்டால் ஒலியெழுப்பும். இதனால் கார்டு பாக்கெட்டில் இல்லை என்பதை உணர்ந்து உஷாராகி விடலாம். அதேபோல கிரெடிட் கார்டு பயன்பாட்டின்போது ரகசியம் கசியாமல் பணப்பரிமாற்றம் நடக்க `ஸ்மார்ட் ஸ்வைப் மிஷின்` உதவுகிறது.
                     (ATM :) ஏ.டி.எம். உண்டியல் ஒன்று இருக்கிறது. காயின் பாக்ஸ் டெலிபோன் போல இருக்கும் இவை வீட்டிலேயே பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டவை. இதில் பணம் மற்றும் சில்லறைகளை போடலாம். அதிகபட்சம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்து பதிவு செய்து விடலாம். இதற்காக ஒரு ஏ.டி.எம். கார்டு தந்திருப்பார்கள். சேமிக்கும்போது திடீரென்று பணம் தேவைப்பட்டால் இந்த கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கலாம். எவ்வளவு எடுத்திருக்கிறோம், எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதும் தெரியும். குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தவும், வங்கிப் பயிற்சியை எளிதாக கற்கவும் ஊக்குவிக்கிறது இந்த நவீன உண்டியல்! 
                 ( SECURITY: ) கிரெடிட் கார்டில் செக்யூரிட்டி நம்பர் பதிந்து வைத்திருப்பார்கள். பின் நம்பரை பயன்படுத்தி நாம் உபயோகப்படுத்துவோம். இது தவறான நபர்களின் கையில் கிடைக்கும்போது சிக்கலை உருவாக்கி விடும். இந்த பிரச்சினையை தவிர்க்க `டிஜிட்டல் டிஸ்பிளே கிரெடிட் கார்டு’ இருக்கிறது. இதில் செக்யூரிட்டி நம்பரையும், பின் நம்பரையும் நாமே தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் அத்தனை கார்டுகளையும் ஒன்றிணைத்து பயன்படுத்தலாம். அனைத்து கார்டுகளின் தகவல்களையும் சேமித்து விட்டு, ஓரமாக இருக்கும் `நாப்’ மூலம் தேவையான கார்டை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
                 (DIGITAL COUNTING JAR:) ரூபாய் நோட்டுகள் அதிகமானால் கூட சிரமப்பட்டு எண்ணி விடலாம். ஆனால் சில்லறைகள் சேர்ந்து விட்டால் எண்ணும் முன்பாக தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். `டிஜிட்டல் கவுண்டிங் ஜார்` இந்த பிரச்சினையை தீர்க்கிறது. சாதாரண உண்டியலை விட கூடுதலாக இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டர் இருக்கிறது. இது உண்டியல் துளை வழியே காசுபோடும்போது அது தானாகவே கணக்கிட்டு திரையில் இருப்புத் தொகையைக் காட்டி விடும். தேவைப்பட்டால் பணத்தை எடுத்துவிட்டு `ரீசெட்` செய்து சேமிக்கலாம். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை. இந்த ஜார், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிடும்.
                (ROBO CALCULATER:) சிறிய அளவிலான ரோபோ கால்குலேட்டர்கள், அநேக வேலைகளை தானே கணக்குப் போட்டு செய்து முடிக்கிறது. `ரிசிப்ட் ஸ்கேனர் கால்குலேட்டர்` என்ற நவீன கால்குலேட்டர் கருவி, கையால் எழுதும் கணக்குகளை ஸ்கேன் செய்து கணக்குப் பார்க்க உதவுகிறது. வங்கிக் கணக்கு, மளிகைச்சரக்கு பில் என அனைத்தையும் ஸ்கேன் செய்து கணக்குப் போட பயன்படுத்தலாம். ஏ.டி.எம். மிஷின்போல தங்கக் காசுகளை வழங்கும் கோல்டு ஏ.டி.எம்.கள் இருக்கின்றன. தாமஸ் இஸ்லர் என்ற ஜெர்மானியர் அபுதாபி தங்க மார்க்கெட்டில், கோல்டு ஏ.டி.எம்.-ஐ வடிவமைத்து பயன்பாட்டில் வைத்தார். இது அன்றைய கரன்சி மதிப்பிற்கு ஏற்ப 1, 5, 10 கிராம் தங்க காசுகளை வழங்கும். 
(COUNTING RING: )பணம் எண்ணும் இயந்திரத்தை வங்கிகளிலும், அலுவலகங்களிலும் பார்த்திருப்பீர்கள். அது அலுவலக உபயோகத்துக்கு வசதியானது தான். ஆனால் கைகளில் எப்போதாவது பணம் வந்துபோகும் தனிநபருக்கு அந்த எந்திரம் உபயோகப்படாது. தனிநபரும் வசதியாக பணம் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டது தான் `கவுன்டிங் ரிங்`. மோதிரம் போல இருக்கும் இதை கட்டைவிரலில் மாட்டிக்கொண்டு, பணக்கட்டின் மீது வைத்து மெல்ல மேலிருந்து, கீழாக நகர்த்தினால் எத்தனை நோட்டுகள் இருக்கின்றன என்று எண்ணிவிடும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது செயல்படுகிறது. *** 


                (ATM STORY:) ஏ.டி.எம். மெஷின் கண்டுபிடிக்கப்பட்ட கதை கொஞ்சம் சுவாரசியமானது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்டு பாரோன் தன் மனைவிக்கு பரிசு வழங்க நினைத்தார். அதற்காக பணம் எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். அவரது முறை வந்தபோது நேரம் முடிந்துவிட்டதாக கவுண்டரை மூடிவிட்டனர். வெறுங்கையோடு செல்ல விரும்பாத அவர் வென்டிங் மெஷின் மூலம் கொஞ்சம் சாக்லெட் வாங்கிக்கொண்டு மனைவியை சந்தித்தார். பரிசளிக்க முடியாத அதிருப்தியும், வென்டிங்மெஷினும் அவரது நினைவைக் குழப்ப, புதிய எண்ணம் உதயமானது. பிறகு ஜான், ஏ.டி.எம். மெஷினை உருவாக்கினார்.

