Friday, December 30, 2011

சாலை விபத்து அதிகரிக்க காரணங்கள்

அன்பு நண்பர்களே,வணக்கம். 

சாலைவிபத்துகளுக்கு காரணம் என இந்தப்பதிவில் சிறிதளவே பதியப்பட்டுள்ளது.தாங்களே நினைத்துப்பாருங்கள்.சாலைவிபத்தினைத் தவிர்க்க தங்களால் ஆன முயற்சியினைச் செய்யுங்கள்.

சாலை விபத்து அதிகரிக்க  காரணங்கள் 



இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.


1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள்
நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் :ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் வாகனம் ஓட்ட உரிமம் எடுத்துக்கொடுப்பதைத்தவிர்த்து, வாகனம் ஓட்டக்கற்றுக்கொடுக்க வேண்டும்.இதனை போக்குவரத்து ஆய்வாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் தொழில் சாரா ஓட்டுனர்கள்(முதலாளிகள்,அதிகாரிகள்,ஓட்டுனர் தொழில் அல்லாத பிற தொழில் சார்ந்த ஆனால் சொந்தவாகன ஓட்டுனர்கள்) குடிபோதையில் வாகனம் ஓட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .


6 . தரமற்ற வாகனங்கள்  
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து
செய்யவேண்டும். 

7 .
பழுதடைந்த சாலைகள்  
குண்டும்
  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .  
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .
8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது,அலட்சியம்,அறியாமை,கவனமின்மை மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .
 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு,அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பேருந்துகளில் ஏறுவதைத்தவிர்க்க வேண்டும்.

9 .சாலைகள் வடிவமைப்பு  
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறைபாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களைக்கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும்.
10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும்.இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகநலன் கருத்தில்கொண்டு இணைந்து செயல்படவேண்டும்.

Tuesday, December 27, 2011

சாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம்

                             2012-ம் ஆண்டுக்கான SLOGAN;- 
              "ACCIDENTS BRING TEARS - SAFETY BRINGS CHEER"
   "விபத்தினால் வருவது துன்பம் - பாதுகாப்பினால் வருவது இன்பம்''

    
  அன்பு நண்பர்களே,வணக்கம்.
                PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை வரவேற்கிறேன். சாலை விபத்துக்கள் பற்றி மற்ற பதிவுகளிலிருந்து தங்களது சிந்தனைக்கு.................

இந்தியாவில் தான் சாலை விபத்துக்களால் நிமிடத்திற்கு ஒருவர் பலி


[ Fri, Nov 18, 2011, 10:25 am ]


புதுடில்லி: உலகிலேயே இந்தியாவில் தான் சாலை விபத்துக்களால் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர், 4 பேர் காயமடைகின்றனர். இதில் வாகன ஓட்டுனர்களின் தவறும் முக்கிய காரணமாகிறது. இப்படியே போனால் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி, எய்ட்ஸ்,மற்றும் சர்க்கரை வியாதியை விட சாலை விபத்துக்களால் உயிர்பலி அதிகரித்துவிடும் என மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களால், விபத்துக்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகம், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம், போதுமான அளவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.இது குறித்து மத்தியஅரசின் நெடுஞ்சாலை மற்றும் ‌தரைவழி போக்குவரத்து துறையின் செயலர் ஏ.கே. உபாத்யாயா கூறியதாவது:கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் 4.9 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் பலியாகியுள்ளனர். 5 லட்சம் காயமடைந்துள்ளனர். ஆனால் 2010-ம் ஆண்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 1.3 லட்சம் அதிகரித்து 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் நன்கு திட்டமிட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு சாலை விபத்துக்களை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.. பக்கத்துநாடான சீனாவில் மக்கள் தொகை அதிகம் ஆனால் சாலைவிபத்துக்கள் குறைவு, அமெரிக்காவில் வாகனங்கள் அதிகம் ஆனால் அங்கு சாலைவிபத்துக்கள் குறைவு ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி ஒரு நிலைமை. சாலை விபத்துக்கள் மோசமான நிலையில் உள்ளது . இந்தியாவில் சாலை விபத்துக்களால் பெரும்பாலும் 25 முதல் 65 வயது வரை உள்ளவர்களில் 52 சதவீதத்தினரும், நடந்து செல்பவர்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிளின் செல்பவர்கள் 39 சதவீதத்தினர் என ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒருவர் பலியாகின்றனர். 4 பேர் காயமடைகின்றனர். மேலும் டிரைவர்களின் கவனக்குறைவும் உயிர்பலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.. இந்நிலை தொடர்ந்தால் வரும் 2030-ம் ஆண்டில் எச்.ஐ.வி. , எய்ட்ஸ், சர்‌க்கரை நோயால் இறப்பவர்களைவிட சாலை விபத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இத்தகைய சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் உயிர்பலியாவதை தடுப்பதற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் படி 5 குழுக்களை நியமித்துள்ளது. இக்குழு சில பரிந்துரைகளை சமர்பித்துள்ளது. இதனை மத்திய தரை வழி ப‌ோக்குவரத்துதுறை அமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சாலை பாதுகாப்பு கமிஷன் . 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இம்முறை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அதிகபட்சம் சாலை விபத்துக்களை குறைத்திடவும் உயிர்பலி ஆவதை தடுக்க நடவடிக்கை மேற்‌கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். 
                        நன்றி;-THAALAM NEWS

