Wednesday, February 11, 2015

செவ்வாய் தோசம்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம்.
நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

உதாரணமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும். காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

செவ்வாய் ராகு சேர்க்கையில் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்.


 ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 1,2,4,7,8,12 ஆகிய
ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால் செவ்வாய்தோஷமாகும். ஆணின் இலக்கனத்திற்கு 2,7ல் செவ்வாய் இருக்கும்போது பெண்ணுக்கு 4,12 ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாகும்.

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் அல்லது செவ்வாய் தோஷ நிவர்த்தி:


செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு
இடத்திலிருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் 2மிடமாகி அது மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷ மில்லை.
செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 8மிடமாகி இது தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்ம் கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷமில்லை
குருவும் செவ்வாய்ம் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
சந்திரனும் செவ்வாய்யும் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,தோஷம் கிடையாது.
இப்படியெல்லாம் பார்க்கையில் 5 சதவீத மக்களுக்குதான் செவ்வாய்தோஷம் இருக்கும் என தெரிகிறது.

செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
மனதாலும் உடலாலும் முற்பிறவிகளில் நாம் செய்யக்கூடிய பாவ செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனை பாதிக்க கூடிய வகையில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு பின்பு பாப பலனாக வந்து சேர்கிறது. சுயநலமின்றி சமுதாய
நலனுக்காக நாம் செய்யும் சில செயல்கள் கூட தோஷங்களை ஏற்படுத்தலாம்.
 செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில்
மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல்,
தகாத உறவு, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு
மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை,
முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,இல்லற வாழ்க்கையின்
நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை,
தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம்
முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம். 
 செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?

செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல்.
உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும்,பெற்றோரிடம் பாசமின்மை,கண் நோய்,
தலையில் காயம்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை ,
சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம்,தற்புகழ்ச்சி முதலியன.
செவ்வாய் 2ல் இருந்தால் தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம்
பொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.தாராளமனசு ,ஊதாரி செலவு ,கபடமற்ற
வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன
செவ்வாய் 3ல் இருந்தால் சகோதர வகையில் பிரச்சனை
செவ்வாய் 4ல் இருந்தால் சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை,
மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து , கல்வியில் மந்தம் ,உறவினர்
சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு
ஆனாலும் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன.
செவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பிரச்சனை கர்பம் கலைதல் தத்து புத்திரம்...
செவ்வாய் 6ல் இருந்தால் இரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை
செவ்வாய் 7ல் இருந்தால் மனைவிகளால் ஏற்படும் பிரச்சனை.வாழ்க்கைத் துணை ,திருமணம் ,
மணவாழ்வு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனை.குறுக்கு புத்தி,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,
புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் முதலியன
செவ்வாய் 8ல் இருந்தால் பாலின உறுப்புகளில் ஏற்படு்ம் பிரச்சனை .ஆயுள் குறைபாடு,
மாங்கல்யம் குறைபாடு,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்,உறவினர்களிடம்
வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய் முதலியன
செவ்வாய் 12ல் இருந்தால் பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை,
மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ணநோய் ,வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூரகுணம்,
வீண் செலவுகள்,அறுவை சிகிச்சை, இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன.

பரிகார காலம்:

சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி
என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள்
செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
 வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில்
கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள
வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து
தந்து விட வேண்டும் 
 துவரை தானம்: உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில்
பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை
பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
 ஒரு ஜாதகருக்கு எட்டாமிடம் தரும் தொல்லைகள்..பற்றி பார்ப்போம்....
 பொதுவாக ஒருவரது வாழ்கையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களையும், பிரச்சனைகளையும் அறிய உதவுவது, எட்டாமிடமாகும். எட்டுக்குடயவனின்
திசா, புக்தி மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் திசா, புக்தி போன்றவை நடைபெறும்போது ஜாதகருக்கு பிரச்சனைகளும், சங்கடங்களும் பெருமளவில் ஏற்படும்

ஜென்ம லக்னத்தில் எட்டுக்குடையவர் இருந்திடப் பிறந்தவருக்குப் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். மனத தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும் இருக்கும். ஏதாவது ஒன்று ஏற்பட்டு ஜாதகரது நிம்மதியைக் கெடுத்து, வருத்தப்பட வைத்துவிடும்.

தன் குடும்ப வாக்குஸ்தானம் என்னும் இரண்டாம்பவதில் எட்டுகுரியவர் இருந்தால்,தொழில் அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ஜாதகர் அதை விட்டு விலகி, வேறொரு தொழில் அல்லது உத்தியோகத்துக்கு அலையும்படி நேரும.
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாகுறை ஏற்பட்டு பணத்துக்காக அலயநேரிடும். குடும்பத்தில் நிம்மதியிருக்காது.அவரசு பேச்சே
மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.


மூன்றாமிடத்தில் எட்டுக்குரியவர் இருக்கப் பிறந்தவர் சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இல்லாதபடியும், கடுமையான சொற்க்களைப் பேசி, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் நிலையை
யும் தரும்.

4மிடத்தில் 8 க்குரியவர் இருந்தால் தகப்பனார் தேடி வைத்தசொத்தை அழிப்பவராகவும், குழந்தைகளுடன் கருது வேறுபாடு கொள்பவராகவும்,
மனை, வீடு, வாகனம் இவைகளில் பிரச்சனை எதிர்கொள்பவராகவும் இருப்பார்

5மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் நிலையில்லாத புத்தியும், நிதானமில்லாத போக்கும், அரசாங்கத்தால் தொல்லையும், தரம் குறைந்தவர்களுடன் தொடர்பும் அதனால் அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திப்பதுமாக இருக்கும்

6மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் மற்றவர்களுடன் மனக்கசப்பும் , அடிக்கடி சண்டை சச்சரவுக்கு ஆளாகுதலும் நேரிடும்.
எட்டுகுரியவருடன் சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி நோய்ஏற்படும்
7மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் ஒழுக்கமில்லாதவர்களுடன் தொடர்பும், ஆசன வாயில் நோய்த் தொல்லையும் வரும். எட்டுக்குரியவர் அசுபர்களுடன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருந்தால் பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். . செவ்வாய் எட்டுக்குரியவருடன் சேர்ந்து இந்த பாவத்தில் இருந்தால் ஜாதகர் அமைதியாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவராகவும் இருப்பார்.

எட்டுக்குரியவர் எட்டிலேயே இருந்தால் ஜாதகருக்கு நிறைந்த ஆயுளும் அதிகமான நிலபுலன்களும், மற்றவர்களால் அறிய முடியாத ரகசிய விவகாரங்களில் ஈடுபடுபவராகவும் ஜாதகர் இருப்பார்.

பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் ஜாதகருக்கு தகப்பனாருடன் சுமூகமான உறவிருக்காது. முன்னோர்களின் சாபம் இவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடும். மனதில்
எப்போதும் ஏதாவது குழப்பமும், தேவையற்ற பயமும் இருக்கும். இவருடன் நீண்டகாலம் யாரும் பழக மாட்டார்கள். தொழிலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.
அடிக்கடி தொழில்அல்லது உத்யோகத்தை விட்டு விட்டு வேற தொழில் அல்லது வேலை தேடும் அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

ஜாதகத்தில் எட்டுக்குரியவர் பத்தாம் பாவத்தில் இருந்தால்
வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் அவமானங்களும்,
வேலைப்பளு, ஊதியக்குறைவு, மரியாதைக் குறைவு போன்ற அதிருப்தியான பலன்களை அதிகம் சந்திப்பர்.