                               இந்த ஜீடிபி, தங்க இருப்பு, எக்ஸ்சேஞ்ச் ரேட், சென்செக்ஸ்... இதெல்லாம் இந்தியாவில் முக்கால்வாசி மக்களுக்கு இன்னும் என்ன ஏதுன்னே தெரியாது.
                       மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு இன்னும் வங்கிக் கணக்கு இல்லை, என்ற நிலையில் இருக்கும் இந்தியாவில் இவ்வளவு அதிவேகமாக ரொக்கப் பரிவர்த்தனைக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களும் முனைப்புகளும் எதற்காக? யாருக்காக?

                    விவசாயக்கூலி ஒருவர் , 100 அல்லது, 200 ரூபாய்   பெறுகிற ஒருவர், அதை வங்கிவழியாகவே பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உள்ளுர் பெட்டிக்கடையில் அல்லது மளிகைக் கடையில் அரிசியும், மளிகை சாமான்களும் 60 ருபாய்க்கு அன்றைய தேவைக்கு வாங்குவார். எதிர்த்த வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் இருந்து 15 ருபாய்க்கு முருங்கைக்காய் வாங்குவார். தெருவில் மீன்காரரிடம் 30 ருபாய்க்கு மீன் வாங்குவார். பூக்காரரிடம் 10 ருவாய்க்கோ, 20 ருபாய்க்கோ பூ வாங்குவார். தள்ளுவண்டியில் வளையல், பொட்டு ஃபேன்சி பொருள்கள் கொண்டு வருபவரிடம் 30 ருபாய்க்கு ஸ்டிக்கர் பொட்டு, கம்மல் வாங்குவார்... இத்தனையையும் வாங்குபவர்களும் அதற்கு பணம் பெற்றுக் கொள்பவர்களும் ரொக்கமில்லாத பரிமாற்றம் செய்வதைப் பற்றி யோசித்து பாருங்கள்.
                    வலுக்கட்டாயமாக இந்த டிஜிட்டல் புரட்சியை, செய்வதால் யாருக்கு லாபமும், லாப விகிதமும் அதிகமாக போய்ச்சேரும் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
                 கறுப்பு பணமும், கள்ள பணமும் வச்சிருக்கிறவங்களை பிடிக்கிறோம்னு பெயர் சொல்லிட்டு, இது இந்தியாவின் முதுகெலும்பு என்று காலம்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கும் கிராமங்களுக்கும் கிராம மக்களுக்கும் எதிரான செயல் தான். கருப்பு பணத்தையும் கள்ள பணத்தையும் பிடிக்க ஆயிரம் வழிகளும், சட்ட திட்டங்களும் அமைப்பும் இருக்கும்போது, இந்த வழி எதற்கு என்பது முற்றிலும் புரியாத ஒன்று தான்.

Monday, November 21, 2016

தேனீக்கள் மட்டும்


                      தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
இனிக்கும் செய்தியல்ல!
தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன். உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.
தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.
பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.
கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!
இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்
சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''
''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''
''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.
இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....

Saturday, September 24, 2016

ஜோதிடம் கற்க: ஜோதிடம்: அடிப்படை - பகுதி3

ஜோதிடம் கற்க: ஜோதிடம்: அடிப்படை - பகுதி3: ஜோதிடம்: அடிப்படை -  பகுதி 2 ன் தொடர்ச்சி 1.33 பஞ்சாங்கம் என்றால் என்ன ? பஞ்சாங்கம்னா ஐந்து   அங்கங்கள்னு அர்த்தம். அந்த ஐந்...

ஜோதிடம் கற்க: ஜோதிடம்: அடிப்படை - பகுதி 2

ஜோதிடம் கற்க: ஜோதிடம்: அடிப்படை - பகுதி 2: ஜோதிடம்: அடிப்படை -  பகுதி 1 ன் தொடர்ச்சி   1.14 கேந்திர , திரி கோண , மறைவு வீடுகள் ஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்...

ஜோதிடம் கற்க: ஜோதிடத்தின் அடிப்படை - பகுதி 1

ஜோதிடம் கற்க: ஜோதிடத்தின் அடிப்படை - பகுதி 1: ஜோ திடம்   என்றால   என்ன ? ஜோதிடம்   என்பது ,   வானமண்டலத்தில்   உள்ள   கிரகங்களின்   கதிர்கள்   மனித   வாழ்வை   எப்படி   நிர்ணயிக்...

Thursday, September 22, 2016

ஓட்டுநர் தினவிழா-

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.ஓட்டுநர் தினவிழா -2014  ஜூன் மாதம் முதல் சத்தியமங்கலத்தில் ..


