Wednesday, August 22, 2018





Friday, August 10, 2018

THALAVADI 2nd year BOOK FAIR-2018


2-ஆம் ஆண்டு தாளவாடி புத்தகக்கண்காட்சி-2018
  விளம்பர துண்டறிக்கை!


Wednesday, August 8, 2018

Sunday, May 14, 2017

சேவை செய்யுங்க.

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிடுகிறது.அதனால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்க.
நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.
போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை.
ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்!
எதற்கும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் தடுத்து நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்.
நாம் இறந்தபிறகு நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுகளோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப்போவதில்லை.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்ந்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும். அப்போது நீங்கள் இருந்தால்தானே உங்களைக் கேட்பதற்கு! புரிகிறதா உங்களுக்கு!!!
உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும்.
சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு்உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது.
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண இயலாது.
அரண்மனையே என்றாலும் கண்ணைமூடி தூங்க எட்டுக்கு எட்டு அடி இடமே போதும். ஆகவே, ஓரளவு இருந்தால் போதுமென்று இருங்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இருக்கும். பிரச்சனைகள் இல்லாத மனிதன் இல்லை. ஆகவே,உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
பணம், புகழ், அந்தஸ்து என்று மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்.
யாரும் மாற மாட்டார்கள், யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.
மனமகிழ்ச்சிதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. உற்சாகத்தோடு இருக்கும்போது நோய்கள் வராது. நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் உங்களை 30 அல்லது 40 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும். அதற்குமேல் என்ன வேண்டும் உங்களுக்கு?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவர்கள்தான் உங்களை இளமையாகவும் அனைவரும் விரும்பும்படியாகவும் வைத்துக் கொள்ள உதவுவார்கள்!!!
வரும் காலங்கள் நலமாக அமையும் என்று நம்புவோம்.
  என ஆலோசனை வழங்கிய இரா.செழியன் அவர்களுக்கு நன்றிங்க.

Sunday, May 7, 2017

இளைய சமூகம் காக்க வேண்டும்.

இன்றைய கல்விநிலை?

Sunday, April 30, 2017

மே தின வாழ்த்துக்கள்.


மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.இன்று மே தினம் அதாவது உழைப்பாளர் தினம்.உழைக்கும் அனைவரையும் வாழ்த்துவோம் வாங்க.


            அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சிக்காகோ பேரெழுச்சி[தொகு]
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கறுப்பு தினம்
நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
அனைத்து நாடுகளிலும் மே தினம்[தொகு]
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.
இந்தியாவில் மே தினம்
தொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில்
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.







Monday, December 5, 2016

ஜெயலலிதா-சரித்திர நாயகி..

   புத்தகங்கள் தவிர வேறெதையும் ஏறெடுத்துப்பார்க்காத  இரும்பு மங்கை .




மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். ஜெயலலிதா என்னும் சரித்திர நாயகி பற்றி காண்போம்.
              
            2013 ஜனவரி 31 ந் தேதி நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரும்,தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் கூறியதாவது...  
                சில பெண்கள் இருக்கிறார்கள் , பெரும்பாலான பெண்கள் , இளம் வயதில் தகப்பனை சார்ந்திருப்பார்கள் , பெரியவர்களான பிறகு கணவரை சார்ந்திருப்பார்கள் , வயதான பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பார்கள் , ஆனால் என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள்
நான் யாரையும் சார்ந்திருக்க கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை . யாரையும் சார்ந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு வாழ்க்கையில் அமைய வில்லை . எப்போதுமே நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் , எனக்கு நானே தான் முடிவுகளை எடுத்துக் கொண்டு , வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக் கொண்டு, இப்படியே நான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன் . இது என்னுடைய தனித் திறமை என்று நான் சொல்ல மாட்டேன் , இது விதி . தலையெழுத்து .



