Tuesday, April 5, 2016

சாலையில் கவனம் சகலருக்கும் அவசியம்.





சிந்தியுங்க!
                     சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

09 மார்ச் 2016 தேதியன்று கோபிசெட்டிபாளையத்தில்  பயணிகள் ஆட்டோவில் பயணித்தபோது சந்தித்த விபத்து.....



 
 மறுநாள் தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழ்களில்  வெளிவந்த செய்தி.
 
மரியாதைக்குரியவர்களே,
                 அனைவருக்கும் வணக்கம். 
           கடந்த 2016 மார்ச் 6 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கோபி அருகிலுள்ள பவளமலை அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற எனது உறவினர் இல்ல திருமண விழாவிற்காக அன்றை அதிகாலை5.45 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து TN59/ 0304 எண்ணிட்ட பயணிகள் ஆட்டோவில் என் உறவினர் லோகநாதன்,சரஸ்வதி ஆகியோருடன் பயணித்தபோது கோபி - பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் பிரிவு கறிக்கடை அருகில் சைக்கிளுடன் மோதி ஆட்டோ கவிழ்ந்து உருண்டதில் எனக்கு தலையில் ஆட்டோவின் இரும்பு பட்டா குத்தி வெட்டுக்காயமும்,இடுப்பில் மொக்கை அடியும்,காலிலும் கையிலும் சிராய்ப்புக்காயமும்,லோகநாதனுக்கு நெற்றியிலும் கையிலும் சிராய்ப்பு மற்றும் மொக்கை அடியும்,சரஸ்வதிக்கு தோள்பட்டையின் இரு பக்கமும் உள்ள முன் காரை எலும்புகளும் உடைந்தும் ,ஆட்டோ ஓட்டுநருக்கு காலில் அடியும்,சைக்கிள் ஓட்டிவந்தவருக்கு தோள்பட்டை அடிபட்டும் மோசமான விபத்து ஏற்பட்டுவிட்டது.தகவலறிந்த உடனே கோபி பேருந்துநிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் விரைந்து வந்து எங்களை மீட்டு கோபி அபி மருத்துவமனையில் சேர்த்தனர்.சைக்கிள் ஓட்டியை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
 


சரி...
        விபத்துக்கு காரணம் என்ன? என்பதை அறிவோம்.
நாங்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரின் எதிர்பார்ப்பில்லா இயக்கமும்,எதிரில் வந்த மற்ற வாகனங்களின் டிம் செய்யாத பிரகாசமான ஹெட்லைட் வெளிச்சமும்,சாலைவிதி அறியாத சைக்கிளோட்டியின் சாலையில் குறுக்கிட்டதும்தான்! மிக எளிதான சாலைப்பயணத்தை மிக மோசமான விபத்துக்கு ஆளாக்கிவிட்டன.
(1)ஆட்டோ ஓட்டுநர் எதிரில் வந்த வாகனங்களின் ஹெட்லைட் வெளிச்சத்தால் கண் கூச்சமடைந்தபோது பாதையின் தன்மை தெரியாத சூழலில் ஆட்டோவின் வேகத்தை குறைத்து தற்காப்புடன் ஓட்டத் தவறியது.
(வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ இருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது).
(2)எதிரில் வந்த வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தும் ஹெட்லைட்களின் வெளிச்சத்தை தாழ்த்தாமல் பிரகாசமான வெளிச்சத்துடன் ஓட்டியது.
(இரவு நேர இயக்கத்தில் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகன ஓட்டிக்கு கண் கூசும் பிரகாசமான வெளிச்சத்தை தாழ்த்தி இயக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)
(3)சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் ஓட்டி பொதுச்சாலையில் போக்குவரத்து வாகனங்கள் கடந்த பிறகும்  வாகனங்களின் போக்குவரத்து தொடர்கிறதா? என கவனிக்கத் தவறியது. 

(வாகனங்கள் கடந்தவுடன் சாலையில் தொடர்ந்து  வாகனங்கள் போக்குவரத்து செய்கின்றனவா?என இரு புறமும் கவனித்து சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.)

           இது போன்ற காரணங்களால் ஆட்டோ ஓட்டுநர் மிக குறைந்த இடைவெளியில் கண்ட சைக்கிள் மீது மோதாமல் இருக்க தான் சென்ற வேகத்திலேயே வலது பக்கமாக திருப்பியும்
 
                   சைக்கிள் மீது மோதி ஆட்டோ உருண்டு கவிழ்ந்து மிக மோசமான விபத்தை ஏற்பட்டது. 
 
