Saturday, May 2, 2015

ஜெயலலிதா - 2015

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். ஜெயலலிதா என்னும் சரித்திர நாயகி பற்றி காண்போம்.


ஜெயலலிதா_ஒரு_இரும்பு_மனுஷி :
அடிக்கடி இணையத்திலும் முக நூலிலும் ஜெயலலிதா சோபன் பாபு போட்டோவை போடுவதிலும், அதை எல்லோரும் பார்க்கும் பார்வையிலும், பேசும் பேச்சுக்களிலும் இருக்கும் எண்ணத்தை யாரும் யூகிக்க இயலும்.. நான் கட்சிகாரனல்ல ... நான் மனபூர்வமாக நேசிக்கும் ஒரு மனுசியை பற்றி தெரிந்ததை கூறுகிறேன் ... இதில் ஏளன படுத்தவோ, பகிரங்க படுத்தவோ ஒன்றும் இல்லை.. அவரே அதை மறைதிருக்கவில்லை ...
இதில் தவறேதும் இருக்கிறதா என்ன...தன் வாழ்வை மறைக்காமல் கூறியதன் வெளிப்பாடே இந்த போட்டோ .. எல்லா அரசியல் வாதிகள் போல மறைக்கவோ, புளுகவோ, இல்லையே., அன்றே அரசியலுக்கு வருவது தெரிந்திருந்தால் அவர் இந்த பேட்டியை தந்திருக்கமாட்டார்.. தந்திருந்தாலும் என்ன ??
இன்று அரசியல்வாதிகள் வாழும் வாழ்க்கைக்கு அது ஒன்றும் அவ்வளவு மாசு அல்ல ...

இதிலிருந்து புலப்படும் உண்மை " அவர் என்றுமே அரசியலுக்கு வரவிரும்பவே இல்லை " என்பதே...
தனக்கான அமைதியான சந்தோசமான வாழ்வை அடையமுடியாமல் தடுத்த நயவஞ்சகர்கள் இடையே தன வாழ்வை எப்படியாவது அமைத்து கொண்டு புகழ் வெளிச்சத்தில் இருந்து வெளியேறவே ஜெயலலிதா விரும்பினார்... மீண்டும் மீண்டும் அவரின் சொந்த விருப்பை பறித்து சினிமாவிலும், அரசியலிலும் அவரை தள்ளவே தான் அவர் அரசியலிலாவது தன வாழக்கையை அமைத்துக்கொள்ள விரும்பி தனக்கான சரித்திரத்தை தானே அமைக்க துவங்கினார்.. அப்படி வந்த தன்னையே உருவாக்கிக்கொண்ட இன்னொருவர் ராதிகா ..
இயல்பாக ஜெயலலிதா குடும்பம், குழந்தை என தன வாழ்வை அமைத்துகொள்ளவே விரும்பினார் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி அவராக வந்து நுழையவே இல்லை .. மெட்ரிக்கில் தமிழ்நாட்டிலேயே முதல் மாணவியாக வந்தவர் ஜெயலலிதா .. அவர் படிப்பை நிறுத்தி சினிமாவில் கொண்டு வந்தது அவர் தாயின் பொருளாதார நிர்ப்பந்தம் ..
பல மொழிகளை பேசும் வல்லமையும், தீர்க்கமான அறிவும், புத்திசாலித்தனமும் இருந்தும் அவர் நினைத்த வாழ்வை அடைய முடியாது அவர் துரதிர்ஷ்ட்ம்... அதே நேரம் கருணாநிதியை எதிர்க்க ஒருவர் இல்லாமல் போயிருந்தால் தமிழ்நாடு என்ன ஆயிருக்கும் ?? அப்பப்பா.. யோசிக்க கூட முடியவில்லை ...
எத்தனையோ முறை சினிமாவில் இருந்து அவர் வெளியேற முயற்சித்ததும், அது முடியாமல் மீண்டும் சினிமாவிலேயே இருக்கவைக்கபட்டார், சினிமாவில் தவிர ஒரு பொழுதும் அவர் யாருக்காகவும் நடித்ததில்லை ... கோபமாகட்டும், ஆவேசமாகட்டும், சூட்டிங் ஸ்பாட்டிலேயே கர்ஜித்து விடுவார்.. எந்த தயாரிப்பாளருக்கும் அவர் ஒரு போதும் கூழை கும்பிடும் போட்டதில்லை .. எந்த ஹீரோவுக்கும் அவர் வாய்ப்புக்க்காகவேனும் நயைந்து ஒரு சிரிப்பும் சிரித்ததில்லை .... எப்பெற்பட்டவரையும் "ஷட் அப் " என்று சொல்லி விட்டு போய்கொண்டே இருப்பார்.. தன சாட் முடிந்ததும் புத்தககங்கள் தவிர ஏறெடுத்தும் யாரையும் கவனிக்கக்கூட மாட்டார் என்று யாவரும் கூறி கேள்விப்பட்டதுண்டு ...
அவரின் ஆசைகளோ, காதலோ, அமைதியான வாழ்வோ எல்லாமே அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன, தனிமையாக்க பட்டார்.. தாயும் இறந்தபின் யாருமில்லாத தனிமரமானார் .. அதற்க்கு பின்புதான் வேறு வழியில்லாமல், போக்கிடமில்லாமல் அரசியல் பிரவேசம் .. சீண்டினால் பாயும் புலி என்பது அறியாமல் சீண்டியதன் விளைவே அவரின் அரசியல் அத்தியாயம் என்பது யாவரும் அறிந்த ஒன்று ..
அவரை படுகுழியில் தள்ளியவர்கள் முன்பு பிரமாண்டமாக எழுந்து நின்றார்... அதில் கருணாநிதி அவர்களும் அடக்கம் .. அந்த கோபமே இன்றும் அடங்காதது.. நடிகை என்று எள்ளி நகையடிவர்கள் முன்பு "நடிகை" என்ற அடையாளத்தையே துடைத்து எரிந்து "ஜெயலலிதா" என்று நின்று காட்டினார்.. எப்பேர்பட்ட சாதனை ....
அவரை கேவலப்படுத்திய அதே சமுதாயத்தை தலை நிமிர்ந்து பார்க்கவைத்தார், எட்டி உதைத்து துகிலுரிந்த அதே ஆண் வர்க்கத்தை "அம்மா" என்று வணங்க வைத்தார், அதே ஆண்கள் இவர் வணங்கும் ஒவ்வொரு நொடியும் அவரின் கடந்த கால காயங்களுக்கு மருந்தாகவே அவர் நினைக்கிறார் என்றே நான் நம்புகிறேன் ... தான் துடைத்து எறிந்த காயங்களுக்கு சான்றாகவே நினைக்கிறார் என்றே நான் நினைப்பேன் ..
சாதிக்க இயலாது என்று நினைத்த ஒவ்வொன்றிலும் அவர் சாதித்தே காட்டினார்.. இன்றும் அவர் டெல்லி சென்றால் திரளும் பத்திரிக்கையாளர் கூட்டமும், கோட்டை அடையும் பரபரப்பும் இந்தியாவில் எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு மரியாதை.. யாரும் மிரளும் தன்மை கொண்டவராக நம் முதல்வர் இருப்பதில் பெருமையே... இதை ஜால்ரா எடுத்து கொண்டாலும், நான் அ தி மு க காரன் என்று நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை.. நான் பேசுவது ஒரு தனிப்பட்ட மனுசியை ..
...