ஜெயலலிதா_ஒரு_இரும்பு_மனுஷி :
  நான் கட்சிகாரனல்ல ... நான் மனப்பூர்வமாக நேசிக்கும் ஒரு மனுசியை பற்றி தெரிந்ததை கூறுகிறேன் ... இதில் ஏளனப்படுத்தவோ, பகிரங்கப் படுத்தவோ ஒன்றும் இல்லை.. அவரே அவரது சொந்த வாழ்க்கை பற்றி பேட்டி தந்திருக்கிறார்.சோபன் பாபு பற்றியும் வெளிப்படையாக பேட்டி தந்திருக்கிறார்.
இதில் தவறேதும் இருக்கிறதா என்ன...எல்லா அரசியல்வாதிகள் போல மறைக்கவோ, புளுகவோ, இல்லையே., இன்று அரசியல்வாதிகள் வாழும் வாழ்க்கைக்கு அது ஒன்றும் அவ்வளவு சாக்கடை அல்ல ...
இதிலிருந்து புலப்படும் உண்மை " அவர் என்றுமே அரசியலுக்கு வரவிரும்பவே இல்லை " என்பதே...
தனக்கான, அமைதியான சந்தோசமான வாழ்வை அடையமுடியாமல் தடுத்த நயவஞ்சகர்கள் இடையே தன் வாழ்வை எப்படியாவது அமைத்துக் கொண்டு புகழ் வெளிச்சத்தில் இருந்து வெளியேறவே ஜெயலலிதா விரும்பினார்... மீண்டும் மீண்டும் அவரின் சொந்த விருப்பை பறித்து சினிமாவிலும், அரசியலிலும் அவர் தள்ளப்பட்டார்.அதனால்தான்  அவர் அரசியலிலாவது தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பி தனக்கான சரித்திரத்தைத்  தானே அமைக்கத் துவங்கினார்.. 
(இவ்வாறாக தன்னையே உருவாக்கிக்கொண்ட இன்னொருவர் ராதிகா) ..
இயல்பாக ஜெயலலிதா குடும்பம், குழந்தை என தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவே விரும்பினார். சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவராக வந்து நுழையவே இல்லை .. மெட்ரிக் தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா .. அவர் படிப்பை நிறுத்தி சினிமாவில் கொண்டு வந்தது அவர் தாயின் பொருளாதார நிர்ப்பந்தம் ..
பல மொழிகளைப் பேசும் வல்லமையும், தீர்க்கமான அறிவும், புத்திசாலித்தனமும் இருந்தும் அவர் நினைத்த வாழ்வை அடைய முடியாது அவரது துரதிர்ஷ்ட்டம்... .
எத்தனையோ முறை சினிமாவில் இருந்து அவர் வெளியேற முயற்சித்ததும், அது முடியாமல் மீண்டும் சினிமாவிலேயே இருக்க வைக்கபட்டார், சினிமாவில் தவிர ஒரு பொழுதும் அவர் யாருக்காகவும் நடித்ததில்லை ... கோபமாகட்டும், ஆவேசமாகட்டும், சூட்டிங் ஸ்பாட்டிலேயே கர்ஜித்து விடுவார்.. எந்த தயாரிப்பாளருக்கும் அவர் ஒரு போதும் கூழை கும்பிடும் போட்டதில்லை .. எந்த ஹீரோவுக்கும் அவர் வாய்ப்புக்காகவேனும் நயைந்து ஒரு சிரிப்பும் சிரித்ததில்லை .... எப்பேற்பட்டவரையும் "ஷட் அப் " என்று சொல்லி விட்டு போய்க்கொண்டே இருப்பார்.. படப்பிடிப்பில் தன் நடிப்பு நேரம் முடிந்ததும் புத்தகங்கள் தவிர ஏறெடுத்தும் யாரையும் கவனிக்கக்கூட மாட்டார்! என்று பலரும் கூறி கேள்விப்பட்டதுண்டு ...