லாபஸ்தானத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் அவர் ஈட்டும் வருமானம் பல வழிகளிலும் கரைந்து காணாமல் போய்விடும். இவரது உழைப்பை பலரும் உறிஞ்சி பயனடைவர். பிள்ளைகளால் மனக்கசப்பும் அதிருப்தியும் இருக்கும்.

பன்னிரண்டாமிடத்தில் எட்டுக்குரியவர் நின்றிட்டால், வேலையில் கெட்டிக்காரனாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல் வேலை செய்வது, இல்லாவிட்டால் மனம் போனபடி சுற்றுவது அல்லது முடங்கிக் கிடப்பது என்று தன் விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு காணப்படும். 
திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்?
மணமகன் மணமகள் ஜாதகத்தில்

1. முதலில் ஆண் பெண் இரு ஜாதகத்திலும் எதாவது ஒரு கேந்திரம் வலுப்பெற்று இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்

2 ஆயுள் பாவமான எட்டாம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்

3. களத்திர பாவமான ஏழாம் இடமும் சுத்தமாக இருக்கிறதா தீய கிரகங்களின் பார்வை படாமல் இருக்கிறதா எனறு பார்க்க வேண்டும்

4 பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடம் வலுப்பெற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

5. இருவர் ஜாதகத்திலும் கிரக அமைப்பு , லக்கிண அமைப்பு ,யோக அமைப்பு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.

6. இருவர் ஜாதகத்திலும், திருமண நடைப்பெறும் காலத்திலும் ஒரே தசை நடக்க கூடாது தசா புத்தியும் ஒன்றாக இருக்க கூடாது

இவைகளை நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே நட்ச்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டும். திருமண பொருத்தத்திவல் ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ரட்ச்சி பொருத்தம் என்ற மாங்கல்ய பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்

சிலர் மிருகசீரிடம் , மகம் , சுவாதி, அனுஷம் ஆகிய நட்ச்சத்திரங்களில்
பிறந்த ஆண் பெண்ணிற்கு எந்த வித விவாக பொருத்தமும் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறான நடைமுறையாகும்

எல்லோருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது முக்கியமான நிகழ்ச்சி ஆகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது மனம் ஒத்து செயல்படுவது நிதானமாக பொருமையாக செயல்படுவது முறைப்படி செயல்படுவது, குழந்தைகள் வளர்ப்பு என பல விஷயஙகள்இருக்கிறது.
 ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?

1. 1மிடம் .லக்னம். இது ஜாதகரை பற்றி அறிய. பிரச்சனைக்கு உரிய தீர்வு என்ன? அது எப்போது?

2. 2மிடம். பணவரவினங்களை பற்றி அறிய, கண்ணை பற்றி அறிய, வாக்கு, புதியன வருதல்,
புதிய நபர் வருகை பற்றி,ஷேர் மார்க்கெட், இளைய சகோதரத்தின் இடமாற்றம்.
குழந்தையின் தொழில் வெற்றி,தந்தையின் நோய்,செருப்பு,கண்,பண இருப்பு,
விலை மதிப்புமிக்க பொருள், ஜாதகரது குடும்பம், வருமானம், வரவேண்டிய பணம் முதலியன

3. 3மிடம். சகோதரம்,தைரியம், வீரியம்\வீரம்,வெற்றி, அண்டை வீடுகள்,குறு தூரப் பயணம்,
மெயில\போன் செய்திகள், தகவல் தொடர்பு, வீடு விற்பனை, வேலைக்காரர்கள், செய்திகள்,
பேரம் பேசுதல்,பாகப்பிரிவினை செய்தல், ஆரம்ப கல்வித் தடை, நிருபர்கள், புரோக்கர்கள் பற்றி

4. 4மிடம் தாய், சுகம், குழந்தைக்கு வைத்தியம் செய்வது, வீட்டுக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள்,
வீடு வாசல் ,மாடு,கன்று, கல்லறை,இரகசிய வாழ்க்கையை பற்றி, கற்பு பற்றி, தோட்டம், கட்டிடங்கள்,
விவசாயம், ஆரம்பக் கல்வி,வியாபாரம், நீர் ஊற்றுக்கள், திருடி வைத்திருக்கும் பொருட்கள்,
புதையல் பற்றி.

5. 5மிடம் குழந்தையைப்பற்றி, குழந்தை உண்டா? எப்போது,எத்தனை, குழந்தை உற்பத்தி திறன்பாதிப்பு,
குழந்தைக்கு தொந்தரவு, பாட்டன்,பாட்டி,பூர்வ ஜென்ம புண்யம், மனம், எண்ணம், வம்சா வழி,காதலைப்பற்றி
சந்தோஷம் பற்றி, அதீர்ஷ்டம்,இஷ்ட தெய்வம்,சிற்றின்பம், மந்திர உச்சாடனம்,உபாசனை, இஷ்ட தெய்வம்,
கற்பழிப்பு,வழிபாடு,ஸ்டாக் எக்சேஞ்ச் சூதாட்டம் முதலியன

6. 6மிடம் கடனை பற்றி,நோய்யை பற்றியோ,வழக்கு பற்றி, ஜீரணம், ஊழியர், சிறுதொழில்,
சிறிய வருமானம் தரும் தொழில்,வெற்றிக்கான தடை, கஞ்சத்தனம், மிகப்பேராசை,
திருட்டு பற்றி, ஜெயில், மூத்த சகோதர பிரச்சினை, வளர்ப்புப் பிராணிகள், வீட்டு மிருகங்கள்
பற்றி அறிய

7. 7மிடம் திருமணம் , திருமண வாழ்க்கை , மனைவி, சட்டப்படியான அங்கீகாரம், சமூகப் பழக்க வழக்கம், நண்பர்கள்,
ஆயுளுக்குத் தொந்தரவு, திருடனைப் பற்றி, வேலையாட்களின் பணம், பொது ஜனத் தொடர்பு,
அபராதம், ஒரு பொருள் திரும்பக் கிடைத்தல் பற்றி,வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும்
இரகசிய விரோதிகளால் ஏற்படும் தொந்தரவு பற்றி, காணாமல் போனது எப்போது கிடைக்கும்


8. ஆயுள்பற்றி, காணாமல் போனது பற்றி, அவமானம் பற்றி,கண்டம் பற்றி, இயற்கையான மரணம்,
கெட்ட பயம்,வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு, வட்டி கட்டுதல்,திடீர் அதிஷ்டம், உயில்தடை,
கெட்ட செயல், வரதட்சணை,சீர், மாங்கல்யம், காணாமல் போனது எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும்,
ஆப்ரேஷன் பற்றி, கர்பப்பை பற்றி,வரவேண்டிய பணம், மரணம்.

9. தந்தை,மத ஆச்சாரம்,குல வழக்கம்,குருவை பற்றி,உடனே பலன் தரும் தெய்வம், மதத்தின் மீதானபற்று,
மறுஉலக தொடர்பு, பெரியவர்கள், தூரத்து செய்திகள்,திருமண மண்டபம்,கலாச்சார விருப்பம்,
நீண்ட தூரப் பயணம், தொழில் விரயம், தெய்வ வழிப்பாட்டு இடம்,தம்பியின் மனைவி,
பணம் புரட்டுதல்,ஜபம்,உயர் கல்வி ,வெளிநாட்டுப் பயணம்,

10. தொழில்,ஜீவனம் ,புகழ்,கௌரவம்,சமூக அந்தஸ்த்து,கர்மம்,கருமாதி,இறுதிச்சடங்கு,
புனித வழிபாடு,குழந்தையின் நோய்,மூத்த சகோதரத்தின் விரயம்,தத்துக் குழந்தைகள்,
தீர்ப்பு,மரணம் அடைந்தவர்களை பற்றி.

11. லாபம்,மூத்த சகோதரம்,எதீர்பார்த்தது நன்மையில் முடியுமா?,நண்பர்கள்,ஆசைகள்,
முழுமையாக எதீர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசனை. உதவி கிடைக்குமிடம்
வெற்றி,மருமகன்,மருமகள்,நீர்ப் பாசன வசதிகளுடன்கூடிய விவசாய நிலங்கள்.
அரசு மன்றங்கள்\குழுக்கள் (சட்ட சபை,ஊராட்சி,நகராட்சி),நிரந்தர நட்பு\நண்பர்கள்,திட்டங்கள்
வரவேண்டிய பணம் கிடைக்கும் நேரம் முதலியன.

12. செலவு\விரையம், மருத்துவம், நஷ்டம் முதலியவை பற்றி முக்தியடைதல் மோட்சம் கிடைத்தல் பற்றி.

இதையும் பாருங்க...
    செவ்வாய் தோஷம் பற்றி.........
 செவ்வாய் தோஷம் என்பது 2,4,7,8,12 ஆகிய வீடுகளிலும் , லக்னத்திலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படுகிறது.செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான தோஷமாக கருதபடுகிறது. ஆனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என முடிவு செய்வதற்கு முன்னால் சில விதிவிலக்குகளையும் (exceptions) கவனித்து பிறகே முடிவு செய்ய வேண்டும் .சில விதிவிலக்குகளை கீழே கொடுத்து உள்ளேன். மேலும் இதுபோன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. உங்கள் ஜோதிடரை கலந்து ஆலோசித்து பிறகு செவ்வாய் தோஷ ஜாதகங்களை பற்றி முடிவு செய்யவும்.

  • செவ்வாய் மேஷ ராசி அல்லது விருசிக ராசியில் ஆட்சி அடைந்து இருந்தாலோ மற்றும் மகர ராசியில் உச்சம் அடைந்து இருந்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை எனலாம்
  • கடகத்தில் நீச்சம் அடைந்தாலும் தோஷம் இல்லை
  • சிம்ம லக்னம் மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
  • செவ்வாய் குரு அல்லது சனி அல்லது சூரியன் அல்லது புதன் அல்லது சந்திரன் ஆகிய கிரகங்களில் எதாவுது ஒன்றுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்கபட்டாலோ செவ்வாய் தோஷம் இல்லை.

Wednesday, December 31, 2014

LOGO - LIST


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.நமது இயக்கம் சம்பந்தப்பட்ட லோகோ மற்றும் பிற படங்கள் தேவைப்படும்போது தேடல் காரணமாக நேரம் விரயமாகிறது.எனவே இங்கு பதிவிட்டுள்ளேன்.





















அரசு போக்குவரத்துக்கழகம் தொழிலாளர்களின் போராட்டம் ஏன்?


மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்..பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்..ஆனால் மக்களிடையே மற்றவர்களிடையே நன்மதிப்பை சம்பாதிக்க ஆயுள்வரை நல்லொழுக்கத்தைப்பேணி காக்க வேண்டும்..
              அரசு போக்குவரத்துத்தொழிலாளர்களின் போராட்டம் செய்யக்காரணம் உங்க பார்வைக்காக..
முயற்சிக்கலாம் வாங்க!.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இனிவருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பொதுவான இடத்தில் அதாவது மக்கள் மன்றத்தில் விவாதிக்க தயாரா? இங்கு குறிப்பிட்ட '' சம்பந்தப்பட்ட அனைவரும்'' என்பவர்கள்(1)அரசு போக்குவரத்துக்கழகத்தின் அனைத்து அதிகாரிகள்,(2)அரசு போக்குவரத்துக்கழகங்களின் அனைத்துப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள்,மற்றும் பணியாளர்கள்,(3)நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டஅரசுத்துறைகள்,(4)மக்கள் பிரதிநிதிகள்,(5)சமூக நல ஆர்வலர்கள்,(6)பொதுமக்கள்(7)போக்குவரத்து வாகன உற்பத்தியாளர்கள்,மற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள்(8)ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள்,(9)நீதித்துறைகள்,(10) பாதிக்கப்பட்டோர்,(11)அன்றாடம் பயணிப்போர் (12)பயணிகள் சங்கங்கள் (13)மக்கள் மன்றங்கள் (14)அனைத்து மாணவர்கள் அமைப்புகள்(15)நடுநிலை சிந்தனையாளர்கள் என அனைவரையும் குறிப்பிடுகிறேன்.பொதுவான இடம் என்பது மக்கள் கூடும் இடங்களில் பொதுமேடை அமைத்து விவாதிப்பது.அதுவும் நாகரீகமாக நியாயமாக விவாதம் செய்வது.அவரவர் தவறுகளை அவர்களே உணர வைப்பது...இன்னும்.... இன்னும்..... இன்னும்........தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுக....செயல்படுத்துவோம் வாங்க..



விவாதிக்கலாம் வாங்க!....
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அத்தியாவசிய சேவையான பேருந்துப் போக்குவரத்து நிர்வாகம் மக்களுக்கு உண்மையிலேயே சிறப்பான சேவை செய்கிறதா??? சேவைக்குறைபாட்டிற்கு காரணம் யார்? அரசாங்கமா?அரசு போக்குவரத்துக்கழகமா? போக்குவரத்து தொழிலாளர்களா? பயணிகளா? உங்க எண்ணத்தை மற்றும் அனுபவத்தை பகிருங்க... முதல் கருத்தாக எனது அனுபவமான கருத்து உண்மையிலேயே தொழிலாளர்கள் என்றால் ஏற்க இயலாது..காரணம் அனுபவமிக்க தொழிலாளர்கள் எங்கோ ஒரு மூலையில் யாரும் ஏறாத ஓட்டைப் பேருந்தில் பணி புரிய நிர்ப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றுவதால்.முறையான சீனியாரிட்டி முறையில் பணி ஒதுக்கீடு செய்யாமல் ...சொகுசுப்பேருந்து,நீண்டதூரப்பேருந்து இரவுநேர பேருந்து,போன்ற பேருந்துகளில் அனுபவமே இல்லாத,போதிய பயிற்சி இல்லாத நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்தை வைத்து அவ்வாறான பேருந்துகளில்பணியாற்றுவதால்தான் அத்தனை முறைகேடுகளும் நடைபெறுகின்றன..தற்போதைய ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அவர்களின் பணியின்போது கடமையும்,பொறுப்பும் பற்றியே தெரியாத நிலை..பயணிகளை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களாக எண்ணிக்கொள்ளாத நிலை..அதனால்தான் பயணிகளைப்பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல் செயல்படும் அவலநிலை..இறுதியில் தொழிலாளர்கள் மீது வீண்பழி....