இன்றைய மனிதர்களின் அறியாமையால் விளையும் அந்த கிசு கிசுக்களை கண்டு இது ஒரு வேகத்திலும், கோபத்திலும் எழுதினேன்... நான் இன்று வரை ஜெயலலிதா அவர்களை அன்றும் இன்றும் என்று மட்டுமே பிரித்து காண்கிறேன்.. அன்றைய ஜெயலிதாவின் இன்னல்கள் ஒரு ஆணுக்கு இருந்திருந்தால் அவன் தற்கொலை செய்து கொண்டு காணாமல் போயிருப்பான் என்பது மட்டும் நிச்சயம்.. இன்றைய முதல்வரின் செயல்பாடுகள் விவாததிற்கு உலாவுவது உண்டு... ஏன் என்றால் அன்று என்பது வரலாறு... இன்று என்பது வேற்று பேச்சு.. அவ்வளவுதான் ... இந்த வேற்றுபேச்சில் எத்தனை வரலாறு உருவாக போகிறது எனபது திறமையின் சான்று... அதை ஜெயலலிதா நிருபித்து கொண்டே இருக்கிறார் ..
இந்த உலகில் யாருக்கு எந்த பட்டம் பொருத்தமோ இல்லையோ ஜெயலலிதாவிற்கு மிக பொருத்தம் "புரட்சி தலைவி " என்ற பட்டம் தங்கள் வாழ்வில் ஒருபோதும் யாரும் விரும்பியே தவறுவதில்லை.. நயவஞ்சக நரிகளை தவிர... அம்மட்டில் ஜெயலலிதா ஒரு பெண் புலியே...

1 comment:

  1. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
    வையகம் இதுதானாடா. என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete