Friday, August 5, 2011

32)தங்கம் ஓடி வந்த பாதை - இதுவும் கடந்து போகும்.



       உடைமையும் வறுமையும் ஓர்வழி நில்லா! அதேபோல்,
            தங்கத்தின் விலையும்  ஓர்வழி நில்லா!!
 



       அன்பு நண்பர்களே,வணக்கம்.
         அனைத்து தரப்பு  மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறிக் கொண்டேபோகிறது.

   அந்த தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு
     1930-ம் ஆண்டு  =   ரூபாய் 14 -  00மட்டுமே! ஆனால் இன்று, அதாவது 05-08-2011-ந் தேதி நிலவரப்படி ரூபாய் 18,420-00 ஆகும்.       


              தங்கம் விலை ஒரு கண்ணோட்டம்..


       வருடம்          --------           விலை விபரம் ஒரு பவுன்
          1930                  --------        ரூபாய்=14மட்டும்
       1935                  --------         ரூ =24
       1940                ------------     ரூ =28
       1945         -------------------   ரூ=49
       1950     -----------------------  ரூ =79
       1955     ----------------------  ரூ = 63
       1960    -------------------       ரூ =  88
       1965   ------------------          ரூ = 56
       1970  ----------------------     ரூ =147
       1975     ----------------------  ரூ = 432
       1980    -----------------------  ரூ = 1064
       1982    -------------------       ரூ =1280
       1983   ---------------------     ரூ =1320
       1984   --------------------      ரூ  =1420
       1985  -----------------------   ரூ  =1544
       1986  ----------------------     ரூ =1776
       1987   -----------------------  ரூ =1880
       1988  -----------------------   ரூ =2400
       1989 -----------------------    ரூ =2336
       1990 -----------------------     ரூ=2520
       1991  -----------------------   ரூ =2720
       1992  -----------------------   ரூ =3700
       1993   ------------------------ ரூ =3000
       1994  ------------------------- ரூ =3560
       1995 -------------------------- ரூ =3600
       1996 -------------------------   ரூ =4040
       1997  -------------------------  ரூ = 3680
       1998 -----------------------      ரூ =3320
       1999 ----------------------       ரூ =3440
       2000   -----------------------    ரூ=3480
       2001  -----------------------     ரூ= 3520
       2002  -------------------------   ரூ =4040
       2003 --------------------------  ரூ = 4400
       2005 ------------------------    ரூ =4640
       2006  ---------------------       ரூ  = 7680
       2007 ---------------------        ரூ  = 7600
      2008  ----------------------      ரூ =9200
      2009   ஜனவரி---------      ரூ  =10400
      2009பிப்ரவரி -----------    ரூ =11840
      2009 மார்ச்  -------------     ரூ = 11480
      2009 ஏப்ரல் ------------     ரூ =10944
     2010 --------------------           ரூ = 12500
     2011-ஆகஸ்ட் மாதம்05ந்தேதி 
    அன்று  ரூ = 18220-00 
       2011 ஆகஸ்டு 20ந்தேதி ரூ=21,420 - 00
   தகவல்==

 ''ஸ்ரீமகேந்திரா ஜூவல்லர்ஸ்'' உரிமையாளர்  திரு; மகேந்திரன், அவர்கள்.     சத்தியமங்கலம் ...





paramesdriver.blogspot.com /   konguthendral.blogspot.com

31)ஈரோடு புத்தகத் திருவிழா-2011

அன்பு நண்பர்களே, 
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.


 மக்கள் சிந்தனைப் பேரவை-ஈரோடு

வ.உ.சி. பூங்காவில் நுழைவு வாயில்




கண்காட்சியினைக்காண பள்ளிக்குழந்தைகளின் ஆர்வம்







































                    தினசரி நடக்கும் கலைநிகழ்ச்சிப்பட்டியல் விவரம்.






                  தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தொண்டர்கள் (ஆசிரியர் மற்றும் மாணவர்)

       நம்ம ஈரோடு மாநகரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பாக ஏழாம் ஆண்டு புத்தகத்திருவிழா வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்போது  நடைபெறுகிறது.  இந்த புத்தகத் திருவிழா-2011 கண்காட்சியில் பெயருக்கேற்றவாறு  ,புத்தகக் கடைகள் 200-க்கும் அதிகமாக நிறுவப்பட்டு ,புத்தகங்களும் மிக அதிக எண்ணிக்கையில் பல அரிய வகைப் புத்தகங்கள்,தொழில் நுட்பப் புத்தகங்கள்,மேலாண்மை நிர்வாகத்திற்கான புத்தகங்கள்,அறிவியல் ,புவியியல்,வரலாறு,அரசியல்,கணினி சம்பந்தமான புத்தகங்கள்,சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்கள்,பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பாட சம்பந்தமான புத்தகங்கள்,போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், என பல ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.





                                மக்கள் சிந்தனைப்பேரவைத் தொண்டர்கள்


                தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகவும் புத்தக அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. மக்கள் சிந்தனைப் பேரவைத் தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கு சுறு சுறுப்பாக இயங்கி பார்வையாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவது மிகவும் பாராட்டுக்கு உரியதாகும்.





        இது போன்ற அரியவகை கண்காட்சிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்,கல்வியாளர்கள்,அவசியம் கலந்து அறிவுச்செல்வங்களை அள்ளிச்செல்ல வேண்டும்.மேலும் அதிக அளவில் வருகையாகும்போது இக்கண்காட்சியை நடத்தும் மரியாதைக்குரிய மக்கள்சிந்தனைப் பேரவை நண்பர்களுக்கு ஊக்கம் கொடுத்ததுபோலவும் இருக்கும்.
 paramesdriver.blogspot.com //Sathy & Thalavadi