Tuesday, January 3, 2012

23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி

அன்பு நண்பர்களே,வணக்கம். 
                     இன்று 23-வது சாலைபாதுகாப்பு வார விழாவின் மூன்றாவது நாள்.இன்று கோபி கலைமற்றும் அறிவியல் கல்லூரியின்  முதலாம் ஆண்டு மாணவ,மாணவியர் மட்டும் கலந்து கொண்ட ''சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு'' பேரணி பற்றி இந்தப்பதிவில் காண்போம்.

                " ACCIDENTS BRING TEARS - SAFETY BRING CHEER " 
"விபத்தினால் வருவது துன்பம்-பாதுகாப்பினால் வருவது இன்பம்"

                                                     
      மரியாதைக்குரிய மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மரியாதைக்குரியM.ரகுபதி அவர்கள் மற்றும் மரியாதைக்குரிய நடேசன் அவர்கள்,இவர்களுடன்  கோபி கலை அறிவியல் கல்லூரி பெற்றோர் சங்க நிர்வாகிகள் மேலே உள்ள படம்.
                                                   

    கல்லூரி மாணவக்கண்மணிகள் வாசகங்களைத்தாங்கிவரும் காட்சி மேலே உள்ள படம்.           
      கல்லூரி மாணவி ஒருவர்(1)  மற்றும் 
    மரியாதைக்குரிய வட்டார போக்குவரத்து அலுவலர் திருமிகு.J.ஜெயக்குமார்  அவர்கள்(2) சாலை பாதுகாப்பு பேரணியின் நோக்கம் பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் காட்சி மேலே உள்ள இரண்டு படங்களும்.  அருகில் மரியாதைக்குரிய முதல்வர் அவர்கள் & கல்லூரிப் பேராசிரியர் அவர்கள்.
                                    

      
                            பேரணியின் ஒரு பகுதி மற்றும் போக்குவரத்து சின்னங்கள் பற்றிய விபரங்கள் மேலே.             

         23-வது சாலைபாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி கோபி செட்டிபாளையம் கலை& அறிவியல் கல்லூரியின் உள் அமைப்புகள் மற்றும் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்தின.
           

        சரியாக மாலை3-00மணியளவில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்கள் கல்லூரி வாயிற் முன்பு கொடி அசைத்துத்துவக்கிவைத்தார்.அவருடன் மரியாதைக்குரிய மோட்டார் வாகன ஆய்வாளர்களும்,அலுவலகப்பணியாளர்களும் கலந்துகொண்டனர்.இதில் சிறப்பு என்னவெனில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட அனைவரும் பேரணி முடிவுறும் இடம் வரை வெயில் பாராமல் கல்லூரி மாணவ,மாணவியருடன் நடந்து வந்து ஊக்கமளித்தவிதம்,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தவிதம்  மிகவும் பாராட்டுக்குரியது ஆகும்.

           கோபி கலை&அறிவியல் கல்லூரியின் நிர்வாகக்குழு மரியாதைக்குரிய நிர்வாகிகளும்,மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் அவர்களும் இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் (Y.R.C) சமுதாய சேவைக் கூட்டமைப்பு (S.S.L)  பெற்றோர் ஆசிரியர் சங்கம் (P.T.A) ஆகிய அமைப்புகள் சார்ந்த மாணவ,மாணவியர்களும் அந்தந்த இயக்கங்களின் பொறுப்பேற்ற பேராசிரியப் பெருமக்களும்,

         இவர்களுடன் அனைத்து பேராசிரிய,பேராசிரியைகளும் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகளும் இந்த மிக நீண்ட பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வுப்பிரச்சாரம் கோஷமிட்டும்,கோபி வட்டார பொதுமக்களுக்கும்,பிற வாகன ஓட்டிகளுக்கும்,பாதசாரிகளுக்கும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும்,பாதுகாப்பு பற்றிய கோஷங்கள் போட்டும் பேரணியை சிறப்பாக நடத்தினர்.சுமார் ஆயிரத்து ஐநூறு மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். 

  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகத்தை மாணவர்கள் தாங்கிவர இவர்களுடன்
 பெற்றோர் சங்க பெயர் பொறித்த வாசகத்தை S.வினோத்குமார் B.B.M-Ist year மற்றும் S.ராஜ்குமார்B.B.M-Ist year தாங்கி வர, இளஞ்செஞ்சிலுவைச் சங்க பெயர் பொறித்த வாசகத்தை S.ராம மூர்த்தி Physics-Ist year மற்றும் E.நந்தகோபால் Physics-Ist year தாங்கி வர, நகர நுகர்வோர் அமைப்பு பெயர் பொறித்த வாசகத்தை K.J.கிஷோர்B.Com-Ist year மற்றும் S.லோகேஸ்வரன்B.Com-Ist year தாங்கிவந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.மேற்கண்ட பணி புரிந்த மாணவர்களை கூடுதலாகப் பாராட்டி வாழ்த்தலாம்.ஏனெனில் ஐந்து கிலோமீட்டர் தூரம் என்பது சாதாரணமல்லவே!. 

             இடையில் ஜெயா தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி & பத்திரிக்கை நிருபர்கள் மரியாதைக்குரிய வட்டார போக்குவரத்து அலுவலர் திருமிகு.ஜெயக்குமார் அவர்களிடம் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகளிடம்பேரணியின் நோக்கம் பற்றி  பேட்டி கண்டனர்.
         
            பேரணி கலை அறிவியல் கல்லூரி வாயிற்முன்பு துவங்கி கோபி மத்திய பேருந்து நிலையம் வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் நடந்தது.இடைஇடையே கல்லூரி வாகனத்தின் மூலம் குடிநீர் வழங்கி மாணவக்குழந்தைகளின்  தாகத்தைப் போக்கி சிறப்பித்தனர்.பேருந்து நிலையம் சென்றடைய ஏறக்குறைய இரண்டு மணிக்கும் கூடுதலான  நேரம் ஆனது.
பதிவிட்டவர்.PARAMESDRIVER // TAMIL NADU SCIENCE FORUM- THALAVADY .
  
     தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்ஈரோடு மண்டலம் சார்பாக நகர்வலம் வரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் கீழே காணீர். 


       
    பேரணி இடையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-ஈரோடு மண்டலம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம் கோபி நகரத்தினுள் பாதுகாப்பு பற்றிய விளம்பரப்பலகை மற்றும் ஒலிபெருக்கி வாயிலாக திருமிகு.சுப்பிரமணியம்.ஓட்டுனர் பயிற்றுனர் அவர்கள் விழிப்புணர்வுக்கான உரையாற்றிக்கொண்டு இருந்தபோது எடுத்த படம் இதுங்க.              நன்றி!    
                         PARAMESDRIVER // THALAVADY.









No comments:

Post a Comment