   சாரதிகளே வாங்க - சத்தியமங்கலத்திலே சங்கமிப்போம்
 ஜூன்மாதம் தாங்க - சாரதிகளே வாங்க
சாலைக்கு ஒருவிழா - ஜனவரி மாதம் வாரவிழா
சாரதிகளுக்கு தனிவிழா - ஜூன் மாதம் தினவிழா
நாட்டுக்காக உழைக்கிறோம் - நமது பெருமை உணர்ந்திடுவோம்.
ஊருக்காக உழைக்கிறோம் - உயர்ந்த மதிப்பை பெற்றிடுவோம்.

சாலைப் பயணமே வாழ்க்கையென்று -சமூகத்தொடர்பை குறைத்திட்டோம்.
சர்வ காலமும் ஓட்டுகிறோம் -  சம்சாரத் தொடர்பும் குறைத்திட்டோம்.
எப்படியோ வாழ்கிறோம்? என்ற நிலையை விட்டுவிட்டு
 இப்படித்தான் வாழ்வோம்! என இனியாவது சிந்திப்போம்.
நமது செக்குமாட்டு வாழ்வதனை, சற்றே திரும்பி பார்த்திடுவோம்
நம்ம சத்தியமங்கலத்திலே சங்கமிப்போம்,  ஜூன்மாதம் சந்திப்போம்

காலை முதல் மாலைவரை ,மாலைமுதல் காலைவரை
சமுதாயத் தேவைகளுக்கு சாலைப் பயணமே அடிப்படை
சாலைப் பயணத்தில் சிக்கல்களோ ஏராளம்
சாரதிகள் எதிர்கொள்ளும் தொல்லைகளும் ஏராளம்

       கப்பலுக்கும் விமானத்திற்கும் தனிவழி
         ரயிலுக்குக்கூட தனிவழி
 சாலைப் பயணத்திற்கோ பொதுவழி
சகிப்பதைத் தவிர வேறு வழி?

  சாலையில் பாதுகாப்பு -
சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு
விபத்தென்று நேர்ந்துவிட்டால்
சாரதிகளுக்கே பொல்லாப்பு

சாரதிகளே சிந்திப்போம்
சத்தியமங்கலத்திலே சந்திப்போம்
பாகுபாடின்றி சேர்ந்திடுவோம்
பொதுப்பிரச்சினையை ஆராய்வோம்

நாட்டிற்கு உயிரோட்டம்
வாகன ஓட்டமே முக்கியம்
பொருட்களும், பயணிகளும் போக வர
பொதுச்சாலையே முக்கியம்
அவசர,அவசியத் தேவைகளுக்கு
அன்றாடத் தேவைகளுக்கு
அனைத்து வாகனங்களையும் ஓட்டும் நாம்
அல்லல்படுவது ஏனோ?
வாகனங்கள் பலவிதம்
ஆட்டோ,கார்,லாரிகளோடு
டெம்போ,டேங்கர்,பேருந்தும் சேர்ந்து
பைக்,ஆம்புலன்ஸ்,அவசரவாகனம் என
வாகனங்கள் பலவிதம் - சாலையில்
செல்லும் வேகமும் பலவிதம்
வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப
சாலைகள் பெருகவில்லையே
சகிப்புத்தன்மை வளர்த்திடுவோம்
சங்கடங்களைத் தவிர்த்திடுவோம்
சாரதிகளே வாங்க- சத்தியிலே சந்திப்போம்
சமுதாயப் பிரச்சினையாகிவிட்ட
சாலைப் பயணச் சிக்கல்களை
சத்தியிலே தொகுத்திடுவோம்
சகலருக்கும் தெரிவிப்போம்
எல்லாப் பணிகளுக்கும் எல்லை உண்டு
எந்த சிக்கலையும் சமாளிக்கலாம்
வாகனம் ஓட்டும் பணியிலே, எல்லை ஏதும் இல்லையே
எல்லையில்லாப் பணியிலே, தொல்லை மிகுந்த பணியிலே
எந்த சிக்கலை சமாளிப்பது?

உலகமே உறங்கும்போது விழித்திருந்து ஓட்டுகிறோம்
உண்டு உண்டு எதிர்காலம்! நமக்கும் உண்டு என்றெண்ணி
ஒன்று கூடுவோம் சாரதிகளே நம்ம
சத்தியமங்கலத்திற்கு வாங்க .

        சிபிசாரதி.......(சி.பரமேஸ்வரன் - ஓட்டுநர்)


Sunday, August 28, 2016

வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ...

#வாட்ஸ்அப்_பயன்படுத்தும்_நண்பர்களின்_கவனத்திற்கும் !
வாட்ஸ்அப் நாம் install செய்யும் போது Agree terms and conditions என்பதை கிளிக் செய்தால் தான் நாம் மேலும் தொடர முடியும். அன்மையில் புதிய வாட்ஸ்அப் டவுன்லோடு செய்து அதன் TERM AND CONDITIONS ஒப்புக்கொண்டிருந்தால், அது தானாகவே Facebook உடன் இனைக்கப்படுகிறது. நமது தகவல்களும் கடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை தடுக்க......
வாட்ஸ்அப் settings போய் accountsல் share my info என்பதற்கு அருகில் இருக்கும் டிக் uncheck செய்யவும்.
இது நம் தனிநபர் தகவல்கள் களவு போகாமல் காக்கும்.
#நன்றி