இனியாவது பதில் கிடைக்குமா????கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படுமா??
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மக்கள் சேவைக்காக இயக்கப்படும் பேருந்துகளில் நஷ்டத்தைக் கணக்குக் காட்டி டீசலை மிச்சம் செய்...வருமானத்தைப்பெருக்கு..என்று கூடுதலான தொல்லைகளை மாதந்தோறும் கூடுதலாக்கிக்கொண்டே வரும் நிர்வாகத்தின் செயல்பாடு சரியா? ஒரு பேருந்தின் சட்டப்படியான கொள்ளளவு 55 நபர் என்றால் ஏற்றுவதோ 150க்கும் அதிகமான பயணிகள்??? அப்படியானால் இலவசமாக பயணிக்கும் மாணவர்களை கணக்கெடுப்பது எப்படி?..அளவுக்கதிகமாக ஏற்றிக்கொண்டு அபாயமாக இயக்கி வரும் நிலையில் அதே பேருந்தில் இன்னும் ஏற்று என்று கூறும் நிர்வாகம் ஒரு பேருந்தில் எத்தனை பயணிகளை ஏற்றுவது என்று எண்ணிக்கையில் கூறவேண்டும் அல்லவா?அல்லது மக்களே நீங்களாவது கூறுங்க..எத்தனை பயணிகளை ஒரேதடவையில் ஏற்றுவது? என்று கூறுங்க...டீசல் சிக்கனப்படுத்து என்றால் ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓட்டலாம் என்று ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஓட்டி அதன்படி அளவு கொடுக்கலாம் அல்லவா?அதையும் செய்வதில்லை..வாகன உற்பத்தியாளரே அதாவது அசோக் லேலண்ட் கம்பெனி பொறியாளருக்கே சித்தோடு பயிற்சியின்போது என் சந்தேகமான கேள்வியான ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்று சொல்லத் தெரியவில்லை?? என்ன கொடுமை இது...தொழிலாளர்களின் ஆயுள்காப்பீட்டுப்பணத்தை,அஞ்சலக சிறுசேமிப்பு மாதாந்திரப்பணத்தை,விடுப்பு சரண்டர் பணத்தை,பிரவிடன்ட் பண்ட் பணத்தை,மாதம் தவறாமல் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அந்தந்தத்துறைகளுக்கு உரிய முறையில் கட்டாமல் முறைகேடு செய்வது தனியார்துறையில்கூட நடைபெறாத அநீதி அல்லவா? மற்ற அரசுத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு,அலுவலர்களுக்கு,பணியாளர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு அரசு போக்குவரத்துக்கழகத்தில் மட்டும் இல்லையே? ஓட்டுநர்,நடத்துநர் மட்டுமல்லங்க,தொழில்நுட்ப பணியாளர்களும் படும் அவஸ்தை வெளியில் சொல்லமுடியாத கொடுமை....

மறக்கமுடியுமா?
உண்மையை சொல்லித்தானே ஆக வேண்டும்!!!.......
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
போக்குவரத்துத்தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி முகநூல் நண்பர் அதிரை தவ்ஹீத் சகோதரி அவர்களின் ஆதங்கம் இதோ...
''அதிரை தவ்ஹீத் சகோதரி - பாவம் ஒருபக்கம் பழிஒருபக்கம்.என்பார்கள்
அதைபோல்தான் உங்களை போன்றோரின்நிலையும்
அரசு என்பது அதிகாரிகள்மட்டும்மல்ல பொதுமக்களும் சேர்த்துதான்
பொதுமக்களுக்கு எவ்வளவு கஸ்டம் யோசித்துபாருங்கள்
உங்களின் நியாயமான கோரிக்கை அரசுக்கு வேறுவழியில் தெரியபடுத்தியிருக்களாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் வேளைநிருத்தம் போராட்டம் செய்யலாம்'' என்று
மேற்படி தனது வேதனையை தெரிவித்துள்ள நண்பருக்கு பதில் கொடுக்கவேண்டிய கடமை என் போன்றோருக்கு உள்ளது. அதற்கான பதில்..
கடந்த பதினைந்து மாதங்களாக பல்வேறு தளங்களில் தொழிலாளர்களின் பிரச்சினையையும்,குறைகளையும் தீர்த்து வைக்கச்சொல்லி ஆர்ப்பாட்டம்,பேரணி,என்றெல்லாம் நடத்தியும்,திருச்சிராப்பள்ளியில் எச்சரிக்கைக்கான பேரணி நடத்தியும்,சட்டப்படியான முறையில் வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தும் இந்த அரசு மிகவும் அலட்சியம் செய்து விட்டது (2001லேயே வேலை நிறுத்தம் நடந்தவிதம் உணரவில்லைபோலும்)..
தற்போது பேசுவதாக இறங்கி வந்துள்ள அரசாங்கம் முன்னரே செய்து இருந்தால் இந்த அவலம் நடந்திருக்காது அல்லவா?..

இது மட்டும் அல்லாமல் ,தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளத்தைக்கூட ஒரு மாதம் தள்ளிக்கொடுப்பது..ஆயுள் காப்பீடு ,அஞ்சலக சிறு சேமிப்பு,வீடு கட்ட வாங்கிய வங்கிக்கடன்,பிராவிடன்ட் பண்டு போன்ற தொழிலாளர்களின் சம்பளத்தில் மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய துறைகளில் செலுத்துவது இல்லை.மாறாக தொழிலாளர்களின் பணத்தை முறைகேடாக நிர்வாகம் செலவழித்து வருகிறது.
இது தனியார் துறையில் கூட நடக்காத கேவலம்.இதனால் பாதிப்பு தொழிலாளிக்குத்தானே!..