அவரின் ஆசைகளோ, காதலோ, அமைதியான வாழ்வோ எல்லாமே அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன, தனிமையாக்கப் பட்டார்.. தாயும் இறந்தபின் யாருமில்லாத தனிமரமானார் .. அதற்கு பின்புதான் வேறு வழியில்லாமல், போக்கிடமில்லாமல் அரசியலி நுழைந்தார் .. சீண்டினால் பாயும் புலி என்பது அறியாமல் சீண்டியதன் விளைவே அவரின் அரசியல் அத்தியாயம்! என்பது யாவரும் அறிந்த ஒன்று ..
அவரை படுகுழியில் தள்ளியவர்கள் முன்பு பிரமாண்டமாக எழுந்து நின்றார்... அந்த கோபமே இன்றும் அடங்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது.. நடிகை என்று எள்ளி நகையாடியவர்கள் முன்பு "நடிகை" என்ற அடையாளத்தையே துடைத்து எறிந்து "ஜெயலலிதா" என்று துணிச்சலாக நின்று காட்டினார்.. எப்பேர்ப்பட்ட சாதனை ....
அவரை கேவலப்படுத்திய அதே சமுதாயத்தை தலை நிமிர்ந்து பார்க்கவைத்தார், எட்டி உதைத்து துகிலுரிந்த அதே ஆண் வர்க்கத்தை "அம்மா" என்று வணங்க வைத்தார், அதே ஆண்கள் இவரை வணங்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் கடந்த கால காயங்களுக்கு மருந்தாகவே அவர் நினைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன் ... தான் துடைத்து எறிந்த காயங்களுக்கு சான்றாகவே நினைத்திருப்பார் என்றே நான் நினைப்பேன் ..
சாதிக்க இயலாது என்று நினைத்த ஒவ்வொன்றிலும் அவர் சாதித்தே காட்டினார்..  அவர் டெல்லி செல்லும்போது  திரளும் பத்திரிக்கையாளர் கூட்டமும், கோட்டை அடையும் பரபரப்பும் இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு மரியாதை.. யாரும் மிரளும் தன்மை கொண்டவராக நம் முதல்வர் இருந்ததில் பெருமையே... இதை ஜால்ரா எடுத்து கொண்டாலும்,எனக்கு கவலை இல்லை.. நான் பேசுவது ஒரு தனிப்பட்ட மனுசியை ..
நான் இன்று வரை ஜெயலலிதா அவர்களை அன்றும் - இன்றும் என்று மட்டுமே பிரித்து காண்கிறேன்.. அன்றைய ஜெயலிதாவின் இன்னல்கள் ஒரு ஆணுக்கு இருந்திருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு காணாமல் போயிருப்பான் என்பது மட்டும் நிச்சயம்.. தற்போது புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் செயல்பாடுகள் விவாதத்திற்கு உலாவுவது உண்டு... ஏன் என்றால் அன்று என்பது வரலாறு... இன்று என்பது வேற்று பேச்சு.. அவ்வளவுதான் ... இந்த வேற்றுபேச்சில் எத்தனை வரலாறு உருவாக போகிறது, என்பது திறமையின் சான்று... அதை ஜெயலலிதா நிருபித்து கொண்டே இருந்தார் ..

இந்த உலகில் யாருக்கு எந்த பட்டம் பொருத்தமோ இல்லையோ ஜெயலலிதாவிற்கு மிக பொருத்தம் "புரட்சி தலைவி " என்ற பட்டம் தங்கள் வாழ்வில் ஒருபோதும் யாரும் விரும்பியே தவறுவதில்லை.. நயவஞ்சக நரிகளை தவிர... அவ்வாறான கருத்து நோக்கத்தில் பார்க்கும்போது ஜெயலலிதா ஒரு பெண் புலியே!,இரும்பு மனுஷியே!! 
என அன்பன்,
செ.பரமேஸ்வரன், 9585600733
செயலாளர்,
விதைகள் வாசகர் வட்டம்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
 சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.