மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு - நடத்திய கரூர் கூட்டம் பற்றி தங்களது கவனத்திற்காக.....
16.05.2015 அன்று கருர் கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து அமைப்புகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருர் கூட்டத்திற்கு வருகை தந்தவர்களில் சிலர் தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்புக்கு இயக்குனராக செயல்பட இசைந்து உள்ளார்கள். அவர்களது பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
.
1. திரு. சரவண அர்விந்த் ...... லா பவுண்டேஷன் law foundation, சென்னை.
2. திரு. சிவபாரதி ....................... சட்ட விழிப்புணர்வு இயக்கம், கரூர்
3. திரு அ.கோவிந்தராஜன்....... பாதிக்கப்பட்டோர் கழகம், திருப்பூர்
4. திரு. பொ.செல்லப்பன் .......... .இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு, நாமக்கல்.
5. திரு வாசுதேவன் .............. சட்ட விழிப்புணர்வு இயக்கம், கரூர்.
6. திரு. பெ. சுப்ரமணியன் ....... பாதிக்கப்பட்டோர் கழகம், ஈரோடு.
7. திரு. ராஜசேகர் ........................ போடி
சொல்லுவது
எல்லோருக்கும் எளிது செய்வது அரிது..... செயற்கரிய செய்வர் பெரியர்.... .
அந்த வகையில், செயற்கரிய செயலை செய்து காண்பித்துக் கொண்டு இருப்பவர்
நண்பர் கரூர் law சிவபாரதி அவர்கள். எண்ணம் இருந்தால் மட்டும் போதாது
அதனைச் செயல்படுத்தவும் வேண்டும். விடா முயற்சியே வெற்றியைத் தரும்.
விடாமுயற்சியால் வெற்றி பெற்றவர் கரூர் law சிவபாரதி அவர்கள். தமிழ்நாடு
சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதில்
பெருமை கொள்கிறோம்.
.
திரு. செல்லப்பன் நாமக்கல் அவர்கள் செயல் வீரர். அவரைப் போன்ற நல்ல எண்ணமும், துணிவும் தைரியமும் தளராத விடா முயற்சியும் நம் அனைவருக்கும் வர வேண்டும். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பது அமைப்பு பெற்ற பாக்கியம்.ஆகும்.
.
திரு. திரு. சரவண அர்விந்த் அவர்கள் law foundation நிறுவனர் ஆவர். அவரது எண்ணமும் செயலும் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் தைரியமும், நம்மை வியக்க வைக்கிறது. துணிந்து பல சாதனைகளைச் செய்துவருகிறார். பழகுவதற்கு இனியவர். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
.
திரு.போடி. ராஜசேகரன் அவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தி பல சாதனைகள் செய்து உள்ளார். துணிச்சலை அள்ளித் தருபவர். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்டவர். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு பலம் பெறுகிறது.
.
திரு. கோவிந்தராஜ் R.T.I. அவர்கள் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வமுள்ளவர். ஆவணங்களை சேகரித்து உங்கள் நன்மைக்காக அளித்து வருகிறார். சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு பலம் பெறுகிறது. நீதிமன்றத்தில் பல வழக்குகளை சந்தித்து வருகிறார். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு சிறப்படைகிறது.
.
திரு. வாசுதேவன் சட்ட விழிப்புணர்வு இயக்கம் கரூர். சட்டத்தைப் பயன்படுத்தி பல சாதனைகள் செய்து உள்ளார். குற்றங்களும் தீர்வுகளும் என்ற புத்தகத்தின் ஆசிரியர். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு களை கட்டுகிறது.
.
திரு.பெ.சுப்ரமணியன் ஈரோடு. அருப்புக் கோட்டை செந்தமிழ்கிழாரின் மாணவர். சட்ட விழிப்புணர்வை நல்ல மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதில் ஆர்வமுடையவர். நீதித்துறையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த தீவிரம் காட்டுபவர். அரசுத் துறைகள் அனைத்திலும் நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர். பள்ளிகளில் சட்டக் கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை உடையவர் இவரும் ஒரு இயக்குனராக உள்ளார்.
.
இயக்குனர்களின் காலம்.......
இயக்குனர்களின் கடமைகள்.
இயக்குனர்களின் பணிகள்....
இயக்குனர்களின் பொறுப்புகள்.
ஆகியவைகள் பற்றி பின்னர் அறிவிப்போம்.
.
திரு. செல்லப்பன் நாமக்கல் அவர்கள் செயல் வீரர். அவரைப் போன்ற நல்ல எண்ணமும், துணிவும் தைரியமும் தளராத விடா முயற்சியும் நம் அனைவருக்கும் வர வேண்டும். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பது அமைப்பு பெற்ற பாக்கியம்.ஆகும்.
.
திரு. திரு. சரவண அர்விந்த் அவர்கள் law foundation நிறுவனர் ஆவர். அவரது எண்ணமும் செயலும் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் தைரியமும், நம்மை வியக்க வைக்கிறது. துணிந்து பல சாதனைகளைச் செய்துவருகிறார். பழகுவதற்கு இனியவர். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.
.
திரு.போடி. ராஜசேகரன் அவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தி பல சாதனைகள் செய்து உள்ளார். துணிச்சலை அள்ளித் தருபவர். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்டவர். தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பில் அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு பலம் பெறுகிறது.
.
திரு. கோவிந்தராஜ் R.T.I. அவர்கள் பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வமுள்ளவர். ஆவணங்களை சேகரித்து உங்கள் நன்மைக்காக அளித்து வருகிறார். சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு பலம் பெறுகிறது. நீதிமன்றத்தில் பல வழக்குகளை சந்தித்து வருகிறார். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு சிறப்படைகிறது.
.
திரு. வாசுதேவன் சட்ட விழிப்புணர்வு இயக்கம் கரூர். சட்டத்தைப் பயன்படுத்தி பல சாதனைகள் செய்து உள்ளார். குற்றங்களும் தீர்வுகளும் என்ற புத்தகத்தின் ஆசிரியர். அவரும் ஒரு இயக்குனராக இருப்பதால் அமைப்பு களை கட்டுகிறது.
.
திரு.பெ.சுப்ரமணியன் ஈரோடு. அருப்புக் கோட்டை செந்தமிழ்கிழாரின் மாணவர். சட்ட விழிப்புணர்வை நல்ல மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதில் ஆர்வமுடையவர். நீதித்துறையைச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த தீவிரம் காட்டுபவர். அரசுத் துறைகள் அனைத்திலும் நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர். பள்ளிகளில் சட்டக் கல்வியைக் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனை உடையவர் இவரும் ஒரு இயக்குனராக உள்ளார்.
.
இயக்குனர்களின் காலம்.......
இயக்குனர்களின் கடமைகள்.
இயக்குனர்களின் பணிகள்....
இயக்குனர்களின் பொறுப்புகள்.
ஆகியவைகள் பற்றி பின்னர் அறிவிப்போம்.
- YOU CAN'T GET JUSTICE WHERE LAW IS BEING DENIED.Thindal Subramanian Perumal -ஆல் · சுமார் 6 மாதங்களுக்கு முன்I AM SURE THAT YOU CAN'T GET JUSTICE WHERE THE LAW IS BEING DENIED. EACH AND EVERY PLACE THERE IS CHEATING, FRAUD, CORRUPTION. COURT IS NOT EXCEPTION. THE COURT MUST FUNCTION AS PER LAW UNLESS YOU CAN431
- நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் .Thindal Subramanian Perumal -ஆல் · சுமார் 7 மாதங்களுக்கு முன்நீதிமன்றத்தில் வாதட கல்வித் தகுதி தேவை இல்லை. நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம். சட்டம் தெரிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். இப்போது சட்டப் புத்தகங்கள் தமிழிலேயே கிடைகிறது. திரு நடராசன் M.A. M.Com23912ஆலோசனைகள்.