தாங்கள் தயவு செய்து ஈரோடு வடக்கு ஆயுள் காப்பீடு அலுவலகத்தைத்தொடர்பு கொண்டு கேளுங்க..மற்றும் ஈரோடு தலைமை அஞ்சலத்தை தொடர்பு கொண்டு கேளுங்க.கோயமுத்தூர் HDFC வங்கியைக் கேளுங்க...
போதாக்குறைக்கு டீசலை செலவழிக்காதே என்றால் எப்படி என்ற வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பதில்லை..ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்தாவது சம்பந்தப்பட்ட பேருந்தை ஓட்டி டீசல் செலவு நிர்ணயம் செய்து ஓட்டுநர்களுக்கு போதிய விழிப்புணர்வு அறிவிக்கலாம் அல்லவா??
இதைவிட மோசமான அவலநிலை என்னவென்றால் ..அசோக் லேலண்டு கம்பெனியாளரே வருகை தந்து பயிற்சியளித்தபோது எனது கேள்வியான ''ஒருபுதிய பேருந்து அனுமதித்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லிட்டர் டீசல் செலவுக்கு எத்தனை கி.மீ. தூரம் சமதளத்தில்,மலைப்பகுதியில்,நகர்ப்பகுதியில் இயக்கலாம்'' என்று கேட்டபோது தெரியாது? என்று மழுப்பிக்கொண்டு பதில் சொல்லும் படு கேவலமான நிலை..
போதாக்குறைக்கு .சில தரங்கெட்ட அதிகாரிகளின் சுயநலத்திற்காக வேண்டுமென்றே பொய்வழக்குப்போட்டு தொழிலாளர்களை பழிவாங்குவது..இதற்குத்தாங்க கண்காணிப்புக்கேமரா பொருத்துங்க! என்று ஒருமுறை பேட்டியளித்த கலைஞர் டிவியிலும் கூறியுள்ளேன்.தற்போது நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நான் கருத்துரை ஆற்றச் செல்லும் அனைத்து நிகழ்வுகளிலும்,விழாக்களிலும் சொல்லி வருகிறேன்.நாட்டைக்காக்கும் பணிக்கே பயன்படும் கண்காணிப்புக்கேமரா பேருந்து நடவடிக்கையை கண்காணிக்காதா??? செலவும் ஒரேமுறை செலவு அதுவும் மிகக்குறைவான செலவில் இருபத்தி நான்கு மணி நேரமும் சென்னை தலைமையகத்திலேயே கூட கண்காணிக்கலாம்.நேர்மையான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.அநியாயமாக தண்டனை பெற மாட்டார்கள்..ஒரு மாதத்திற்கு வழித்தடப்பரிசோதனை என்ற பெயரில் சொகுசாக உலா வரும் அதிகாரிகளுக்கு? ஆங்காங்கே தொழிலாளர்களிடம் வறட்டுக் கௌரவம் காட்டும் அதிகாரிகளுக்கு
(சம்பளமாக கொடுக்கப்படும் மக்கள் வரிப்பணமான)
மாதாமாதம் ஆகும் இலட்சக்கணக்கானரூபாய் செலவும் மீதமாகும்.அவர்களது சுய தேவைகளை நிவர்த்தி செய்யச்சொல்லி தொழிலாளர்களுக்குத்தொல்லை தரும் கேவலமும் இல்லாமற்போகும்.இது எனது அனுபவம்..தேவைப்பட்டால் தங்களது இன்பாக்ஸ்க்கு அனுப்பி வைக்கிறேன்.அல்லது ஓரிடத்தில் கருத்துக்களம் விவாத மன்றம் அமைத்து அனைத்து தரப்பினரையும் அழைத்து விவாதிக்க ஏற்பாடு செய்தால் நான் தயார்..ஆதாரத்துடன் விவாதிக்க..ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி வரமாட்டார்..அவர்களையும் வரவழைக்க முடியுமா??
சாப்ட்வேர் கம்பெனிகளில் நடத்தும் 360 டிகிரி அப்ரைசல் முறையை கடைப்பிடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டுகிறேன்.அவர்கள் பெறும் சம்பளமும் மக்களின் வரிப்பணம்தாங்க..
முதலில் கீழிருந்து மேல் வரை அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.தீய பழக்கங்கள் இல்லாதவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.அப்போதுதாங்க என் போன்றவர்களின் நல்ல பழக்கங்களான புகைத்தல் இல்லாமை,மது போதை பழக்கம் இல்லாமை,பிறமாது உறவு இல்லாமை போன்றவை தனிமனித ஒழுக்கம் பற்றி அனைவரும் உணர முடியும்..இதற்காக என்போன்றவர்களை பாராட்ட வேண்டாம்.தொல்லை கொடுக்காமல் இருந்தால் சரி..அதாவது அதிகாரிகளுடன் மது அருந்த வரச்சொல்லாமல் இருந்தால் சரி.(இன்னும் பல தீயவைகள் நடந்தேறி வருகின்றன.அவைகள் நாகரீகம் கருதி வெளியிட விரும்பவில்லைங்க).இது.2000இல் தாளவாடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கிளை மேலாளர் ராமனாதன் அவர்கள் சுய நலனுக்காக என்னிடம் கேவலமாக நடந்துகொண்டது.அதுமட்டுமின்றி அப்போது பணியிலிருந்த செக்யூரிட்டி கார்டு அவர்கள் அந்த மானேஜருக்கு மாமா வேலை பார்த்து காவல் இருந்தது.அதைக் கண்டித்த எனக்கு இட மாறுதல் செய்து சொல்லொண்ணா துன்பங்களைக்கொடுத்தது..மறக்க முடியுமா?? அவசியம் ஒவ்வொரு கிளையிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும்.அப்போதுதாங்க பணி புரியும் இடம் புனிதம் ஆகும்.பணியாற்றுபவர்களுக்கு பய உணர்வு வரும்..இதோ பகிர்ந்துள்ள போர்டுகளிலுள்ள வாசகங்களைப்படித்துப்பாருங்க...இது தங்களுக்கான மாதிரிதாங்க.தற்போது தாளவாடி கிளையில்பணியாற்றும் கிளை மேலாளர் உட்பட அனைவருமே சிறப்பான முறையில் பணியாற்றுகிறார்கள்..அவர்களுக்கு எனது பதிவால் வருத்தமடைந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
உண்மையைச்சொல்லித்தானே ஆக வேண்டும்.
மனித நேயம் வேண்டும் முதலில்.மக்களின் துன்பங்களை உணர வேண்டும்..மக்களோடு மக்களாக வாழ்ந்து பார்க்க வேண்டும்.மனச்சாட்சி வேண்டும்.
கீழே  தங்களது பார்வைக்கான ஒரு உதாரணமே! 
        4.12.2011அன்று அனைத்து தொழிற்சங்கங்களின் அறிவிப்பு பலகைகளில் கிளை மேலாளர் பற்றிய விமர்சனம்





Tuesday, December 30, 2014

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கடவுளா?மந்திரவாதிகளா?

