Friday, May 13, 2011

(19) தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

 
        தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஈரோடு மாவட்டம்           TNSF


    
                       

   அன்பு நண்பர்களே,
            paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                   
                     தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் தாலூக்கா  தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைக்கிராமம்-  கெத்தேசால் வனப்பகுதியில்அமைந்துள்ள அரசு உண்டிஉறைவிட நடுநிலைப் பள்ளியில் தங்கி மூன்று நாட்கள்'' புத்தக வாசிப்பு முகாம்''  இந்த மாதம் 14 &  15 மற்றும் 16 -ந் தேதிகளில் நடத்தப்பட்டது.அது சமயம் 




                                        திரு; கமலாயன்,எழுத்தாளர் அவர்கள்.




(1)திரு.பேரா.ந.மணி(முனைவர்) அவர்கள்(உரையாற்றுபவர்)
(2)திரு;முகம்மது அலி (காட்டுயிர் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் இயற்கை ஆர்வலர்)அவர்கள் (அமர்ந்திருப்பவர்)




இந்த புத்தக வாசிப்பு முகாமில் பாரதி புத்தகாலயம் திரு; நாகராஜ் அவர்கள், எழுத்தாளர் மற்றும் பேச்சாளருமான திரு; கமலாயன் அவர்கள், திரு;ஷாஜகான் அவர்கள்,திரு; ச. தமிழ் செல்வன் அவர்கள், இயற்கைஆர்வலர்- திரு முகமது அலி அவர்கள்,கல்வியாளர்கள் திரு; பேரா. ராஜு அவர்கள், திரு;விஜயகுமார் அவர்கள், மரியாதைக்குரிய,பேரா. மோகனா அம்மையார் மற்றும் சுடர் நடராஜன் மற்றும் சமூக ஆர்வலர்கள்,உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் முனைவர்;பேரா. மணி(ஒருங்கிணைப்பு)-( ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் இந்த முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சிறப்பாக செய்து இருந்தார்.
குழந்தைகளுக்கான புத்தகங்களான,(1)முதல் ஆசிரியர், (2)வாசித்தாலும் வாசித்தாலும்தீராதபுத்தகம்(இயற்கையைநேசித்தல் தொடர்பாக..அறிதல் தாக்கமாக), (4)எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கிட்டீங்க(ஷாஜகான்) 
(5)பள்ளிக் கூட தேர்தல், (6)டோட்டோசாண்(ஜன்னலில் ஒரு சிறுமி), (7)ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.. போன்ற புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டன.(ஆய்வும் செய்து மதிப்பீடும்செய்யப்பட்டது.) இதில் குழந்தைகளை நேசித்தல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், குழந்தைச் செல்வங்களிடம்  அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல், குழந்தைகளின் தேடல், அறிவு போன்றவற்றை தெரிந்து செயலாற்றுவது சம்பந்தமாக ஆசிரியர்கள் அறிந்துகொள்ள  இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

      
வாசிப்பு முகாமில்  74 நண்பர்கள் பங்கேற்றனர்.    இந்த  வாசிப்பு முகாமில் பங்கேற்றவர்களில், 6 பேர் மாற்றுத்திறனாளிகள் (பார்வைத் திறனற்றவர்கள்.பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள்.) அவர்களில் இருவர் கல்லூரிப் பேராசிரியர், ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியர்.மூவர் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரான ஆத்தூர் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முருகேசனைப் மாணவர்கள் பக்கம்பக்கமாய் பாராட்டி குவித்திருக்கின்றனர். 
  
  
    இந்த முகாமில் பங்கேற்றவர்களில் ஒருவர் ஆந்திரா எல்லைப் பகுதியிலிருந்து வந்திருந்தார். அவருக்கு  23 வயதுவரைஎழுதப் படிக்கத் தெரியாதாம்.ஆனால் இன்று முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார்.
        
       தரும்புரி பகுதியிலிருந்து பணி ஓய்வு பெற்ற வனத்துறை நண்பர் வருகை தந்நிருந்தார். அவரது செயல்பாடு மிகவும் வித்தியாசமாக வியக்கத்தக்க வகையில் அமைந்தது.
  அவர் மூன்று காமெராக்களை வைத்துக்கொண்டு வனப்பகுதியில்உள்ளபூச்சியினங்கள்,விலங்கினங்கள்,தாவரங்கள்,ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து அவ்வப்போது உடன் கொண்டு வந்திருந்த லேப்-டாப் கணிணியில் பதிவு செய்து அங்குள்ளோருக்கு வினியோகம் செய்தார்.
  
    சத்தியமங்கலம்  சுடர்  செயலாளர் திரு; நடராஜ் அவர்கள் மூன்று நாட்களுக்கான சாப்பாடு மற்றும் தங்குவதற்கான ஏற்பாட்டினை செய்து உதவினார்.
   
     சத்தியிலிருந்து கெத்தேசால் சென்று வர சத்தியமங்கலம்  ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளர் மரியாதைக்குரிய செல்வம் அவர்கள் இரண்டு ஓட்டுனர்களுடன் ஒரு பள்ளிப் பேருந்தினைக் கொடுத்து உதவினார்.
 வீட்டிற்குள் ஒரு பள்ளிக்கூடம்; பள்ளிக்கூடத்திற்குள் ஒரு வீடு, என குழந்தைகளோடு சுதந்திரமாக இருக்க வேண்டும்.என்பது உட்பட பல அறிவுரைகள் அங்கு முன் வைத்து விவாதிக்கப்பட்டன. 

    கற்றலில் சிறந்த கற்றல் கற்பிப்பது எப்படி என்று கற்றலே ஆகும், என்பது உட்பட இலகுவாக மாணவர்களோடு ஒன்றி கல்விப்பணி ஆற்றுவது குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
  அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கை முறை மற்றும் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் பற்றிய ஆய்வும் செய்யப்பட்டது.

 paramesdriver.blogspot.com -Sathy & Thalavadi

            

No comments:

Post a Comment