சாலை விபத்துக்களில் திண்டுக்கல் தொடர்ந்து இரண்டாவது இடம்

  • சாலை விபத்துக்களில் திண்டுக்கல் தொடர்ந்து இரண்டாவது இடம்
திண்டுக்கல் : தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், சாலை விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கையில், தொடர்ந்து இரண்டாமிடம் வகிக்கிறது. தமிழகத்தில் நோய்களால் இறப்பவர்களை விட, சாலை விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், தமிழகத்திலேயே அதிகம் பேர் விபத்துக்களில் உயிரிழக்கும் மாவட்டமாக முதலிடத்தை பிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், மதுரை, திருச்சி, கோவை, தேனி, கரூர் என தேசிய நெடுஞ்சாலைகள் செல்கிறது. விபத்தை தடுப்பதற்கு, நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் விபத்துக்களை தடுக்க முடியவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2010 ஜனவரி முதல் நவ., 15 வரை, 505 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்; 2,310 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் நவ., 15 வரை, 520 பேர் இறந்துள்ளனர்; 1,935 பேர் காயமடைந்துள்ளனர். வாகன ஓட்டிகளின் அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவையே விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன. இரவு 9 முதல் அதிகாலை 5 மணிவரை 75 சதவீதம் விபத்துக்கள் நடக்கின்றன. 25 சதவீதம் விபத்துக்கள் பகல் நேரத்தில் நடக்கின்றன.

                                                              நன்றி-; தினமலர்.
                                                                   PARAMESDRIVER//                                                                                        TNSFTHALAVADY.BLOGSPOT.COM

ROAD SAFETY- SLOGAN-04

  அன்பு நண்பர்களே,வணக்கம். 
                 PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின் தற்போதைய தலைவலியாக உள்ள சாலை விபத்துகளை தவிர்க்க..சாலைப்பாதுகாப்பு கோஷங்கள் ஆங்கிலத்தில்..
          
                            ROAD SAFETY-SLOGANS

           (1) ALWAYS ADHERE TO SPEED LIMIT,
           (2) ACCIDENT LEADS TO LOSS OF LIFE,
          (3) DO NOT TRIPLES AT TWO WHELLERS,
          (4)DO NOT OVER LOAD,
           (5) DO NOT DRIVE IF TIRED,
         (6) KEEP LEFT,
           (7) KEEP YOUR DISTANCE,
          (8) FOLLOW ALL TRAFFIC RULES,
         (9) FOLLOW ALL TRAFFIC SIGNS,
         (10) ROAD SAFETY OUR SAFETY,
         (11) DO NOT MOVING AGAINST ONE WAY,
        (12) USE HORN AT ALL BLIND CORNERS,
        (13) START EARLY  REACH SAFELY,
       (14) DO NOT OVER TAKE AT CURVES,
        (15) DO NOT DRINK AND DRIVE,
       (16) GIVE A CORRECT SIGNAL,
      (17) INDICATE EARLY,
       (18) SAFETY FIRST SPEED NEXT,
       (19) SIGNAL WELL ADVANCE,
       (20) DO NOT RASH DRIVING,
       (21) TAKE SPECIAL CARE ABOUT PEDESTRIANS,
      (22) PEDESTRIANS SHOULD WALK CAUTIOUSLY,
      (23) KEEP YOUR EYES ON THE ROAD,
     (24) DO NOT USE MOBILE PHONE WHILST DRIVING,
    (25) WEAR HEL MET FOR YOUR OWN SAFETY,
   (26) DO NOT HORN IN THE CITY,
    (27) YOU ARE IMPORTANT TO YOUR FAMILY,
        என-        PARAMESDRIVER // 
              TAMIL NADU SCIENCE FORUM
                              THALAVADY    

ROAD SAFETY- POEM

             அன்பு நண்பர்களே,வணக்கம். 
                     PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். 
                  திருமிகு. அ.ப.முத்துசாமி,இயக்கூர்தி ஆய்வாளர் அவர்களது   கவிதை....
சாலைப் பாதுகாப்புக்காக...........தங்களது சிந்தனைக்காக...........
      