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.28.12.2014 ஞாயிறு முதல் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தால் தமிழக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கான காரணங்களில் சில தங்களது பார்வைக்காக..
ஓட்டுநர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி பற்றி பார்ப்போம்.
            (1) பேருந்து வாகன உற்பத்தியாளர்களுக்கே புதிய பேருந்து ஒருலிட்டர் டீசல் செலவழித்தால் எத்தனை கிலோமீட்டர் ஓடும்
என்று கூறத்தெரியாத நிலையில்
(டீசலிலும் மூன்று வகையான தரம் உள்ளன.அவற்றில் எந்த தரமுள்ள டீசல் கழகத்தில் உபயோகம் எனத்தெரியாது)   
          ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து வழித்தடத்தில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்யாத நிலையில் பணியிலிருக்கும் ஓட்டுநர்களே  பழைய பேருந்துகளில்,அதிக பயணிகளை ஏற்றிய நிலையில்,வழித்தடக்குறுக்கீடு,தடைகள்,அதிக நிறுத்தங்கள்,குறைவான பிரேக் என பல்வேறு சிக்கல்களில் பேருந்து பராமரிப்பு குறைந்தநிலையில்,முகப்பு விளக்குகள் வெளிச்சமே இல்லாத இரவு இயக்கத்தில்,வாகன வேகத்தைக் குறைத்துள்ள நிலையில்,இஞ்சின் சக்தியைக் குறைத்துள்ள நிலையில்,தனியார் பேருந்துகளுக்கு இணையாக நிமிட நேர இடைவெளியில் போட்டியிட்டு அதுவும் அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி எடுத்து இயக்கி பயணநேரத்தை நிர்வகித்து வரும் சிக்கலான நிலையில் ஒரு லிட்டர் டீசலுக்கு ஆறு கிலோமீட்டர் தூரம் இயக்க வேண்டும் என்ற கிளை நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடி?(இதன் விளக்கம் கடைசியில் பதிவிடுகிறேன்.)
            (2)தற்போது ''புதிய தலைமுறை தொலைக்காட்சி''யில் ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த பேட்டியில் வாகனம் ஓட்ட உரிமம் இருந்தாலே அவர்கள் சிறந்த ஓட்டுநர்கள்தான் அவர்களை வைத்து பேருந்துகளை இயக்குகிறோம் என்று உரிமம் இருந்தாலே சிறந்த ஓட்டுநர் என்று சான்றளித்துள்ள நிலையில்  தனியார் வாகனங்களிலும்,பல மாநிலங்களுக்கும் ஓட்டும் தொழிலைச்செய்து தற்போது அரசுப் பேருந்து ஓட்டும் என்னைப்போல முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணி (உரிமம் எடுத்துள்ள தேதியின்படி) அனுபவம் பெற்று இருந்தும்,எங்களைப்போன்றவர்களை  அப்போதைய பொதுமேலாளர் அவர்கள் சோதனை ஓட்டம் பார்த்து மூன்று மாதங்கள் பவானிசாகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி கொடுத்து பிறகு வாகனம் ஓட்ட அனுமதியளித்துள்ள நிலையில் தற்போது பணிக்கு வந்துள்ள புதிய அதிகாரிகள் எங்களைப்பார்த்து ஓட்டுநர் பணிக்கே லாயக்கில்லை? எவனய்யா லைசென்ஸ்கொடுத்தது? யாருய்யா வேலைக்கு சேர்த்தது? என்று கேவலமாகத்திட்டும் அவலநிலை!..
              (3)மனநிலை மற்றும் உடல்நிலை சரியில்லை என்றாலும் ஒரு ஷிப்டு பணி புரிந்துவிட்டு விடுப்பு எடு! என்று நிர்ப்பந்தித்து மனித உயிருடன் விளையாடும் ஆபத்தான பணி என்ற உண்மை தெரிந்தும்? மோட்டார் வாகன சட்டத்தையே குழிதோண்டி புதைக்கும் அவலநிலை  அவலநிலை!(உடல்நிலையும்,மனநிலையும் பொறுமை காத்து வேலை செய்யுமோ?)
           (4)அனைத்து போக்குவரத்துக்கழகங்களிலும் தினமும் அனைத்து தொழிலாளர்களுக்கும்  புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதே பயிற்சியாளர்களை ஓட்டுநர் பயிற்றுநர்களை வைத்து வழித்தடங்களில் ஒரு பேருந்தை ஓட்டவைத்து ஒரு லிட்டர் டீசலுக்கு இயக்கும் தூரத்தை நிர்ணயம் செய்யாமல் (வாகன உற்பத்தியாளர்களுக்கே ஒரு லிட்டர் செலவுக்கு எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று தெரியாது அதனால் அவர்களை விடுங்க) பாதையின் தன்மை பயணிகளின் ஏறும் மற்றும் இறங்கும் தன்மை  கொள்ளளவுக்கும் அதிகமாக ஏறும் பயணிகளின் ஆரோக்கியம்,மற்றும் நோயாளிகள்,வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,என பயணிகளின் தன்மை பற்றி கவலைப்படாத நிலை,
          (5) வானூர்திக்கு தனிவழி, கப்பலுக்கு தனிவழி, புகைவண்டிக்குக்கூட தனிவழி,ஆனால் சாலைப்போக்குவரத்தில் பேருந்துக்கு மட்டும் பொது வழி?!?...அதாவது பல்வேறு தன்மையுள்ள ,பராமரிப்புள்ள ,ஒரு வாகனம் செல்லும் பாதையில்,பல்வேறு வேகங்களில்,பல்வேறு எடைகளுள்ள,பல்வேறு வடிங்களுள்ள, பல வாகனங்கள் செல்லும் நிலையில் பல்வேறு மனநிலையிலுள்ள பொதுச்சாலை அனைவருக்கும் சொந்தம் என்று தெரிந்தும் சாலைவிதிகளை அலட்சியம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் பெரும் நிறுவன அதிபர்கள்,பெரும்முதலாளிகள்  போன்ற சொந்த வாகன ஓட்டிகள்,அதிகார வர்க்கம்,உள்ளூர்வாசிகள்,அரசியல்வர்க்கம்,அதிகாரிகளின் தாமதமான தவறான போக்கு,பிற வாகன ஓட்டிகளின் தவறான ஓட்டம் மற்றும் வழிவிடாமல் மெதுவாக நடுப்பாதையில் வாகனம் ஓட்டுவது,(அதாவது பேருந்துஓட்டுநர்களை பழி எடுப்பதாக நினைத்து பேருந்தில் பயணிப்பவர்களை பாதிப்படையச்செய்வது) தற்காலிக குறுக்கீடுகள்,தடைகள்,சாலை ஆக்கிரமிப்புகள்,என எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு இயக்கும் பரிதாப நிலையில் ஒரு பேருந்து ஒரு லிட்டருக்கு அது என்ன தரம்?என்றும் தெரியாது..வாகன உற்பத்தியாளருக்கும் தெரியாது...ஓட்டுநர் பயிற்சியாளர்களை வைத்து ஒருமுறை ஓட்டி சோதித்தும் டீசல் செலவு நிர்ணயம் செய்யமுடியாது....கண்காணிப்புக்கேமராவும் பொருத்த முடியாது..கடமையாற்றும் நேர்மையான ஓட்டுநர்களையும் தெரியாது...ஏதோ ஒரு கேஸ் எழுதியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் மலைப்பகுதியில்,அதுவும் இரவு நேரத்தில் போக்குவரத்தே இல்லாத இடத்தில் பேருந்தை சோதிக்கிறேன் என்ற தோற்றத்தில் பொய்யான வழக்கினைப்போட்டு பழிவாங்கும்  படு கேவலமான நிலை..
      (6) ஒரு பேருந்தின் கொள்ளளவு 55 பயணிகள் என்றாலும் சூழ்நிலை காரணமாக 150 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தினுள் காலியாக இடமே  இல்லாதநிலையில் வழித்தடத்தில் பயணிகளையோ,பள்ளி மாணவர்களையோ ஏற்ற இயலாமல் விட்டுவர வேண்டிய சூழ்நிலையில் ஏற்றி வராமைக்கு கொடுக்கப்படும் தண்டனைகள்..இதை எப்படி ஏற்க முடியும்?உண்மைநிலை அறியவேண்டியது நிர்வாகத்தின் கடமையல்லவா?..
           (7)அனுபவமுள்ள மற்றும் ஒழுக்கமான தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காதது...
இன்னும் ஏராளமான பிரச்சினைகளை,நெருக்கடிகளை,பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தித்து.சகித்து.பொறுமையுடன் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற கடமையின் காரணமாக மந்திரவாதிகளாகவும்,கடவுள்போலவும் (கடவுளுக்கு உணர்வு உள்ளதா?) உணர்ச்சியற்று பணி புரியும் நிலை..
இதற்கெல்லாம் தற்போதைக்கு ஒரே வழி.. அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமராக்களை அதுவும் TWO FACE என்னும் இருமுகமுள்ள கேமராக்களைப்  பொருத்தி பேருந்தின் உள்ளே மற்றும் வெளியே  இருபத்திநான்கு மணி நேரமும் கண்காணித்து  உண்மையான நிலை அறிய வேண்டும்.செலவு ஒரே முறை அதுவும் குறைந்து செலவு..தற்போதுள்ள பரிசோதனை முறையால் ஏகப்பட்ட செலவு  அதுவும் ஒரு பேருந்தை சில நிமிடங்கள் மட்டுமே சோதிக்கும் குறைபாடான சோதனை..(செலவு ஒரு அதிகாரிக்கு மாத சம்பளம் ரூபாய் 60,000.00க்கும் மேல். உடன் வரும் பரிசோதகர்கள் இருவருக்கு மாதம் ரூபாய்30,000.00 வீதம் 60000.00 ரூபாய் சம்பளம்,ஜீப் ஓட்டுநருக்கு மாதம் ரூபாய்20000.00 அதுபோக ஜீப் பராமரிப்புக்கான செலவு மற்றும் எரிபொருள் செலவு நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்க இவ்வாறு ஒரு மாதத்திற்கான செலவால் அனைத்து பேருந்துகளுக்கும் கேமரா பொருத்திவிடலாம்..


 சாதாரண டீக்கடையில் கூட கண்காணிப்புக்கேமரா பொருத்தி பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ள இன்றைய நிலையில்...பேருந்துகளுக்கும் பொருத்தி  பயணிகளுக்கும்  முழு நேரப் பாதுகாப்பு, பணியிலிருக்கும் தொழிலாளர்களின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிப்பும்  செய்யலாம்...
               இந்த அரசு செய்யுமா???


Monday, December 29, 2014

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சரியா?

