Sunday, August 2, 2015

சமூக நலன் கருதி இதனை பகிருகிறேன்.

 முதலமைச்சர் தனிப்பிரிவு எல்லாம் நம்பாதீங்க.....
TNSTC சட்டப்பிரிவு நீதி தவறி செயல்படுகிறது? .



Vijai Kaartik இன் புகைப்படம்.

 மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். இன்று அதாவது 2015 ஆகஸ்டு 3 ந்தேதி ஆடிப்பதினெட்டு பண்டிகையின்போது Face Book  நண்பர் Vijai Kaartik அவர்களால் முகநூலில் பகிரப்பட்ட செய்தியும் அதற்கு நான் அனுபவித்த நிகழ்வை அடிப்படையாக வைத்து சமூகத்திற்கு  கொடுத்த பதிலும் தங்களது கவனத்திற்காக..
எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......

"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக

தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)

தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மட்டும் பொது மக்கள் மீது அக்கறையும்,அன்பும்,பாசமும்,காட்டினால் மட்டும் போதுமா? பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா!....
  கடந்த 2014ஜூன் முதல் தேதியன்று முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாருக்கு இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
http://paramesdriver.blogspot.com வலைப்பக்கத்தில்
2014ஜூன் 1 ந் தேதியிட்ட பதிவினை பார்வையிடுங்க..
  என அன்பன்
  C.பரமேஸ்வரன். 9585600733
Parameswaran Driver, Vijai Kaartik இன் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
23 நிமி. · தொகுத்தது · 