          தானங்களில் செயற்கரிய தானம்
                சாலையில் நிதானம்
   
        ஆற்றல்மிக்க மனித சக்தியை
            ஆஸிலேட்டர் அமுக்கத்திலா அழித்துவிடுவது

      விலைமதிப்பில்லா மனித உயிரினை
           விபத்திலா பறி கொடுப்பது

      கண்கூசும் விளக்கின் ஒளி
        கல்லறைக்கு செல்லும் வழி

     காற்று ஒலிப்பானின் அதிர்வுகளால்
         கருவறைக்குழந்தைக்கு கனவில்கூட அச்சம்

    அதிவேகப் பயணத்தால்
       அஸ்தமிக்கப்படுகிறது மனித ஜன்னம்

   100-ல் வாகனத்தை இயக்குவதால்
        108 பின் தொடரும் அவலம்

    தலைக்கவசம் இல்லாததால் 
        தலைமுறையை இழக்கும் அபாயம்

    போதையில் ஏற்படும் விபத்துகளுக்கு
       மேதைகள் கூட விதிவிலக்கல்ல

    சாதனைகள் புரிவதற்கும்
        சாலைப்பாதுகாப்பு அவசியம் வேண்டும்..


          மிதமான வாகனப்பயணம்
                   
மீதமாகும் வாழ்க்கைப்பயணம்!
                  
சாலை ஞானம் வளர்ப்போம்
                 
சாலை விபத்தை தடுப்போம்!
                
மனிதனை கொண்டு செல்வதற்குத் தான்
                
வாகனம். கொன்று செல்வதற்கு அல்ல!
                
விழி பூட்டைத் திற……
                
விழிப்பூட்டைப் பெற
                
மூன்று கண்ணாடி பொருத்திடு
                
மூன்றாம் கண்ணைத் திறந்திடு!
                
மனம் உழன்றது
               
வாழ்க்கைச் சக்கரத்தில்….
               
உடல் சுழன்றது
               
வண்டிச் சக்கரத்தில்….
              
சேமிக்க நினைத்து சில நொடிகள்
              
சேதம் அடைந்தது பல உயிர்கள்
              
சிகப்பு விளக்கை மதித்திடு
              
இரத்தம் சிந்தாமல் பிழைத்திடு!





                              பதிவேற்றம்..
                         PARAMESDRIVER // 
                    TAMILNADU SCIENCE FORUM - 
                         THALAVADY - ERODE(DT)

சாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02

                          '' ROAD SAFETY SLOGANS - 02
           சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02