Saturday, August 6, 2016

ஓட்டுநரின் நிலை

எங்க பொளப்பு இப்படி தாங்க
போகுது...
ஓட்டுனர்(டிரைவர்)
நெத்தியில பொட்டு,
கழுத்துல நீளமான துண்டு,
அனைவரையும் கவர
கோல்டுல செயினு,
தப்பு னு தெரிஞ்சும் காக்கிசட்டை
போடாமல் வண்டியை ஓட்டுவது,
காக்கிசட்டை போட்டுருந்தாலும்
எங்க மீது பொய் வழக்கு போடும்
போஸீஸ்,
எங்க உயிரை பெரிதும் மதிக்காமல்
எங்களை நம்பி வந்தவர்களை
பாதுகாப்பாக இறக்குவது,
வழியில் எத்தனை விபத்துகளை
பார்த்தாலும்,
நாம் இந்த தொழிலை விட்டு போக கூடாது ன்னு என்னுவது,
பயணத்தில் தூக்கம் வராமல்
இருக்க,
தவறு என்று தெரிந்தும் போதை பொருள் பயன் படுத்துவது,
மணிக்கு ஒரு முறை இரவில்
டீ குடிப்பது,
வெளியில் எப்படி இருந்தாலும்
ஓட்டுனர் சீட்டில் உக்கந்த உடன்
தனக்கென ஒரு பாணியை வகுத்து கொள்வது (கெத்து)..
யாதர்த்தமான பார்வையில்
அனைவரையும் கவருவது,
வழியில் எந்த ஒரு பிரச்சனை
என்றாலும் தானாக தீர்த்துக்கொள்வது..
ஆயிரம் வழக்குகள் எங்க மீது
இருந்தாலும் அசால்ட்டாக
இருப்பது,
ஒரு பொருளை எங்களை நம்பி
ஏத்தி விட்டால் தான் பொருள் போல் மதித்து பாதுகாப்பாக
கொண்டு சேர்ப்பது,
சம்பளம் கட்டுதோ இல்லையோ
இந்த தொழிலை விட கூடாது
என்று நினைப்பது,
நாங்கள் வீட்டை விட்டு சென்றால் வீட்டுக்கு வந்தால் தான்
நாம் என இருந்தாலும்,
இதை ஏற்று நம்மளை
இத்தொழிலுக்கு அனுப்புவது
தாய் தந்தையின் ‪#‎நம்பிக்கையே‬...

Monday, August 1, 2016

பசி இருந்தால் புசிக்கலாம்.

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி *"பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.*
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

Thursday, July 21, 2016

நீதிமன்றத்தில் பயன்படுத்தும் ஆங்கிலச்சொற்களின் தமிழாக்கம்.


மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். பரமேஸ் டிரைவர் பதிவிடுவது.
நீதிமன்றத்தில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தையின் தமிழ் ஆக்கம் இதோ தங்களது கவனத்திற்காக..உதவிய முகநூல் நண்பர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.
>உயர்நீதிமன்றம் - High Court
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court
அமர்வு நீதிமன்றம் - Sessions Court
உரிமையியல் வழக்குகள் - Civil Cases
குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant
வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
கட்சிக்காரர் - Client
சங்கதி - Fact
மறு விசாரனை - Re Examination
ஆபத்தான கேள்வி - Risky Question
தடாலடி பதில் - Fatal Reply
குறுக்கு விசாரனை - Cross Examination
உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
குற்றவாளி - Offender
குற்றச்சாட்டு - Charge
மெய்ப்பிப்பு - Proof
சொத்து - Property
குற்றம் - Offense
கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
திருட்டு வழக்கு - Theft Case
திருட்டுப் பொருள் - Stolen Property
பைத்தியம் - Insanity
சான்றொப்பம் - Attestation
சச்சரவு - Affray
தீர்ப்பு - Sentence
அவசரத்தன்மை மனு - Emergent Petition
கீழமை நீதிமன்றம் - Lower court
பரிகாரம் - Remedy
உறுத்துக் கட்டளை - Injection Order
நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
வழக்கின் மதிப்பு - Suit Valuation
வழக்குரை - Plaint
வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
பண வழக்கு - Money Suit
அவதூறு வழக்கு - Defamation Suit
வறியவர் வழக்கு - Pauper Suit
எதிர்வுரை - Counter
எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
மேல்முறையீடு -Appeal
வரைமொழி வாதுரை - Written Argument
குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
கோருரிமை மனு - Claim Petition
தடை நீக்கம் - Removal of obstruction
வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
எதிர் மேல்முறையீடு - Cross Appeal
எதிர் மறுப்பு - Cross-objection
வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons
நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
ஒத்தி வைத்தல் - Adjournment
சாட்சி - Witness

Tuesday, April 5, 2016

சாலையில் கவனம் சகலருக்கும் அவசியம்.





சிந்தியுங்க!
                     சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

09 மார்ச் 2016 தேதியன்று கோபிசெட்டிபாளையத்தில்  பயணிகள் ஆட்டோவில் பயணித்தபோது சந்தித்த விபத்து.....



 
 மறுநாள் தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில்  வெளிவந்த செய்தி.
 
மரியாதைக்குரியவர்களே,
                 அனைவருக்கும் வணக்கம். 
           கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
 


சரி...
        விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் ஓட்டி பொதுச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் கடந்த பிறகும்  வாகனங்களின் போக்குவரத்து தொடர்கிறதா? என கவனிக்கத் தவறியது. 