  • Balasubramaniam Balasubramaniam, Sankaramuthukumar Sadayan மற்றும் வேறு 2 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.
  • Parameswaran Driver மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மட்டும் பொது மக்கள் மீது அக்கறையும்,அன்பும்,பாசமும்,காட்டினால் மட்டும் போதுமா? பொதுமக்களிடம் நேரிடைத்தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகளும்,அ.தி.மு.க. பொறுப்பாளர்களும் மேற்படி அக்கறைகொள்ள வேண்டும் அல்லவா!....
  • Thindal Subramanian Perumal முதலமைச்சர் தனிப்பிரிவு நம்பாதீங்க.....
  • Veeramani A முதலமைச்சரின் தனிப்பரிவு ஒரு போஸ்ட்மேன் போலத்தான்.உங்கள ் மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி அவர்கள் கொடுக்கும் பதிலை உங்களுக்கு அனுப்புவார கள். நீங கள் கூறிய நடத்துனர் செல்வாக்கு மிக்கவராக இருக்கலாம்.எப்படியிருந்தாலும்நீங்கள் கூறுவதுபோல் நடத்துனரிடம் விளக்கம் பெறாமல் மனுவை முடிததுவைக்க வாய்ப்புகுறைவு.உங்களுககு வந்த பதில் கடிதத்தில் என்ன குறிப்பிட்டுள்ளது என்று தெரிந்தால் நல்லது
  • Parameswaran Driver மரியாதைக்குரிய Veeramani A ஐயா அவர்களே,வணக்கம். சம்பந்தப்பட்ட நடத்துநரை மட்டும் விசாரித்தால் உண்மை தெரிந்து கொள்ள முடியுமா? சம்பந்தப்பட்ட புகார்தாரரை அல்லது பாதிக்கப்பட்டவரை அழைத்து விவரம் கேட்டறிய வேண்டாமா? அடுத்து எனக்கு கடிதம் அனுப்பவில்லை அதே சமயம் முதலமைச்சர் தனிப்பிரிவு பக்கத்தில் சம்பந்தப்பட்ட பயணிதான் அவருடைய இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் இருக்கை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் நடத்துநர்தான் எச்சரித்து அமர வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பயணிக்கு ஒதுக்கப்பட்ட முன்பதிவு இருக்கை எண் 9 ல் அல்லவா! அமர வைத்திருக்க வேண்டும்.9 ம் எண் இருக்கு உள்ள மூன்று நபர் இருக்கையில் இடையில் ஏறிய குடும்பத்தினரை அமரவைத்துவிட்டு 9ம் எண் இருக்கைக்காக முன்பதிவு செய்த பயணியை 22 வது இருக்கைக்கு அனுப்பி அமர வைத்தது ஏன்? இதை இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்தால்தாங்க உண்மை தெரியும்.இதை ஏன் செய்யவில்லை.நடத்துநருக்கு செல்வாக்கு இருந்தால் அதற்கு பேருந்து போக்குவரத்திற்கு முதல் எஜமானராகிய பயணிக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்?பணி புரியும்போது நடத்துநருக்கு உள்ள பொறுப்பும்,கடமையும் என்ன? இந்த நிகழ்வால் தவறு யார் மீது என்பதை விட சட்டப்பிரிவில் புகாரை விசாரிக்கும் முறை என்ன? என்றுதான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.இது சாமானியரும் தெரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் என்னிட்டம் கேள்வி ஒன்று கேட்கத்தோன்றலாம்.அதாவது இவ்வளவு கூறும் நான் ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யவில்லை? என்று காரணம் (1) அரசு போக்குவரத்து எனக்கு வாழ்வளித்து வருகிறது.(2)இந்த நிகழ்வை ஆதாரமாக பள்ளிகள்தோறும் விழிப்புணர்வு கொடுத்துவர பயன்படுத்துகிறேன்.(3)தங்ளிடம்கூட தற்போது விவாதம் செய்ய காரணமாக இருக்கிறது.தங்களது ஆலோசனையை எதிர்பார்க்கும் அன்பன் C.பரமேஸ்வரன்.
  • Veeramani A நன்றி திரு பரமேஸ்வரன் அவர்களே நடத்துனரை விசாரித்து அவரது வாக்குமூலத்தை பெற்றபிறகு புகாரின் தன்மை குறித்து நேரடி விசாரணை நடத்துவார்கள்.ஆனால் டத்துனரின் வாக குமூலத்தை மட்டுமே வைத்து வழக்கு முடிக்கப்பட்டுள்தால் நடத்துனர் செல்வாக்கானவர் என்று கூறினேனே தவிர அது சரி என்று கூறவில்ை்.போக்குவரத்து கழகம் இதனைகையாண்டவிதம் சந்தேகத்திறகு இடமளிக்கிறது.
    Parameswaran Driver மரியாதைக்குரிய Veeramani A ஐயா அவர்களே,வணக்கம்.தங்களது பதிலுரைக்கு மிக்க நன்றிங்க.எனது ஆதங்கம் என்னவெனில் இதே பாதிப்பு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் அந்த சட்டப்பிரிவு அதிகாரியின் மகளுக்கு நேர்ந்திருந்தால்? அதிகாரிகளின் மகளுக்கு நேர்ந்திருந்தால்? அரசியல்வாதிகளின் மகளுக்கு நேர்ந்திருந்தால்? ஆகா?ஓகோ? என்று கைகொட்டி சிரித்து மிகுந்த சந்தோசம் அடைந்து இருப்பார்களா? பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்களே! சமூக விரோதப்போக்கை வளர்த்துவிடும் இவர்களுக்கும் இது போன்ற அனுபவம் ஏற்படும்.நிதி என்றுமே நிலையானது இல்லைங்க,அதே சமயம் நீதி என்றும் நிலையானது...விதை விதைப்பவன் நிச்சயம் விதை அறுப்பான்...நன்றியுடன் அன்பன் C.பரமேஸ்வரன்.
    பிடித்திருக்கிறது · 19 நிமி.



    • Babugee Nadar தம் சொந்த தொழிலாளருக்கு சாதகமாக நடந்த கிளை மேலாளரின் ஓழுங்கீனம்...இதை குறுப்பிட்டு மீண்டும் பழைய பதிவெண்னையும் பொருளில் காண்பித்து, நகலை இணைத்து அனுப்புங்கள்...நான் இரண்டு கார்பரேசன் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்...தனி பிரிவை குறை சொல்லி பயன் இல்லை...பலோ அப் நாம் தான் செய்ய வேண்டும்....தமிழகம் முழுவதும் மனு வரும் பெரும் பணி...