அன்பு நண்பர்களே,
            வணக்கம்.PARAMESDRIVER . BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வருக,வருக, என வரவேற்கிறேன்.அடிக்கடி மின்தடை............ காரணமாக பதிவிடுதலில் தடங்கல் ஏற்படுகிறது,மன்னிக்கவும்!.
                             சாலை பாதுகாப்பு கோஷங்கள்-2012-ன் ,சென்ற பதிவின் தொடர்ச்சி...........
 (1)சாலைப்பாதுகாப்பு, உயிர்ப்பாதுகாப்பு,
 (2) சாலைப்பாதுகாப்பு,நமது பாதுகாப்பு,
 (3) சாலைப்பாதுகாப்பு,சமூகப்பாதுகாப்பு,
 (4)சாலைப்பாதுகாப்பு,நாட்டின் பாதுகாப்பு,
 (5) சாலைப்பாதுகாப்பு,அனைவரின் பாதுகாப்பு,
(6)தலைக்கவசம்,உயிர்க்கவசம்,
 (7) பாதுகாப்பே நமது குறிக்கோள்,
  (8) பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்,
  (9) சாலை சந்திப்புகளில் கவனம் தேவை,
 (10) சாலை விதிகளை மதிப்போம்,விபத்தினைத் தவிர்ப்போம்,
  (11) சாலையைக்கடக்கும்போது கவனம் தேவை,
 (12) சாலையை ஆக்கிரமிப்பு செய்யாதீர்,
 (13) சாலையின் குறுக்கே திடீரெனத் திரும்பாதீர்,
 (14) சாலையின் குறுக்கே சைகை கொடுக்காமல் நுழையாதீர்,
 (15) சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தாதீர்,
 (16) சாலையில் கால்நடைகளை உலவ விடாதீர்,
 (17) சாலைப் பயணம் அனைவருக்கும் பொதுவானது,
 (18) அவசர ஊர்திகளுக்கு வழி கொடுப்போம்,
 (19) அனுசரித்து வாகனம் ஓட்டுவீர்,
 (20) அமைதிகாக்கும் இடங்களில் ஆரன் அடிக்காதீர்,
 (21) அனைத்து வளைவுகளிலும் ஆரன் அடியுங்கள்,
 (22) ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி கொடுப்போம்,
 (23) ஆத்திரப்படாதீர் - அவதிப்படாதீர்,
(24) இன்றைய பாதுகாப்பே நாளைய சேமிப்பு,
 (25) இன்றைய குறிக்கோள் சாலைப்பாதுகாப்பு,
 (26) உங்கள் கவனம் ரோட்டின் மேலே,
 (27) உங்களை நம்பி உங்கள் குடும்பம்,
   (28)    உத்தரவுச்சின்னங்களை மதியுங்கள்,
  (29) இடது புறமாகச்செல்வீர்,
 (30)இடதுபுறமாக முந்தாதீர்,
 (31) இனிய பயணத்தை உறுதி செய்வோம்,
 (32) ஏட்டிக்குப்போட்டி நமக்கு எதற்கு,
  (33) ஒருவழிப்பாதையின் எதிரே ஓட்டாதீர்,
 (34) ஓடும் பேருந்தில் ஏறாதீர்,
 (35) ஓடும் பேருந்தில் இறங்காதீர்,
 (36) கவனச்சிதறல் கண்டிப்பாக விபத்து,
 (37) கவனக்குறைவு கண்டிப்பாக விபத்து,
 (38) அரைநாழிகை கவனக்குறைவு-ஆயுள் முழுவதும் அங்கக்குறைவு,
 (39) கூட்ட நெரிசலில் பொறுமையைக்கடைப்பிடியுங்கள்,
 (40) குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்,
 (41) குறுகிய சாலைகளில் முந்தாதீர்,
 (42)குறுகிய பாலங்களில் முந்தாதீர்,
 (43) எல்லைக்கோட்டைத்தாண்டாதீர்,
 (44) நகர எல்லைக்குள் ஆரன் அடிக்காதீர்,
 (45) நடு ரோட்டில் செல்லாதீர்,
 (46) நமக்கு நாமே பாதுகாப்பு,
 (47) நமது குடும்பம் நம்மை நம்பி,
 (48) செல்பேச்சு,உயிர் போச்சு,
 (49) செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்,
 (50) சர்க்கஸ் சாகசம் சாலையில் வேண்டாம்,
 (51) விபத்துக்குக் காரணம் தவறுகளே,
 (52) வேக வரம்பை மீறாதீர்,
 (53) வேகமா? விவேகமா?
 (54) வீரமா?விவேகமா?
 (55) படியில்பயணம் நொடியில் மரணம்,
 (56) பள்ளிக்குழந்தைகள் பாதையிலே - பார்த்துச்செல்லுங்கள் சாலையிலே,
 (57) பள்ளிக்கு அருகில் ஆரன் அடிக்காதீர்,
 (58) பொறுமை கடலினும் பெரிது,மனித உயிர் அதனினும் பெரிது,
  (59) போக்குவரத்துச்சின்னங்களை மதிப்போம்,
  (60) போக்குவரத்து விதிகளை மதிப்போம்,
  (61) போக்குவரத்துச்சட்டங்களை மதிப்போம்,
  (62) போனால் வராது உயிர்,பொறுமையாகச்செல்வீர் சாலையில்,
  (63) கைசைகை சாலையின் மொழியாகும்,
 (64) போக்குவரத்துச்சின்னங்கள் சாலையின் குரலாகும்,
 (65) பாதசாரிகளுக்கு வழிகொடுங்கள்,
 (66) சந்தேகத்தோடு முந்தாதீர்,
 (67)பாதுகாப்பே நமது குறிக்கோள்,
 (68) அதிவேகம் ஆபத்தில் முடியும்,
 (69) ஆபத்தின்றி பயணிப்பது அருங்கலை,
 (70)பாதுகாப்பான வேகமே,பத்திரமான பயணம்,
 (71)திரும்பம் முன் சிக்னல் செய்யவும்,
 (72) சிக்னல் பெற்றே முந்திச்செல்லவும்,
 (73) வேகம் விவேகமல்ல,
(74) வாகனம் ஓட்டும்போது பேசாதீர்,
 (75) பிற வாகனத்தை நெருங்கிச்செல்லாதீர்,
 (76) வளைவுகளில் வேகத்தைக்குறைப்பீர்,
 (77) போட்டிமனபான்மை வேண்டாம்,
 (78) கவனம் சிதறாமல் வாகனம் ஓட்டுங்கள்,
 (79) உங்கள் வாழ்க்கை உங்கள கையில்,
 (80) உங்கள் குடும்பம் உங்களை நம்பி,
 (81) சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றாதீர்,
 (82) சரக்கு வாகனங்களில் பயணம் செய்யாதீர்,
 (83) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்,
 (84) மருந்துண்ட மயக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்,
 (85) போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டாதிர்,
 (86) புகை நமக்குப் பகை,
 (87) சீரான வேகமே சிறப்பானது,
(88) வாழ்க்கையில் முந்துங்கள்,வாகனத்தில் அல்ல,
 (89) சாலையில் குறுக்கீடு வேண்டாம்,குறிக்கோள் வேண்டும்,
 (90) ஓய்வின்றி தொடர்ந்து ஓட்டாதீர்,
 (91) தூக்கக்கலக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்,
 (92) மனக்கலக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்,
 (93) மனதை அலைபாய விடாதீர்,
 (94) இனக்கவர்ச்சியில் வாகனம் ஓட்டாதீர்,
(95) விளக்கு சிக்னல் விளையாட்டல்ல,
 (96) எச்சரிக்கைச்சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (97)உத்தரவுச்சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (98) தகவல் சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (99)விளக்குச் சிக்னல்களைத் தெரிந்து கொள்வோம்,