1. நாமக்கல்லில் நடக்க உள்ள கூட்டத்தை இரண்டு நாட்களுக்கு நடத்தலாம்.
2. நாமக்கல்லில் நடக்க உள்ள கூட்டத்தில் அடையாள அட்டை அளிக்கும் இடத்தில் இயக்குனர் ஒருவராவது இருக்க வேண்டும். யார் யார் வருகிறார்கள் ? என்பதை அறிய / கண்காணிக்க வேண்டும்.
3. பெண்களுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்க வேண்டும்.
4. பெண்களுக்கு வசதி செய்ய வேண்டும்.
5. வருகை தரும் நபர்கள் அனைவரின் கருத்துக்களையும் எழுத்து மூலமாகப் பெற வேண்டும். அதனை மேடையில் வாசிக்க வேண்டும்.
6. வருகை தந்தவர்களின் ஆலோசனை மற்றும் கருத்துப் பதிவு ஏடு வைக்க வேண்டும்.
7. மண்டபத்தில் சட்டங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும்.
உதாரணமாக......
* சட்டப்படி உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்.
* நீதிமன்றத்தில் அமர உங்களுக்கு சட்டப்படியான உரிமை உள்ளது.
* ஒரு குற்றம் தொடர்ந்து செய்யப்படும் போது அதன் காலவரம்பு ஒவ்வொரு முறையும் புதியதாகத் தொடங்குகிறது.
* ஏற்கத் தகாத வழக்கை ஏற்க நீதிபதிகளுக்கு அதிகார வரம்பு கிடையாது.
* கேட்கப் படுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
* எந்த சட்டப்படி உங்களுக்கு நீதி வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
* நீதிபதிகள் மீது புகார் அளிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
* நீதிபதிகளின் செயல்பாடு குறித்து உள்ளது உள்ளபடி விமர்சிப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது.
* சட்டத்தின் ஆட்சி வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்போம்.
* நாம் அரசியல் சாசனத்தை மதித்து ஏற்று அதன்படி செயல்படுவோம் என உறுதி மொழி ஏற்போம்.
* அரசியல் சாசனம் நீங்கள் உருவாக்கிய சட்டம் ஆகும். நீங்கள் தான் அரசுக்கு கட்டளை பிறப்பித்து உள்ளீர்கள்.
* உங்களின் கட்டளையை மற்றும் அரசியல்சாசனக் கட்டளையை ஏற்க மறுக்கும் அரசியல் வாதிகளுக்கு / வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்போம்.
* நீதிபதி ஒரு பொது ஊழியர் ஆவார். நீதிபதி சட்ட விரோதமான முடிவை / தீர்ப்பை அளிப்பது என்பது இ.தா.ச. பிரிவு 219 –ன்படி குற்றமாகும்.
* அரசியல்சாசனக் கோட்பாடு 2௦ - ன்படி குற்றம் செய்த நீதிபதி தண்டிக்கப்பட வேண்டும்.
* அரசியல்சாசனக் கோட்பாடு 14 –ன்படி நீதிபதி சட்டத்தின் முன் சமம் ஆவார். *
* அரசியல் சாசனம் செயல்பட வேண்டும்.
* அரசியல் சாசனம் செயல்பட ஆவன செய்ய வேண்டியது குடியரசுத் தலைவரின் கடமை ஆகும்.
* குடியரசுத் தலைவரைக் கடமையைச் செய்ய வைப்போம்.
* தேர்தலில் நிற்கும் வேட்பாளர் சட்டப்படியான மற்றும் எழுத்துப் பூர்வமான உடன்படிக்கையை தொகுதி மக்களிடம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர் தேர்தலில் நிற்க தகுதி அற்ற வேட்பாளர் என்று முடிவு செய்து மக்கள் ஓட்டுப் போடக் கூடாது.
No comments:
Post a Comment