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முதலமைச்சர் தனிப்பிரிவு எல்லாம் நம்பாதீங்க.....
TNSTC சட்டப்பிரிவு யாருக்காக செயல்படுகிறது? .
இந்த கருத்து பற்றி விவாதத்திற்கு நான் என்றும் தயாராவே உள்ளேன். எந்த விசாரணைக்கும் எப்போதும் தயாராகவே உள்ளேன்.

 

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் எனது மகளுக்கு கடந்த ஆண்டில் அதுவும் முன்பதிவு செய்து சென்னையிலிருந்து சத்தியமங்கலம் வரை
(PNR NUMBER U7522670 // DATE OF JOURNEY 30/05/2014 // TIME OF DEPARTURE 20;00HRS // TRIP CODE # 2000CHESTMCC020 // ROUTE # 40709 // SEAT # 9 // OB REFERENCE # OB2962896 // TOTAL FARE 297.00RS // ADULT - FEMALE)
             தனியாள் பெண் பயணியாக, இரவுநேர நெடுந்தூர பயணியாக பயணித்தபோது அப்பேருந்தில் பணிபுரியும் நடத்துநராலேயே (எனக்கு மிகவும் பழக்கமானவர்கூட) சட்டத்திற்குட்பட்டபடி உரிய பாதுகாப்பு கொடுக்காமல் வருமானம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கத்தில் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வேதனைப்பட வைத்துவிட்டார்..
இந்நிகழ்வால் வேதனைப்பட்ட நான் மற்ற பயணிகளுக்காவது பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நிர்வாகத்திடமோ,தொழிற்சங்கத்திடமோ முறையிட்டால்கூட பேரம் பேசி சமாதானம் செய்து முடக்கிவிடுவார்கள் என்று கருதி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கே அனுப்பியிருந்தேன்.
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு
அனுப்பிய கோரிக்கை எண் 2014 / 782012 / KB தேதி 01 - 06 -2014

இந்த செயல் அனைத்தும் இளவயதுடைய தனிநபரான பெண் ஒருத்திக்கு இரவுநேர நீண்டதூர வழித்தட இயக்கத்தில் இருந்த அரசுப்பேருந்தில் பணியில் இருந்த பொறுப்பற்ற நடத்துநரால் நேர்ந்த கதி.
(அப்போது நடத்துனர் என்னிடமே கூறிய பதில் வேறு அதை நேரில் கேட்பவர்களுக்கு மட்டுமே கூறுகிறேன்.அல்லது பொதுவிசாரணை நடத்தப்படும்பட்சத்தில் வெளிப்படையாக அங்கு கூறுகிறேன்.இந்தப்பதிவின் நோக்கமே இனியாவது மற்ற பயணிகளுக்கு இதுபோன்ற தொல்லை &ஆபத்து இருக்கக்கூடாது என்பதுதான்)
மேற்படி புகாரை கோவை கோட்டத்திற்கு அனுப்பி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திலுள்ள சட்டப்பிரிவு சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு இன்றுவரை எவ்வித தகவலும் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நடத்துநருக்கு சாதகமாக ஆதரவுகொடுத்து பதிலளித்து அந்தப் புகாரை முடித்துவைத்துவிட்டார்கள். அதாவது பொதுமக்களிக்காக இயங்கும் சட்டப்பிரிவு குறைந்தபட்சம் புகார்தாரரையாவது அழைத்து விவரம் கேட்டறிந்து இருக்கலாம் அல்லவா?
அதைக்கூட செய்யவில்லை என்றால் TNSTC சட்டப்பிரிவு யாருக்காக செயல்படுகிறது? என்பதை இதன்வாயிலாக தெரிந்துகொள்ளுங்க...
எனவே தங்களுக்கு ஒரே தீர்வு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அல்லது நீதிமன்றத்தில் புகார் செய்யுங்க...

No comments:

Post a Comment