(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் தொடர்ந்து  வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)

           இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும்
 
                   சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது. 
 
        இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன், பணிக்கு செல்லமுடியாமலும்,உடல்வலி,மன வேதனை,எனக்கு தலைக்காயம் மற்றும் தலையில் மொக்கை அடி,இடுப்பில் மொக்கை அடி,வலது கை ஆட்டோவின் அடியில் சிக்கி மொக்க அடி இவ்வாறாக அடிபட்ட நான் முதலில்  கோபி அபி Ortho மருத்துவமனை, பிறகு பவானி லோகநாதன் Ortho மருத்துவமனை,சத்தி பேருந்து நிலையம் எதிரிலுள்ள செல்வக்குமார் Ortho மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை ஒரு மாதகாலமாகப் பெற்றும் இதனால் காலவிரயம்,செலவுகளால் பொருளாதாரம் இழப்பு,எனது குடும்பத்தார் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் நேர இழப்பும்,வேதனையும் ஏற்பட்டுள்ளன.சமூகப்பணியும் தடைபட்டு விட்டன.
  என் உறவினருக்கு இருபக்க தோள்பட்டை காரை எழும்புகளும் உடைந்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கைகளை அசைக்கமுடியாமல் படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். அடிபட்ட சைக்கிளோட்டி இறந்துவிட்டதாக தகவல்.


               நாங்கள் பயணித்தது பயணிகள் ஆட்டோ அதுவும் பயணிகளான நாங்கள் மூன்று பேர் மட்டுமே.நேரான பொதுச்சாலையில் அதிகாலையில் 5.45மணியளவில் போக்குவரத்து நெரிசலே இல்லாத நேரத்தில் பயணிக்கும்போது  அதுவும் பயணிக்கவேண்டிய  இரண்டு கிலோமீட்டர் மொத்த தூரத்திற்கு பொதுவாக அனைவரும் செல்லும் வேகத்தில் ஆட்டோவும் சென்றது இயல்பானதுதாங்க.சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

  கணப்பொழுதில் சைக்கிள்மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் அமைந்திருந்த கறிக்கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு டி.வி.எஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி ?!?!?!?!??!?!??!?!!?........மிக மோசமான விபத்தாக நிகழ்ந்தது.எங்களுக்கு உதவி செய்த  அந்த கறிக்கடை உரிமையாளர் (ஞாயிற்றுக்கிழமையல்லவா!) மற்றும்  கறிக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்களுக்குத்தாங்க தெரியும் அந்த விபத்தின் கொடுமை பற்றி.......
 
 
2016எப்ரல் 6 ந் தேதி இன்று உடல் தேறியுள்ளதால் பணிக்கு செல்கிறேன்.
 
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டு என் மீது அக்கறைகொண்டுமுகநூல் தளத்திலும்,தொலைபேசியிலும்,நேரிலும் உடல் நலம் விசாரித்தும்,நான் பூரண நலமடையவேண்டி பிரார்த்தனை செய்தும் எனக்காக தங்கள் நேரத்தையும்,எண்ணங்களையும்,நோக்கங்களையும் செலவிட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,என் வாழ்நாள் நன்றிங்க...
என்றும் சமூக நலப்பணியில்,
 அன்பன், 
C.பரமேஸ்வரன், 9585600733  paramesdriver@gmail.com
அரசுப்பேருந்து ஓட்டுநர், 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,
தாளவாடி கிளை,
 ஈரோடு மண்டலம்.
 
 
 
     

Saturday, January 9, 2016

சாலை பாதுகாப்பு கல்வி - சாலை பற்றிய அறிவு - 01

                              ROAD SAFETY EDUCATIONAL IN TAMIL.-01
    
மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சாலை பாதுகாப்பு கருதி அன்பன் பரமேஸ் டிரைவர் சத்தியமங்கலத்திலிருந்து உங்களுக்காக எழுதுவது......
           நாம் உயிர்வாழ்வதற்கான அனைத்து தேவைகளையும் போக்குவரத்து மூலமாகவே நிறைவேற்றி வருகிறோம்.குறிப்பாக சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.  சக்கரமும் சாலையும் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன.நடந்துசெல்வது தொடங்கி இரு சக்கர வாகனங்கள் முதல் பல சக்கர வாகனங்கள்வரை பலரும் பல வடிவங்களிலும் பல்வேறு வேகங்களிலும் வாகனங்களை ஓட்டிக் கொண்டோ,வாகனங்களில் பயணம் செய்துகொண்டோ இருக்கிறோம்.
        சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,பொருட்களை எடுத்துச்செல்பவர்களாக,வாகனம் ஓட்டுபவர்களாக போக்குவரத்து செய்கிறோம்.  நமது பாதுகாப்பிற்காகவே சாலைவிதிகளும்,மோட்டார் வாகன சட்டங்களும்,காவல்துறைசட்டங்களில் சிலவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியாமல் பயணத்தின்போது சாலைவிதிகள் மற்றும் சாலை பற்றிய அறிவு இல்லாமலும்,வாகனங்கள் பற்றிய அறிவு இல்லாமலும் பயணிப்பது எப்படி என்றுகூடத்தெரியாமலும் சாலையில் போக்குவரத்து செய்து விபத்துக்கு காரணமாகிறோம்.