        இதனால் எங்கள் உறவினர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போனதுடன், பணிக்கு செல்லமுடியாமலும்,உடல்வலி,மன வேதனை,எனக்கு தலைக்காயம் மற்றும் தலையில் மொக்கை அடி,இடுப்பில் மொக்கை அடி,வலது கை ஆட்டோவின் அடியில் சிக்கி மொக்க அடி இவ்வாறாக அடிபட்ட நான் முதலில்  கோபி அபி Ortho மருத்துவமனை, பிறகு பவானி லோகநாதன் Ortho மருத்துவமனை,சத்தி பேருந்து நிலையம் எதிரிலுள்ள செல்வக்குமார் Ortho மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை ஒரு மாதகாலமாகப் பெற்றும் இதனால் காலவிரயம்,செலவுகளால் பொருளாதாரம் இழப்பு,எனது குடும்பத்தார் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் நேர இழப்பும்,வேதனையும் ஏற்பட்டுள்ளன.சமூகப்பணியும் தடைபட்டு விட்டன.
  என் உறவினருக்கு இருபக்க தோள்பட்டை காரை எழும்புகளும் உடைந்து எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கைகளை அசைக்கமுடியாமல் படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். அடிபட்ட சைக்கிளோட்டி இறந்துவிட்டதாக தகவல்.


               நாங்கள் பயணித்தது பயணிகள் ஆட்டோ அதுவும் பயணிகளான நாங்கள் மூன்று பேர் மட்டுமே.நேரான பொதுச்சாலையில் அதிகாலையில் 5.45மணியளவில் போக்குவரத்து நெரிசலே இல்லாத நேரத்தில் பயணிக்கும்போது  அதுவும் பயணிக்கவேண்டிய  இரண்டு கிலோமீட்டர் மொத்த தூரத்திற்கு பொதுவாக அனைவரும் செல்லும் வேகத்தில் ஆட்டோவும் சென்றது இயல்பானதுதாங்க.சைக்கிள் ஓட்டி குறுக்கிடாமல் இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சென்று அடைந்திருப்போம்.இந்த விபத்தே நடந்திருக்காது.

  கணப்பொழுதில் சைக்கிள்மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் அமைந்திருந்த கறிக்கடை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு டி.வி.எஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி ?!?!?!?!??!?!??!?!!?........மிக மோசமான விபத்தாக நிகழ்ந்தது.எங்களுக்கு உதவி செய்த  அந்த கறிக்கடை உரிமையாளர் (ஞாயிற்றுக்கிழமையல்லவா!) மற்றும்  கறிக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்களுக்குத்தாங்க தெரியும் அந்த விபத்தின் கொடுமை பற்றி.......
 
 
2016எப்ரல் 6 ந் தேதி இன்று உடல் தேறியுள்ளதால் பணிக்கு செல்கிறேன்.
 
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டு என் மீது அக்கறைகொண்டுமுகநூல் தளத்திலும்,தொலைபேசியிலும்,நேரிலும் உடல் நலம் விசாரித்தும்,நான் பூரண நலமடையவேண்டி பிரார்த்தனை செய்தும் எனக்காக தங்கள் நேரத்தையும்,எண்ணங்களையும்,நோக்கங்களையும் செலவிட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,என் வாழ்நாள் நன்றிங்க...
என்றும் சமூக நலப்பணியில்,
 அன்பன், 
C.பரமேஸ்வரன், 9585600733  paramesdriver@gmail.com
அரசுப்பேருந்து ஓட்டுநர், 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,
தாளவாடி கிளை,
 ஈரோடு மண்டலம்.
 
 
 
     

Saturday, January 9, 2016

சாலை பாதுகாப்பு கல்வி - சாலை பற்றிய அறிவு - 01

                              ROAD SAFETY EDUCATIONAL IN TAMIL.-01
    
மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சாலை பாதுகாப்பு கருதி அன்பன் பரமேஸ் டிரைவர் சத்தியமங்கலத்திலிருந்து உங்களுக்காக எழுதுவது......
           நாம் உயிர்வாழ்வதற்கான அனைத்து தேவைகளையும் போக்குவரத்து மூலமாகவே நிறைவேற்றி வருகிறோம்.குறிப்பாக சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.  சக்கரமும் சாலையும் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன.நடந்துசெல்வது தொடங்கி இரு சக்கர வாகனங்கள் முதல் பல சக்கர வாகனங்கள்வரை பலரும் பல வடிவங்களிலும் பல்வேறு வேகங்களிலும் வாகனங்களை ஓட்டிக் கொண்டோ,வாகனங்களில் பயணம் செய்துகொண்டோ இருக்கிறோம்.
        சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,பொருட்களை எடுத்துச்செல்பவர்களாக,வாகனம் ஓட்டுபவர்களாக போக்குவரத்து செய்கிறோம்.  நமது பாதுகாப்பிற்காகவே சாலைவிதிகளும்,மோட்டார் வாகன சட்டங்களும்,காவல்துறைசட்டங்களில் சிலவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியாமல் பயணத்தின்போது சாலைவிதிகள் மற்றும் சாலை பற்றிய அறிவு இல்லாமலும்,வாகனங்கள் பற்றிய அறிவு இல்லாமலும் பயணிப்பது எப்படி என்றுகூடத்தெரியாமலும் சாலையில் போக்குவரத்து செய்து விபத்துக்கு காரணமாகிறோம்.

