Friday, September 23, 2011

  1. அஜீரணத்தை போக்க: கிராம்பு - 10 கிராம், ஓமம் - 20 கிராம், சுக்கு - 20 கிராம் இவற்றை பொடி செய்து 1/2 டம்ளர் சுடு நீரில் கலந்து குடிக்கவும். [அ] கொஞ்சம் பொடியை 1/2 ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கி, நன்கு பசி வரும்.
  2. பித்ததிற்க்கு : வேப்பம்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். பித்ததினால் வரும் தலைசுற்றலுக்கு கொத்தமல்லி [ தனியா] 100 கிராம், சிறிய சுக்கு இவற்றை மிக்ஸியில் பொடி செய்து 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடியை போட்டு கொதிக்க விட்டு பனை வெல்லம் கலந்து குடிக்கவும். பால் சேர்த்தும் அருந்தலாம். காபி, டீ குடிப்பதை குறைத்து கொண்டு தினமும் 2 முறை குடிக்கலாம்.
  3. ஒற்றை தலைவலிக்கு : பாகற்இலை + சுக்கு + மிளகு + உப்பு இவற்றில் சுக்கை, மிளகை தட்டி போட்டு, இலை கிள்ளி போட்டு 1/2 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விட்டு கொஞ்சமாக சுண்டியபின் [ இதுதான் கஷாயம்] 2 ஸ்பூன் அளவு [ தேவையானால்] தேன் கலந்து தினமும் 2 முறை குடிக்க சில நாட்களிலேயே குணம் தெரியும். உப்புக்கு பதி தேன் கலந்தும் குடிக்கலாம்.
  4. குடல் புண் குணமாக : மணத்தக்காளி கீரையை 1 கைப்பிடி அளவு மிக்ஸியில் அரைத்து மோர் கலந்து 1 வாரம் சாப்பிட்டால் புண் ஆறிவிடும். அடிக்கடி கூட்டு செய்து சாப்பிடலாம். லேசாக வதக்கி மிக்ஸியில் லேசாக அரைத்து தயிரில் கலந்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். இந்த கீரையில் அதிகமாக இரும்பு சத்தும், கால்சியமும் இருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம்.
  5. இரத்த சோகைக்கு : சிறிய வெங்காயத்தை நன்கு கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு வதக்கி லேசாக உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சீரகத்தை பொடி செய்து இதனுடன் கலந்தும் சாப்பிடலாம். பொடியாக நறுக்கி பாலில் வேக வைத்தும் குடிக்கலாம். வதக்கிய வெங்காயத்தில் கொஞ்சம் வெல்லம் அப்படியே சாப்பிட்டால் வறட்டு இருமல் குறையும். உணவில் அடிக்கடி பச்சை வெங்காயத்தை கலந்து சாப்பிட வயிறு தொடர்பான நோய்கள் குணம் ஆகும்.

No comments:

Post a Comment