  விபத்து ஏற்படும்போது கொடுங்காயம்,நிரந்தர ஊனம்,உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.மோதிய வாகனங்கள் சேதம்,ஏற்றிவந்த பொருட்கள் சேதம் போன்ற இழப்புகளும் ஏற்படுகின்றன.அவ்வழியே போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டு  அந்த சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் மன உளைச்சல்,தேவைகள் இழப்புடன்,நேர இழப்பும் ஏற்படுகின்றன.
  விபத்தில் சிக்குண்ட நமக்கு வருமான இழப்புடன்,பொருளாதார இழப்பும் ஏற்பட்டு நம் குடும்பத்தாருக்கும் நம்பியுள்ளவர்களுக்கும் மன உளைச்சல் மற்றும்  உடல் வேதனையோடு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது.அத்துடன் காவல்துறை,போக்குவரத்துத்துறை,மீட்பு பணித்துறை,மருத்துவத்துறை,சட்டத்துறை,காப்பீட்டுத்துறை, போன்ற சம்பந்தப்படவர்களுக்கு வேலைப்பளுவும் ஏற்படுகிறது.

        அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துக்களை வேடிக்கை பார்க்கிறோமே தவிர விபத்தில் சிக்குண்டவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையோ,இழப்புகளையோ,விபத்துக்கான காரணங்களையோ,விபத்தை தவிர்ப்பதற்கான செயல்பாடுகளையோ  சிந்தனை கூட செய்வது இல்லை.   ( parameswaran driver)
'சாலை பாதுகாப்பு  நம் உயிர் பாதுகாப்பு'மட்டுமின்றி  'சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு'.ஆதலால்  போக்குவரத்து அவசியமாகிவிட்ட இன்றைய சூழலில் சாலை பாதுகாப்பு கல்வி அனைவரும் பெறுவது அவசியம்.ஆதலால் பாதுகாப்பான பயணத்திற்கு சாலைவிதிகள் பற்றியும்,மோட்டார் வாகன சட்டங்கள் பற்றியும் கற்போம்.
(1) சாலை அறிவு (2)பயணப்பாதுகாப்பு (3)வாகன அறிவு (4)மோட்டார் வாகன சட்டங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

(1) சாலை பற்றிய அறிவு................. 
        சாலைகள் நமது நாட்டின் நிலப்பரப்பிற்கேற்ப சரிவுகளாகவோ,மேடு பள்ளமாகவோ,வளைவுகளாகவோ,குறுகிய பாதைகளாகவோ, கிளைச்சாலைகள் மற்றும் பிரதானச்சாலைகள் சந்திப்புகளாகவோ,அமைந்துள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துக் குறைவுக்கேற்ப பராமரிப்பு குறைவாக பழுதடைந்தோ உள்ளன.
                    சாலைகளை, நகர்ப்புறச் சாலைகள் என்றும்,கிராமப்புறச் சாலைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 (1)நகர்ப்புறச் சாலைகளை, வீதி,பிரதான சாலை,நேர்ச்சாலை,ஆர்டீரியல் சாலை , எனவும், 
   (2)கிராமப்புறச் சாலைகளை, விரைவுச்சாலைகள்,தேசிய நெடுஞ்சாலைகள்,பெரிய மாவட்டச்சாலைகள்,மற்ற மாவட்ட சாலைகள்,கிராமச்சாலைகள் எனவும் பலவகைப்படுத்தலாம்.

 நகர்ப்புறச்சாலைகள்,
 வீதி.
       பொதுமக்கள் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பாதையாகும்.வீதிகள்  நகரின் பிரதானச்சாலைக்கு செல்ல பயன்படுகின்றன. 

பிரதானச்சாலை.
    இது நகரத்தின் பல பகுதிகளில் முக்கிய போக்குவரத்தை எடுத்துச்செல்கிறது.

நேர்ச்சாலை.
    நகரத்தின் பல பகுதிகளிலிருந்து நகரத்தின் மையத்திற்குப் போக்குவரத்தை நேராக எடுத்துச் செல்லும் சாலையாகும்.

ஆர்டீரியல் சாலை.

        இது நகரத்தின் மிகவும் முக்கியமான சாலையாகும். கிராமப்புறச்சாலைகள்  நகரத்தினுள் நுழையும் போது ஆர்டீரியல் சாலைகளாக மாறிவிடும்.

கிராமப்புறச் சாலைகள்,
 விரைவுச்சாலைகள்,
    விரைவுச்சாலைகளை  தங்க நாற்கரச் சாலைகள் என்றும் கூறப்படுகிறது.
 மத்திய அரசால் பராமரிக்கப்படுகிறது.நான்கு முதல்  ஆறு தடச்சாலைகளாக பயன்படுத்தப்படுகிறது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் துரிதப்போக்குவரத்துக்காக விரைவுச்சாலைகள் போடப்படுகின்றன.கி.மீ.கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.
  
தேசிய நெடுஞ்சாலைகள்,
           தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு பராமரிக்கிறது.இரண்டு தடம் முதல் நான்கு தடச்சாலைகளாக பராமரிக்கப்படுகிறது.விரைவான போக்குவரத்திற்கு பயன்படுகிறது.மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.