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.இன்றைய விரும்பத்தகாத நிகழ்வான அரசு போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் சரியா?அதாவது  2014 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் அரசு பேருந்துகளின் வேலை நிறுத்தத்திற்கான காரணங்களில் சிலவற்றை  எனது அனுபவம் மற்றும் எண்ணத்திற்கு எட்டிய சில தகவல்களை இங்கு பொதுமக்களாகிய தங்களுக்காக பகிர்கிறேன்.
  தற்போது  புதிய தலைமுறை தொலைக்காட்சி உட்பட பல்வேறு ஊடகங்கள் அரசுப்பேருந்தையே நம்பி தினமும் பயணிக்கும் கிராமப்பகுதியிலுள்ள,மலைப்பகுதியிலுள்ள ஏழை மக்கள்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்ற உண்மையான நிலையை எடுத்துரைக்கும் நிலையை உணர்கிறோம் காரணம் அரசுப்போக்குவரத்துக்கழகங்களில் தொழிலாளர்களாகிய எங்களது குடும்பம் உட்பட உறவினர்கள்,நண்பர்கள் என மற்ற அனைவருமே பேருந்துகளில் பயணிப்பவர்களே!..அனைவரின் சிரமங்களையும் உணர்ந்து   இதற்காக மிகுந்த வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.......இருப்பினும் பெரும்பாலான தொழிலாளர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகிவரும் காரணத்தால் தவிர்க்கமுடியாததாகிவிட்ட இந்த நியாயமான வேலை நிறுத்தத்திற்கு காரணத்தை இங்கு தங்களின் பார்வைக்காக பதிவிடுகிறேன்.


        மேற்கண்ட அறிவிப்பு மூலமாக அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கான காரணம் என்றாலும் என் போன்ற ஒவ்வொரு தொழிலாளர்களின்  தனிப்பட்ட காரணம் மற்றும் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் நேர்மையற்ற கஷ்டங்கள், சில தொழிளர்களால் பயணிகள் அனுபவித்து வரும் துன்பங்கள் இவைகளுக்கு உரிய நிவாரணம் வேண்டி உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்தக்கோரி இந்தபதிவின் வாயிலாக தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
 முதலில் பயணிகளுக்கான கோரிக்கை;
   அரசு போக்குவரத்துக்கழகங்களில் நீண்ட தூர,அதுவும் இரவு நேர வழத்தடங்களில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களே கடமையை மறந்து விட்டு தனியாக பயணிக்கும் இளவயது பெண் பயணி என்று பாராமல் அலட்சியம் செய்யும் கேவலமான நிலையை சீர்படுத்த வேண்டும்.முன்பதிவு செய்த பயணிக்கே உரிய இருக்கையை வழங்க வேண்டும்.நடத்துநர் சொந்தம் ,நண்பர்கள் என்ற காரணத்திற்காக முன்பதிவு செய்த இருக்கையை மாற்றச்சொல்லி துன்புறுத்தி பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடாது.இரவுநேர மற்றும் நீண்ட தூரப்பயணிக்கும்போது ஏற்படும் இன்னல்களை உடனே புகார் கொடுக்க அனைத்து பேருந்துகளிலும் கிளை மேலாளர்,பொதுமேலாளர்,சம்பந்தப்பட்ட காவல்துறை தொடர்பு எண்களை எழுதி அனைத்து பயணிகள் பார்வைக்குப் படும்வகையில் வைத்து பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.அனைவரையும் பெயர்வில்லை அணிந்திருக்க கட்டாயமாக்க வேண்டும்.
முதலில் அனுபவமுள்ள ஓட்டுநர்களை மட்டும் நீண்டதூர வழித்தடப் பேருந்துகளில் பணிபுரிய ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதாது.நடத்துநர்களையும் அவ்வாறு அனுபவம்,ஒழுக்கம்,அனுசரிப்பு,சகிப்புத்தன்மையுள்ளவர்களை நியமித்து பயணிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.குறுக்குவழியில் யாருக்கோ ஏதோ ஒரு பணம் மட்டும் மாதந்தோறும் வருமானமாக வந்தால் போதும்?என்ற கேவலநிலையை ஒழித்து பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கடமையை கடைபிடிக்க வேண்டும்.(கடந்த காலத்தில் சென்னையிலிருந்து  சத்தியமங்கலத்திற்கு அரசுப்பேருந்துவில்  இரவு பயணத்திற்காக முன்பதிவு செய்து பயணித்த  பெண் இளவயது பெண் பயணி ஒருவர் நடத்துநரால் துன்பத்திற்கு ஆளாகி அந்த நிகழ்வின் உண்மை நிலை அறிய முதலமைச்சர் தனிப்பிரிவிற்கே புகார் அனுப்பியும் அந்தப்புகார் சம்பந்தப்பட்ட ஈரோடு மண்டலத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் இன்றுவரை பாதிப்புக்குள்ளான பயணிக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் பயணியே முழுத்தவறுக்கும்? காரணம் என தவறான முடிவை தயாரித்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள கொடுமை?நீதி விசாரணை என்பது இருவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.ஆனால் இங்கு குற்றவாளியை மட்டும் அழைத்து பேசி முடிவு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.இந்தக்கொடுமையை எங்கே சென்று முறையிடுவது?..ஆதாரம் என்னிடம் உள்ளது.)
அடுத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கை;
அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் 
(1)தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக செலுத்தப்படும் ஆயுள் காப்பீடு,அஞ்சலக சிறுசேமிப்பு,வீடு கட்ட வாங்கிய கடன்,போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மாதந்தோறும் தொழிலாளர்கள் செலுத்தும் அதாவது தொழிலாளிகளிடத்தில் பிடித்தம் செய்யும் தொகையினை அந்தந்த துறைகளுக்கே உரியமுறையில் செலுத்தி தொழிலாளர்களுக்கு உரியத் தார்மீக உரிமையை,கடமையைச் செய்ய வேண்டும்.
(2)எரிபொருள் சேமிப்பு அவசியம் தேவையே!ஆனால் வாகன உற்பத்தியாளர்களான அசோக் லைலேண்டு கம்பெனியாளரே பயிற்சியளிக்கும்போது ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கி.மீ. என்ற நிர்ணயத்தைக் கூற மறுப்பது அல்லது தெரியாது என்று மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.உண்மைநிலை கூற வேண்டும்.அல்லது அரசு போக்குவரத்துக்கழகமே ஓட்டுநர் பயிற்சியாளரை வைத்து சமதளம் மற்றும் மலைப்பகுதி மற்றும் நகர வழித்தடங்களில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்ய வேண்டும்.அதிக நெருக்கடி கொடுத்து வாகனத்தை உருட்டுவது மற்றும் நியூட்டரல் செய்து ஓட்டும் அவலநிலையை போக்கி பயணிகளுக்கு பாதுகாப்புத்தர வேண்டும்.
(3) சாலைப்போக்குவரத்தில் பேருந்து இயக்குவது வான்வழித்தடத்தைப்போல,நீர்வழித்தடத்தைப்போல,புகைவண்டி வழித்தடத்தைப்போல தனி வழித்தடம் இல்லை என்பதை உணர்ந்து பேருந்து இயக்கத்தின்போது ஏற்படும் திடீர் குறுக்கீடுகள்,தடைகள்,நெரிசல்கள்,போன்ற நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(4)அரசு போக்குவரத்துக்கழகம் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ஏற்றப்படும் பயணிகள் அனுமதி கொள்ளளவு எண்ணிக்கையையும்  கவனத்தில் கொண்டு நிர்வாகம் எத்தனை பயணிகளை அதிகபட்சமாக ஏற்றலாம் என்ற  அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.அதை விடுத்து 150பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இடையில் நிறுத்தங்களில் ஏற்ற இயலாத சூழலில் புகார் பெறும்போது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

