Tuesday, May 31, 2011

(20) குடும்பத்துடன் இன்ப சுற்றுலா

        சுற்றுலா  பயண தூரம்

                       சத்தி - திருப்பூர்     56 கி.மீ.                

                     திருப்பூர் -மதுரை    176 கி.மீ.
                                          
                     மதுரை -இராமேஸ்வரம்  176 கி.மீ.

                    மதுரை - திருச்செந்தூர்  200 கி.மீ.

                    மதுரை  -   திருநெல்வேலி  118 கி.மீ.

                  இராமேஸ்வரம் -திருச்செந்தூர்  300 கி.மீ.

                திருச்செந்தூர் -கன்யாகுமரி  118 கி.மீ.

               கன்யாகுமரி -  திருநெல்வேலி  101 கி.மீ.



அன்பு நண்பர்களே,வணக்கம்.

                             நமக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நம்மையே நம்பி வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக நமது முன்னேற்றத்திற்காக அயராது பாடுபடும் அவர்களுக்கும் மன நிறைவினைக் கொடுக்கும் வகையில் வருடம் ஒருமுறையாவது நம் பொருளாதாரத்திற்கேற்றவாறு,சூழ்நிலைக்கேற்றவாறு ஒருநாள் முதல் அதற்கு மேல் உங்களது விருப்பத்திற்கேற்றவாறு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். நாங்கள் சென்ற சுற்றுலா விபரம்;

                               நான் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் எவ்வளவோ நெருக்கடிகள் உள்ளன. இருப்பினும் வருடம் இருமுறையாவது உள்ளூர் சுற்றுலாவாவது சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
       அதேபோல இந்தமுறை திருச்செந்தூர்,கன்யாகுமரி செல்ல திட்டமிட்டோம். (எங்களது குடும்பத்தில் மூன்று நபர்,அண்ணன் மகள்,மருமகன்,பேத்தி என அவர்கள் மூன்று நபர்கள்,உறவினர் ஏழு நபர்கள் ஆக ஆண்கள் ஐந்து பேர்+ பெண்கள் ஆறு பேர்+சிறுமி ஒருவர் என பதிமூன்று பேர் ) அதன்படி 24-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று மாலை சத்தி பஸ்நிலையத்தில் 06.45மணிக்கு குடும்பத்துடன் தேவையான பொருட்களுடன் புறப்பட்டோம்.திருப்பூர் சென்று அங்கு எங்களது சுற்றத்தாரையும் சேர்த்துக்கொண்டு ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில்09.00(இரவு )மணிக்குப் புறப்பட்டோம்.திருப்பூரிலிருந்து திருச்செந்தூர் 25-05-2011 புதன்கிழமை அதிகாலை 05.00 மணிக்கு சென்றடைந்தோம். அங்கு அதிகக் கூட்டம் காரணமாக தங்க இடம் கிடைக்காத காரணத்தால் லாக்கரில் எங்களது பொருட்களையெல்லாம் வைத்துவிட்டு கடலில் நன்கு அதாவது இரண்டு மணி நேரம் எனது பேத்தி (மைதிலி) எட்டு வயது சிறுமி திருப்தி ஆகும் வரை ஆடிவிட்டு நாழிக்கிணறு சென்று அங்கு நல்லதண்ணீர்க் குளியல் கட்டணம் ரூ=01.00 நபருக்கு என்ற வீதத்தில் கொடுத்துக் குளித்தோம்.அங்கேயே துணிகளை மாற்றிக் கொண்டு கோவிலில் உள்ள வள்ளி குகையில் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலை சுற்றி வந்து வரிசையில் நின்று சுமார் இரண்டு மணி நேரம் காத்து முருகப் பெருமானைத் தரிசித்தோம்.அதன்பிறகு அங்கிருந்து கன்யாகுமரி செல்ல பேருந்து நேரம் விசாரித்து மதியம்12.25 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்தோம்.அப்பேருந்து கன்யாகுமரி பஸ்நிலையம் மாலை04.30 மணிக்குச் சென்றடைந்தது.பேருந்து நிலையத்தினுள்ளேயே உள்ள தங்கும் விடுதியில் ஆறாம் எண் அறை எடுத்தோம்.அங்குள்ள அனைத்து நபர்களும் எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க எங்களுக்கு மிக உதவியாக இருந்தது.அடுத்த நாள்26-05-2011 அன்று காலை அங்கு தினசரி இயங்கும் அரசு போக்குவரத்துக் கழக ஒரு நாள் இயற்கையைக் கண்டுகளிக்கும் இன்பச்சுற்றுலா பேருந்தில் ஒரு நபருக்குக்கட்டணம் ரூ=200=00 வீதம் கொடுத்து பயணித்தோம்.அப்பேருந்தானது காலை 07-00 மணிக்கு தினசரி இயங்குகிறது.

No comments:

Post a Comment