மாநில நெடுஞ்சாலைகள்,
             மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோமீட்டர் கற்களில் பச்சை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

பெரிய மாவட்டச்சாலைகள்,
          பெரிய மாவட்டச்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோ மீட்டர் கற்களில் நீல வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

மற்ற மாவட்டச்சாலைகள்,
           மற்ற மாவட்டச்சாலைகளை மாநில அரசின் உதவியுடன் பஞ்சாயத்து யூனியன் பராமரிக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

கிராமச்சாலைகள்,
            கிராமச்சாலைகளை பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.ஒரு தடச்சாலையாகும்.எதிரில் வாகனம் வந்தால்  இரு வாகனங்களும் சாலையை விட்டு விலகிச்செல்ல வேண்டும்.கிலோ மீட்டர் கற்களில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.  (பரமேஸ்வரன் டிரைவர்)
                   
   சாலையின் பாகங்களாக,,,,,
               வாகனம் செல்லும் பாதை,பக்கவாட்டிலுள்ள புயங்கள்,கேம்பர்,நடைபாதை,கெர்ப்,வேகத்தடை,தொடர்வேகத்தடை,சூப்பர் எலிவேசன்,காப்புக்கற்கள்,பிரதிபலிப்பான்கள்,காப்புச்சுவர்,வட்டச்சுற்றுப்பாதை,தீவுத்திடல்,சேனலைசர்,வழிப்படுத்தும் சேனலைசர்,தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள மீடியன்,விட்டு விட்டு கட்டப்பட்டுள்ள மீடியன்,தடுப்புச்சுவர்,மாற்றுப்பாதை,சுரங்கப்பாதை,சிறு பாலங்கள்,தரைமட்டப்பாலம்,உயர் பாலம்,தாழ்வான பாலம்,மேம்பாலம் என பலவகைகளாகப்பிரிக்கலாம். 

சாலை வரைகோடுகள்,
       போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்காக சாலையில் வரையப்படும் கோடுகளை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம்.அவை நீளவாட்டில் வரையப்படும் கோடுகள்,அகலவாட்டில் வரையப்படும் கோடுகள்,மற்ற வரைகோடுகள் ஆகும்.

 சாலையின் நடுவில் வரையப்படும் கோடுகளும்,தடங்களின் கோடுகளும் நீளவாட்டில் வரையப்படுகின்றன.

சாலையின் அகலவாட்டில் , ஜீப்ரா கிராஸிங் கோடுகள்,பாதசாரிகள் கடக்கும் கோடுகள்,வாகனங்களை நிறுத்தும் கோடுகள் வரையப்படுகின்றன.

மற்ற வரைகோடுகளாக சாலை ஓரக்கல் கோடுகள்,திசை காட்டும் கோடுகள்,தடங்களின் எண்கள், கொண்டை ஊசி திருப்பம் கோடுகள்,வேகத்தடைக்கோடுகள்,நிறுத்தி வைக்கும் கோடுகள்,பேருந்து நிறுத்தும் கோடுகள்,ஐலேண்ட்,சேனலைசர்,மீடியன்,ரவுண்டானா போன்ற வரைகோடுகள்,
 ஸ்டாப்,ஸ்லோ,கார்,சைக்கிள் போன்ற எழுத்துக்கள் என வரையப்பட்டிருக்கும்.

     இன்னும் தொடரும்......
 அன்புடன்
 C.பரமேஸ்வரன்,    
         9585600733
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