 (100) 100-ல் செல்லாதீர்,108-ல் போகாதீர்,
 (101) முதல் உதவி தெரிந்து கொள்வோம்,
 (102)அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை தன்வசம் வைத்திருப்போம்,
 (103) சாலையின் தன்மைகளை அறிந்து கொள்வோம்,
 (104) சாலையின் வகைகளை அறிந்துகொள்வோம்,
 (105) வாகனப்புலமை பெற்றிடுவோம்,
 (106) கை சைகைகளைத் தெரிந்து கொள்வோம்,
 (107) பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவோம்,
 (108) பிறரை மதித்து வாகனம் ஓட்டுவோம்,
 (109) எண்பதுகளில் சென்று அப்பளமாக நொறுங்குவதை விட 
              ஐம்பதுகளில் பாதுகாப்பாகச் செல்வதே மேல்,
             
                                                                                                         தொடர்ச்சி................            அடுத்த பதிவில்.
          PARAMESDRIVER / THALAVADY.
 

  

சாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01

                    '' ROAD SAFETY SLOGANS - 
         சாலை பாதுகாப்பு கோஷங்கள்''

அன்பு நண்பர்களே,வணக்கம்.
                PARAMESDRIVER- வலைப்பதிவிற்கு வருகை தந்துள்ள தங்களை வருக!வருக!! என வரவேற்கிறேன். 
                     மனித சமூகத்திற்கு உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம்.இவைகளைத்தேடிக்கொள்ள போக்குவரத்து என- போக்குவரத்து என்பது தற்காலத்தில் தவிர்க்க முடியாத அத்தியாவசியமானதாகிவிட்டது.  
             நாகரீகம் வளர,வளர அறிவியல் கண்டுபிடிப்புகளால்,தொழில்நுட்ப வளர்ச்சியினால் பலவேறு கம்பெனிகள்,பல்வேறு வாகனங்களை,பல்வேறு வாகனங்களை,பல்வேறு வடிவங்களில்,பல்வேறு வேகங்களில்,பல்வேறு அளவுகளில்,தயாரித்து வெளியிட,அந்த வாகனங்களை இளைஞர் முதல் பெரியவர் வரை ஆண்,பெண் பாகுபாடு இன்றி அனைவரும் ஆனால்!                         
           அந்தக்காலத்தில் போடப்பட்ட, கட்டமைப்பு வசதிகுறைந்த, குறுகலான, அதே ரோட்டில் அனைத்து வாகனங்களையும் இயக்குவதால் போக்குவரத்து மிகுந்து ,நெரிசல் மிகுதியால் தடைகள் ஏற்பட்டு அதனால்,மிகுந்த கால தாமதமும்,கால தாமதத்தால் ஏற்படும் பதற்றம்,படபடப்பு,ஆத்திரம்,மன அழுத்தம் ஏற்படுகிறது. 
        இதன் விளைவாக அதிவேகம்,கவனக்குறைவு,அலட்சியம்,ஆத்திரம்,அறியாமை,அதன் விளைவாக ஏற்படும்  விபத்துக்களால்  விலை மதிப்புமிக்க மனித உயிரிழப்பும்,பொருள் சேதமும்,கால விரயமும் ஏற்படுகிறது.
        விபத்துக்களால் ஏற்படும் இழப்பு நமது இழப்பு,நமதுஇழப்பு,சமூகத்தின் இழப்பு,சமூகத்தின் இழப்பு இந்த நாட்டின் இழப்பு ஆகும்.''விபத்து ஏற்படும் வரை சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை உணருவதில்லை! விபத்து ஏற்பட்ட பிறகு உணருவதற்கு நாம் உயிரோடு இருப்பதில்லை!!''
           இது போன்ற விபத்துக்களைத்தவிர்த்து சமூகத்தைப்பாதுகாக்க சாலை பாதுகாப்பு அவசியமானதாகிவிட்டது.உலக அளவில் அதிகரித்து வரும் விபத்துக்கள்,அதனால் ஏற்படும் மனித உயிர்இழப்புகள் என மனித சமூகமே அழியும் நிலை ஏற்படுமோ என அச்சமடைந்த  ''உலக சுகாதார அமைப்பு''(WHO) சாலை விபத்துக்களை தவிர்த்து மனித உயிர்களைக்காக்கும் பொருட்டு,வருடந்தோறும் உலகம் முழுவதும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக அறிவித்து அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 23-வது சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
            இந்த (2012)வருடத்திற்கான ''சாலை பாதுகாப்புக் கோஷம்'',
                               
