Saturday, August 6, 2016

ஓட்டுநரின் நிலை

எங்க பொளப்பு இப்படி தாங்க
போகுது...
ஓட்டுனர்(டிரைவர்)
நெத்தியில பொட்டு,
கழுத்துல நீளமான துண்டு,
அனைவரையும் கவர
கோல்டுல செயினு,
தப்பு னு தெரிஞ்சும் காக்கிசட்டை
போடாமல் வண்டியை ஓட்டுவது,
காக்கிசட்டை போட்டுருந்தாலும்
எங்க மீது பொய் வழக்கு போடும்
போஸீஸ்,
எங்க உயிரை பெரிதும் மதிக்காமல்
எங்களை நம்பி வந்தவர்களை
பாதுகாப்பாக இறக்குவது,
வழியில் எத்தனை விபத்துகளை
பார்த்தாலும்,
நாம் இந்த தொழிலை விட்டு போக கூடாது ன்னு என்னுவது,
பயணத்தில் தூக்கம் வராமல்
இருக்க,
தவறு என்று தெரிந்தும் போதை பொருள் பயன் படுத்துவது,
மணிக்கு ஒரு முறை இரவில்
டீ குடிப்பது,
வெளியில் எப்படி இருந்தாலும்
ஓட்டுனர் சீட்டில் உக்கந்த உடன்
தனக்கென ஒரு பாணியை வகுத்து கொள்வது (கெத்து)..
யாதர்த்தமான பார்வையில்
அனைவரையும் கவருவது,
வழியில் எந்த ஒரு பிரச்சனை
என்றாலும் தானாக தீர்த்துக்கொள்வது..
ஆயிரம் வழக்குகள் எங்க மீது
இருந்தாலும் அசால்ட்டாக
இருப்பது,
ஒரு பொருளை எங்களை நம்பி
ஏத்தி விட்டால் தான் பொருள் போல் மதித்து பாதுகாப்பாக
கொண்டு சேர்ப்பது,
சம்பளம் கட்டுதோ இல்லையோ
இந்த தொழிலை விட கூடாது
என்று நினைப்பது,
நாங்கள் வீட்டை விட்டு சென்றால் வீட்டுக்கு வந்தால் தான்
நாம் என இருந்தாலும்,
இதை ஏற்று நம்மளை
இத்தொழிலுக்கு அனுப்புவது
தாய் தந்தையின் ‪#‎நம்பிக்கையே‬...

No comments:

Post a Comment