தொடரும்.......................2016 ஜனவரி 9 ந் தேதி 

Thursday, January 7, 2016

நடிகர் சோ...பத்திரிக்கையாளர் சோ...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். தனி மனிதரின் சுதந்திரத்தை எள்ளி நகையாடலாமா? இதோ சோ என்ற தனிப்பட்ட சிந்தனையுள்ள மனிதரின் செயல்பாடு பற்றி பார்ப்போம்.
..
சோவைக் குறித்து எல்லோரும் சொல்லும் ஒரு குறை அவர் ஒரு பார்ப்பனர் என்பதுவே..
அதைத்தாண்டி அவரிடம் என்ன குறை கண்டீர்கள் என்று கேள்வி கேட்டால் அதற்கு விடை எவரிடமும் இருக்காது.
அவர் ஒரு அரசியல் புரோக்கர்..சரிதான்..அதனால் அவர் அடைந்த பலன் என்ன? ஆதாயம் என்ன? பணம் சம்பாதித்துவிட்டாரா? அதிகாரத்திற்கு வந்தாரா..அல்லது தன் செல்வாக்கைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்துவிட்டாரா..
அவர் அவாளுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்..சரி அதனால் என்ன? ஒரு நாடார் இன்னொரு நநாடாருக்கும் ஒரு தேவர் இன்னொரு தேவருக்கும் ஒரு முதலியார் இன்னொரு முதலியாருக்கும் சப்போர்ட் செய்வதில்லையா.. நமக்கிருக்கும் அந்த உரிமை அவருக்கு மட்டும் அந்தணராய் பிறந்துவிட்டதாலேயே இருக்கக்கூடாதா?
சரி..அப்படியே வைத்துக்கொள்வோம்..தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ‘அவாளுக்கு’ அவர் செய்த நன்மைகள் என்ன? அவர் தனது சமூகத்திற்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான் என்ன?
ம்..அவர் ஏன் ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குகிறார்? ஜாதி உணர்வில்தானே..? ஓ அப்படியா..அப்படியென்றால் 1991 முதல் 1996 முடிய நடந்த ஜெயலலிதா ஆட்சியை அதிகம் எதிர்த்தவர்கள் யார்? இரண்டு பேர்தான். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி..இன்னொருவர் சோ.. ஆனால் அதற்கான பலனை அனுபவித்தது கலைஞர். அதுதானே உண்மை? தமிழ்மாநிலக் காங்கிரஸை உருவாக்கி..ரஜினியை அதற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்து..அதிமுக ஆட்சியை விரட்டியது சோ..தானே? ஏன் அன்றைக்கு ஜெயலலிதா ஜாதி மாறியிருந்ததா? அல்லது அன்றைக்கு கலைஞர் பிராமண ஜாதிக்கு மாறியிருந்தாரா?
இன்றைக்கு நாமெல்லாரும் தூக்கிப்பிடிக்கும் காமராஜரை அன்றைக்கு உயரத் தூக்கிப்பிடித்தது..சோ..மட்டும்தான். அன்றைக்கு காங்கிரஸே காமராஜரைத் தூக்கி எறிந்துவிட்டதே.. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தப்பட்டது சோ மட்டும்தானே. திமுக அன்றைக்கு காமராஜரை எள்ளி நகையாடியது. தமிழர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்றைக்கு வெட்கமேயில்லாமல் காமராஜர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புகழை நாம் பாடிக்கொண்டிருக்கின்றோம்.
விடுதலைப்புலிகளைக் குறித்து எம்.ஜி.ஆர் காலத்திலேயே தீர்க்கதரிசனமாய் சொன்ன ஒரே மனிதர் சோ..மட்டும் தான். அவர்களால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு அழிவு ஏற்படும் என்று. அதன்படியே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனம்பாக்க விமான நிலையத்திலேயே வைத்து இலங்கைத் தமிழ் தலைவர்களை வேட்டையாடினர். அதன்பிறகுதான் எம்.ஜி.ஆர் விழித்துக்கொண்டார். தேவாரத்திற்கு அதிகாரம் கொடுத்து விடுதலைப்புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டி ஒடுக்கினார். பின்னர் கலைஞர் ஆட்சியில் தரைவிரித்து ஆடினர். தமிழர்களுக்கு தனி மாநிலம் கொடுத்து ஒரு உடன்படிக்கையைக் கொண்டு வந்து சிங்கள அரசை ராஜீவ்காந்தி அடிபணிய வைத்தார். ஆனால் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அதற்கு உடன்பட மறுத்தனர். இந்தியாவிலிருந்து படை அனுப்பிவைக்கப்பட்டது.வரதராஜப் பெருமாள் முதல் இலங்கைத் தமிழக முதல்வரானார்.பதிலுக்கு ராஜீவ்காந்தியை நமது நாட்டிற்கே வந்து கொலை செய்தனர். இந்தியாவின் ஆதரவு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விடுதலைப்புலிகளுக்கு பறிபோனது. கடைசியில் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளினாலேயே ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினமும் அழிந்தது.
இதை 1980களிலேயே சொன்னவர் சோ ஒருவர்தான்.
திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். அதில் தவறென்ன? அவரது விமர்சனங்களுக்கு பதில் என்ன? அவர் பார்ப்பனர் என்பதா?
விடுதலைப்புலிகளை..தீவிரவாதத்தை..தமிழ்த் தீவிரவாதத்தை அவர் எதிர்க்கிறார். அதிலும் அவர் தவறென்ன?
தேசீய அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்..இந்திராகாந்திக்கு மாற்றாக ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வர உதவினார். காரணம்..இந்திராகாந்தி காமராஜரை உதாசீதனப்படுத்தினார்..அதிகார மமதை கொண்டார்..அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தான் இந்திராகாந்தி நிதானத்திற்கு வந்தார். 1996ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எறியப்பட்ட பிறகுதான் அவரும் பெருமளவிற்கு நிதானத்திற்கு வந்திருக்கிறார்.
அந்தணர் என்போர் யார் என்று சோ..விடத்திலே துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அவர் பதில்..” மனு தர்மத்தின்படி மனிதர்களுள் 4 ஜாதிகள் உண்டு. அவர்கள்,1.சத்ரியர்கள்..(அரசர்கள்), 2.அந்தணர்கள்(அரசர்களுக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்),3.சூத்திரர்கள்(அரசர்களின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்) மற்றும் 4.வைசியர்கள்(அந்த 3 பேருக்கும் தேவையான பொருட்களைக் கண்டறிந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வியாபாரிகள்). ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?
சரி..நான் சொல்ல வந்தது அதுவல்ல செய்தி..படத்தைப் பாருங்கள்..எவ்வளவு அரசியல்வீதியாக எதிர்த்தாலும் கலைஞரால் அவரைப் புறக்கணிக்கவோ பகைக்கவோ முடியவில்லை. அதுதான் சோ..வின் பலம்.
ஒரே நேரத்தில் கலைஞரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடிகிறது..ஜெயலலிதாவையும் அழைக்க முடிகிறது. அததான் சோ..வின் நேர்மை.
அவர் கையில் வைத்திருக்கும் பத்திரிகையைப் பாருங்களேன்..அதுதான் சோ..வின் எளிமை. அதுதான் சூத்திரனாகிய (கலைஞர் பாஷையில்) என்னையும் சோ..வை ரசிக்க வைத்திருக்கிறது 1991ம் ஆண்டிலிருந்தே..(என்னால்எல்லாம் மற்றவர்களைப் போல் சோ இறந்து 40 அண்டுகளுக்குப் பிறகு புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை.அவர் உயிரோடு இருக்கும் போதே பாராட்டிவிடுகின்றேன். அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..!)