           ''Accidents bring tears - Safety brings cheer '' 
 ''விபத்தினால் வருவது துன்பம் - பாதுகாப்பினால் வருவது இன்பம்'' 
                                                

                                        -நன்றி;-
                 வட்டார போக்குவரத்து அலுவலகம்-
                               கோபி செட்டிபாளையம்-
                               ஈரோடு மாவட்டம்.
               தேதி;-   27-12-2011மாலை 05.00 மணி.
                 
          கோபி கலை & அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
                   இளஞ்செஞ்சிலுவைச் சங்கம்-(Y.R.C)
                  சமுதாய சேவைக் கூட்டமைப்பு- (S.S.L)
                 பெற்றோர் ஆசிரியர் சங்கம்- (P.T.A)  மற்றும் 
                கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம்
                            கோபி செட்டிபாளையம் 
                               இணைந்து நடத்தும்
      
                 23-வது சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப்பேரணி
    (1) மதிப்போம்,மதிப்போம்-சாலைவிதிகளை மதிப்போம்,
    (2)திரும்புவோம்,திரும்புவோம் - சைகை காட்டித் திரும்புவோம்,
    (3)பின்பற்றுவோம்,பின்பற்றுவோம் -
                  சாலை விதிகளைப் பின்பற்றுவோம்,
   (4) பின்பற்றுவோம்,பின்பற்றுவோம் -
          போக்குவரத்து சின்னங்களைப் பின்பற்றுவோம்,
   (5)வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் -
                   அவசர ஊர்திகளுக்கு வழிகொடுப்போம்,
  (6)வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் -
                   ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிகொடுப்போம்,

  (7)   வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் - 
                   தீயணைப்பு வாகனங்களுக்கு வழிகொடுப்போம்,
  (8)வழிகொடுப்போம்,வழிகொடுப்போம் - 
                   எஸ்கார்ட் வாகனங்களுக்கு வழிகொடுப்போம்,

 (9)தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் -
           போக்குவரத்து சட்டங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (10)தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           போக்குவரத்து சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
 (11)தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           போக்குவரத்து விதிகளைத் தெரிந்து கொள்வோம்,