(5)தற்போதைய போக்குவரத்துப்பயன்பாட்டில் பேருந்து நிறுத்த,இயக்க,மாணவர்கள்,குழந்தைகள்,நோயாளிகள்,முதியோர்,மாற்றுதிறனாளிகள்,
பெண்கள் போன்ற பயணிகள் ஏற,இறங்க  ஆகும் கால தாமதத்தையும் கணக்கில் கொண்டு இயக்க நேரத்தை நிர்வகிக்க வேண்டும்.
(5)அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும்.
(6)அரசுப்பேருந்துகள் அனைத்தும் பொதுமக்கள் சேவைக்காக இயக்கப்படுகின்றன என்ற போதிலும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.
(7)அரசு போக்குவரத்து அதிகாரிகள் அவர்களது சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்குதல்,பொய்வழக்குப்போடுதல் போன்ற கேவலமான நடவடிக்கையை விட்டுஒழிக்க வேண்டும்.
(8)உள்ளக விசாரணைப்பிரிவு போதிய காரணங்களையும்,சாட்சியங்களையும் வைத்து நடுநிலையாக விசாரிது முடிவு எடுக்க வேண்டும்.உதாரணமாக ஸ்பிரிங் பிளேட்டுகள் நடுப்பகுதி உடைவதற்கு காரணம் என்பதை உணராமல் ஓட்டுநரே என்பதை தவிர்க்க வேண்டும்.தண்டனையை விலக்க வேண்டும்.அந்த ஸ்பிரிங் பிளேட்டுகள் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள ஆயுட்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.அவை தாங்கும் எடை அளவினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(9) பணி முடித்த ஓட்டுநர்களுக்கு  டீசல் செலவு பற்றி தொலைபேசி வாயிலாக வீட்டிற்கே தொடர்பு கொண்டு கேவலமாக திட்டுவதை தவிர்க்க வேண்டும்.
(10)அரசியல் காரணங்களுக்காக அனுபவம் வாய்ந்த ,உண்மையாக உழைக்கும் தொழிலாளர்களை! பயணிகள் வரத்தே இல்லாத கடைக்கோடி கிராமங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்துவிட்டு அனுபவமில்லாத,பயிற்சியில்லாத,பணியின் தன்மை தெரியாத,தான் பயணிகளின் வேலையாள் என்பதை மறந்து அதிகாரப்போக்கு செய்யும் அறியாத தன்மையுள்ளவர்களை நீண்டதூர மற்றும் இரவு நேர இயக்கப் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்து அதன் விளைவுகளால்? பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்படும் செயலை தவிர்க்க வேண்டும்.
அரசுப்பேருந்துகளின் இயக்கத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் சோதனைக்காக செலவிடும் மாதந்திரச்செலவு தொகை கணக்கிட்டுப்பார்த்தால் மிக அதிக அளவு.அதே சமயம்  அதற்கேற்ற பயன் முறைக்கேடாகவே உள்ளது.ஒவ்வொரு பேருந்துகளிலும் கண்காணிப்புக்கேமரா பொருத்தி கண்காணித்தால் வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்திநான்கு மணி நேரமும்  உண்மையான நிலையை அறிய முடியும்.இதனால் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கும்.நேர்மையாக நிர்வாகமும் நடைபெறும்.இதனால் ஒரேமுறை குறைந்த செலவே ஆகும்.குறிப்பாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அவலநிலை இல்லாமற் போகும்.தவறு செய்ய நினைப்பவர்களும்  பயணிகளிடம் கனிவாகவும் எச்சரிக்கையாகவும் பணி புரிவார்கள்...
          இவற்றில் தவறான கோரிக்கை என்று நிர்வாகமோ,பொதுமக்களோ,தொழிலாளர்களோ  கருதினால் அதற்காக எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் அதனை சட்டப்படியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
         காரணம் மக்களுக்கு நல்ல சேவை செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்...
    இன்னும் பல காரணங்கள் உள்ளன இருப்பினும் தங்களது கவனத்திற்கு இதுவே  போதும் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன். நன்றிங்க..
     (இடுகையிட்ட தேதி;30.12.2014 காலை 8.00மணி) (பார்வை 19568)

Thursday, October 16, 2014

விடுதலைப் புலிகள் ஒரு பார்வை...

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய வரலாற்றுச்சிறப்பு மிக்க கட்டுரை இதோ தங்களது பார்வைக்காக....

                                தமிழீழ விடுதலைப் புலிகள் –(16 - 10 -2014) தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.
                               1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.
                                   அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.
                           தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.
அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
                         முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
                     குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
                           போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.
                           தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:
                      
            01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

                02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
 

03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.


                     தமிழீழ போராட்டட மரபியல் வரலாறுகள் சிலவற்றை ” தமிழீழ படைத்துறைகள் – தமிழீழ போராட்ட வரலாறுகள்” பக்கத்தில் உள்ளடக்கப்பட்டவையின் இணைப்புக்கள்………….
தமிழீழ போராட்ட வரலாறு….
பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்
ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
புதிய தமிழ்ப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
தமிழீழப் போர் 1
இந்தியத் தலையீடு
திம்புப் பேச்சுவார்த்தை
சாகும்வரையிலான உண்ணாவிரதம்
பெங்களுர் மாநாடு
தமிழீழம் திரும்புதல்
தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்
சுதுமலைப் பிரகடனம்
படையணிகள் மற்றும் துறைகள்…..

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
தமிழீழக் கடற்புலிகள்
கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி
கரும்புலிகள்
தமிழீழ வான்படை
கேணல் கிட்டு பீரங்கிப் படையணி
தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு
2ம் லெப் மாலதி படையணி
விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள்
தமிழீழ காவல்துறை
தமிழீழ தேசிய துணைப்படை
ஈழநாதம் பத்திரிகை
புலிகளின் குரல்
அருச்சுனா ஒளிக்கலைப் பிரிவு
அன்புச்சோலை மூதாளர் பேணலகம்
காந்தரூபன் அறிவுச்சோலை
செஞ்சோலை
தமிழீழ நீதித்துறை
தமிழீழ சட்டக் கல்லூரி
தமிழீழ படைத்துறைப் பள்ளி
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.

1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.

அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.

தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.

தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.

அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.

இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.

குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.

போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.

ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

தமிழீழ போராட்டட மரபியல் வரலாறுகள் சிலவற்றை ” தமிழீழ படைத்துறைகள் – தமிழீழ போராட்ட வரலாறுகள்” பக்கத்தில் உள்ளடக்கப்பட்டவையின் இணைப்புக்கள்………….

தமிழீழ போராட்ட வரலாறு….

பிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்
ஆரம்பகால புரட்சித் தோழர்கள்
புதிய தமிழ்ப் புலிகளும் அவர்களின் செயற்பாடுகளும்
புதிய தமிழ்ப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்
தமிழீழப் போர் 1
இந்தியத் தலையீடு
திம்புப் பேச்சுவார்த்தை
சாகும்வரையிலான உண்ணாவிரதம்
பெங்களுர் மாநாடு
தமிழீழம் திரும்புதல்
தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு
இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்
சுதுமலைப் பிரகடனம்
படையணிகள் மற்றும் துறைகள்…..

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி
தமிழீழக் கடற்புலிகள்
கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் படையணி
கரும்புலிகள்
தமிழீழ வான்படை
கேணல் கிட்டு பீரங்கிப் படையணி
தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு
2ம் லெப் மாலதி படையணி
விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள்
தமிழீழ காவல்துறை
தமிழீழ தேசிய துணைப்படை
ஈழநாதம் பத்திரிகை
புலிகளின் குரல்
அருச்சுனா ஒளிக்கலைப் பிரிவு
அன்புச்சோலை மூதாளர் பேணலகம்
காந்தரூபன் அறிவுச்சோலை
செஞ்சோலை
தமிழீழ நீதித்துறை
தமிழீழ சட்டக் கல்லூரி
தமிழீழ படைத்துறைப் பள்ளி
விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்
தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Sunday, October 12, 2014

ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை...







  • நீங்களும் வேறு 2 பேர்கள் உம் இதை விரும்புகிறீர்கள்.
  • Parameswaran Driver