 (12)  தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           போக்குவரத்து சைகைகளைத் தெரிந்து கொள்வோம்,
  (13) தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           சாலையின் தன்மைகளைத் தெரிந்து கொள்வோம்,
  (14) தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           சாலையின் வகைகளைத் தெரிந்து கொள்வோம்,
  (15) தெரிந்து கொள்வோம்,தெரிந்துகொள்வோம் - 
           விளக்குச்சின்னங்களைத் தெரிந்து கொள்வோம்,
  (16) முந்திச் செல்வோம்,முந்திச்செல்வோம் -
                   வலதுபுறமே முந்திச்செல்வோம்,
  (17)உரிமம் எடுக்க எட்டுப் போடு -
                உயிரைக்காக்க ஹெல்மெட் போடு,
  (18) உயிர்க்கவசம்,உயிர்க்கவசம்-தலைக்கவசம் உயிர்கவசம்,
  (19) தர்மம் தலை காக்கும் - தலைக்கவசம் உயிர் காக்கும்,
  (20) ரோட்டின் மேலே,ரோட்டின் மேலே -
     உங்கள் கவனம் ரோட்டின் மேலே,
  (21)பள்ளிக்குழந்தைகள் பாதையிலே,பார்த்துச் செல்லுங்கள் போகையிலே,
(22) பாதசாரிகளே,பாதசாரிகளே-பார்த்துச் செல்லுங்கள் பாதையிலே,
  (23) சைகை கொடுப்போம்,சைகை கொடுப்போம்-
             திரும்பும் முன் சைகை கொடுப்போம்,
   (24)பார்த்துச்செல்வோம்,பார்த்துச்செல்வோம்-
           சாலையைக் கடக்கும்போது பார்த்துச்செல்வோம்,
   (25) வாகனம் ஓட்டுவோம்,வாகனம் ஓட்டுவோம்-
                     அனுசரித்து வாகனம் ஓட்டுவோம்,
  (26) வாகனம் ஓட்டுவோம்,வாகனம் ஓட்டுவோம்-
                     பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவோம்,
  (27) முன்னுரிமை,முன்னுரிமை -
            பாதசாரிகளுக்கே முன்னுரிமை,
 (28) ஏறுவோம்,ஏறுவோம் - பேருந்து நின்றபிறகு ஏறுவோம்,
  (29) இறங்குவோம்,இறங்குவோம் - பேருந்து நின்றபிறகு இறங்குவோம்,
   (30) பொறுமை வேண்டும்,பொறுமை வேண்டும் -
             கூட்டநெரிசலில் பொறுமை வேண்டும்,
  

    (1) வேண்டாங்க,வேண்டாங்க - படிக்கட்டுப் பயணம் வேண்டாங்க,
   (2) வேண்டாங்க,வேண்டாங்க - அதிக பாரம் வேண்டாங்க,
  (3) வேண்டாங்க,வேண்டாங்க - அவசரப்பட வேண்டாங்க,
   (4) வேண்டாங்க,வேண்டாங்க - கவனக்குறைவு வேண்டாங்க,
  (5) வேண்டாங்க,வேண்டாங்க - அதிக வேகம் வேண்டாங்க,
  (6) வேண்டாங்க,வேண்டாங்க - சாலை ஆக்கிரமிப்பு வேண்டாங்க,
  (7) வேண்டாங்க,வேண்டாங்க - மனக்கலக்கம் வேண்டாங்க,
  (8) வேண்டாங்க,வேண்டாங்க - பொறுமை இழக்க வேண்டாங்க,
  (9) வேண்டாங்க,வேண்டாங்க - இனக்கவர்ச்சி வேண்டாங்க,
  (10)வேண்டாங்க,வேண்டாங்க - போட்டி போட வேண்டாங்க,
  (11)வேண்டாங்க,வேண்டாங்க- திடீர் குறுக்கீடு வேண்டாங்க,
  (12) வேண்டாங்க,வேண்டாங்க - மது,போதை வேண்டாங்க,
  (13) வேண்டாங்க,வேண்டாங்க - வளைவுகளில் முந்த வேண்டாங்க,
  (14)வேண்டாங்க,வேண்டாங்க - சட்டங்களை மீற வேண்டாங்க,
  (15)வேண்டாங்க,வேண்டாங்க- சாலைவிதிகளை மீறுவது வேண்டாங்க,
  (16)போகாதீங்க,போகாதீங்க - நடுரோட்டில் போகாதீங்க,
  (17)மீறாதீங்க,மீறாதீங்க - வேக எல்லையை மீறாதீங்க,
  (18)தாண்டாதீங்க,தாண்டாதீங்க -எல்லைக்கோட்டைத் தாண்டாதீங்க,
  (19)தடுக்காதீங்க,தடுக்காதீங்க -போக்குவரத்தைத் தடுக்காதீங்க,
  (20)தடுக்காதீங்க,தடுக்காதீங்க- ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தடுக்காதீங்க,
  (21)தடுக்காதீங்க,தடுக்காதீங்க- எஸ்கார்ட் வாகனத்தைத் தடுக்காதீங்க,
 (22) தடுக்காதீங்க,தடுக்காதீங்க- தீயணைப்பு  வாகனத்தைத் தடுக்காதீங்க,
  (23)தடுக்காதீங்க,தடுக்காதீங்க- அவசர வாகனத்தைத் தடுக்காதீங்க,
  (24) முந்தாதீங்க,முந்தாதீங்க-வளைவுகளில் முந்தாதீங்க,
  (25)முந்தாதீங்க,முந்தாதீங்க-பாலங்களில்  முந்தாதீங்க,
 (26) முந்தாதீங்க,முந்தாதீங்க-இடதுபுறமாக  முந்தாதீங்க,
 (27) முந்தாதீங்க,முந்தாதீங்க- குறுகிய சாலைகளில் முந்தாதீங்க,
 (28)   முந்தாதீங்க,முந்தாதீங்க- சந்தேகப்பட்டால் முந்தாதீங்க,
 (29)  முந்தாதீங்க,முந்தாதீங்க- அனுமதி இல்லாமல் முந்தாதீங்க,
(30) பேசாதீங்க,பேசாதீங்க - வாகன ஓட்டும்போது பேசாதீங்க,
  (31)பேசாதீங்க,பேசாதீங்க - ஓட்டுனரிடம் பேசாதீங்க,
(32) ஏற்றாதீங்க,ஏற்றாதீங்க - அதிக பாரம் ஏற்றாதீங்க,
  (33) ஏற்றாதீங்க,ஏற்றாதீங்க - அகல பாரம் ஏற்றாதீங்க,
  (34)ஏறாதீங்க,ஏறாதீங்க - சரக்கு வாகனங்களில் ஏறாதீங்க,
  (35)ஏறாதீங்க,ஏறாதீங்க - ஓடும் பேருந்தில் ஏறாதீங்க,
  (36)இறங்காதீங்க,இறங்காதீங்க - ஓடும் பேருந்தில் இறங்காதீங்க,
  (37)கவனக்குறைவு,கவனக்குறைவு-கண்டிப்பாக விபத்துங்க,
  (38)கவனச்சிதறல்,கவனச்சிதறல் - கண்டிப்பாக விபத்துங்க,
  (39)குடிபோதையில்,குடிபோதையில் - 
                               வாகனத்தை ஓட்டாதீங்க,
  (40)தூக்கக்கலக்கத்தில்,தூக்கக்கலக்கத்தில்-
                              வாகனத்தை ஓட்டாதீங்க,
  (41)ஓய்வில்லாமல்,ஓய்வில்லாமல் - 
                               வாகனத்தை ஓட்டாதீங்க,
  (42)செல்போன் பேசிக்கொண்டு,பேசிக்கொண்டு - 
                             வாகனத்தை ஓட்டாதீங்க,
  (43) உடல்நலக்குறைவால்,உடல்நலக்குறைவால் - 
                          வாகனத்தை ஓட்டாதீங்க,
  (44) மனக்கலக்கத்தில்,மனக்கலக்கத்தில் - 
                      வாகனத்தை ஓட்டாதீங்க,
  (45) நமது தவறுகளே,தவறுகளே - 
                  விபத்துக்குக் காரணம் என்றுணர்வீர்,
   (46) உரிமம் எடுக்க எட்டுப்போடுங்க, -
                           உயிரைக்காக்க ஹெல்மெட் போடுங்க,
 (47) ஓட்டுனரின் முதல் கடமை-பாதுகாப்பே குறிக்கோளுங்க
  (47) தர்மம் தலை காக்கும் - தலைக்கவசம் உயிரைக்காக்கும்,
  (48) சாலையின் வேகம்- வாழ்வினில் சோகம்,
  (49) மெதுவாக சென்று வாங்க ரோட்டில்-
                    உங்க குடும்பம் காத்திருக்குதுங்க வீட்டில்,
   (50) முந்தாதீங்க வளைவில் - வரவேற்காதீங்க விளைவை,
   (51) வாகனத்தில் செல்போன் பேச்சு - ஒரே நொடியில் உயிர் போச்சு,
  (52)படியில் பயணம்-நொடியில் மரணம்,
          அடுத்த பதிவில் தொடரும்.............
   PARAMESDRIVER // THALAVADY - TAMILNADU SCIENCE FORUM
        




Wednesday, December 21, 2011

கற்போம்

                                                    கற்போம்
 அன்பு நண்பர்களே,வணக்கம்.
          இந்த பதிவில் தாங்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றிய விபரங்கள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக சில வலைத்தளங்களை பதிவிடுகிறேன். பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 (1) WWW.karpom.com, (2) www.suthanthira-menporul.com இதில் சென்றாலே பல வலைப்பதிவுகள் கிடைக்கப்பெறலாம். 
                 என 
     PARAMESDRIVER.BLOGSPOT.COM