  விபத்து ஏற்படும்போது கொடுங்காயம்,நிரந்தர ஊனம்,உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.மோதிய வாகனங்கள் சேதம்,ஏற்றிவந்த பொருட்கள் சேதம் போன்ற இழப்புகளும் ஏற்படுகின்றன.அவ்வழியே போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டு  அந்த சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் மன உளைச்சல்,தேவைகள் இழப்புடன்,நேர இழப்பும் ஏற்படுகின்றன.
  விபத்தில் சிக்குண்ட நமக்கு வருமான இழப்புடன்,பொருளாதார இழப்பும் ஏற்பட்டு நம் குடும்பத்தாருக்கும் நம்பியுள்ளவர்களுக்கும் மன உளைச்சல் மற்றும்  உடல் வேதனையோடு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது.அத்துடன் காவல்துறை,போக்குவரத்துத்துறை,மீட்பு பணித்துறை,மருத்துவத்துறை,சட்டத்துறை,காப்பீட்டுத்துறை, போன்ற சம்பந்தப்படவர்களுக்கு வேலைப்பளுவும் ஏற்படுகிறது.

        அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துக்களை வேடிக்கை பார்க்கிறோமே தவிர விபத்தில் சிக்குண்டவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையோ,இழப்புகளையோ,விபத்துக்கான காரணங்களையோ,விபத்தை தவிர்ப்பதற்கான செயல்பாடுகளையோ  சிந்தனை கூட செய்வது இல்லை.   ( parameswaran driver)
'சாலை பாதுகாப்பு  நம் உயிர் பாதுகாப்பு'மட்டுமின்றி  'சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு'.ஆதலால்  போக்குவரத்து அவசியமாகிவிட்ட இன்றைய சூழலில் சாலை பாதுகாப்பு கல்வி அனைவரும் பெறுவது அவசியம்.ஆதலால் பாதுகாப்பான பயணத்திற்கு சாலைவிதிகள் பற்றியும்,மோட்டார் வாகன சட்டங்கள் பற்றியும் கற்போம்.
(1) சாலை அறிவு (2)பயணப்பாதுகாப்பு (3)வாகன அறிவு (4)மோட்டார் வாகன சட்டங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

(1) சாலை பற்றிய அறிவு................. 
        சாலைகள் நமது நாட்டின் நிலப்பரப்பிற்கேற்ப சரிவுகளாகவோ,மேடு பள்ளமாகவோ,வளைவுகளாகவோ,குறுகிய பாதைகளாகவோ, கிளைச்சாலைகள் மற்றும் பிரதானச்சாலைகள் சந்திப்புகளாகவோ,அமைந்துள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துக் குறைவுக்கேற்ப பராமரிப்பு குறைவாக பழுதடைந்தோ உள்ளன.
                    சாலைகளை, நகர்ப்புறச் சாலைகள் என்றும்,கிராமப்புறச் சாலைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 (1)நகர்ப்புறச் சாலைகளை, வீதி,பிரதான சாலை,நேர்ச்சாலை,ஆர்டீரியல் சாலை , எனவும், 
   (2)கிராமப்புறச் சாலைகளை, விரைவுச்சாலைகள்,தேசிய நெடுஞ்சாலைகள்,பெரிய மாவட்டச்சாலைகள்,மற்ற மாவட்ட சாலைகள்,கிராமச்சாலைகள் எனவும் பலவகைப்படுத்தலாம்.

 நகர்ப்புறச்சாலைகள்,
 வீதி.
       பொதுமக்கள் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பாதையாகும்.வீதிகள்  நகரின் பிரதானச்சாலைக்கு செல்ல பயன்படுகின்றன. 

பிரதானச்சாலை.
    இது நகரத்தின் பல பகுதிகளில் முக்கிய போக்குவரத்தை எடுத்துச்செல்கிறது.

நேர்ச்சாலை.
    நகரத்தின் பல பகுதிகளிலிருந்து நகரத்தின் மையத்திற்குப் போக்குவரத்தை நேராக எடுத்துச் செல்லும் சாலையாகும்.

ஆர்டீரியல் சாலை.

        இது நகரத்தின் மிகவும் முக்கியமான சாலையாகும். கிராமப்புறச்சாலைகள்  நகரத்தினுள் நுழையும் போது ஆர்டீரியல் சாலைகளாக மாறிவிடும்.

கிராமப்புறச் சாலைகள்,
 விரைவுச்சாலைகள்,
    விரைவுச்சாலைகளை  தங்க நாற்கரச் சாலைகள் என்றும் கூறப்படுகிறது.
 மத்திய அரசால் பராமரிக்கப்படுகிறது.நான்கு முதல்  ஆறு தடச்சாலைகளாக பயன்படுத்தப்படுகிறது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் துரிதப்போக்குவரத்துக்காக விரைவுச்சாலைகள் போடப்படுகின்றன.கி.மீ.கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.
  
தேசிய நெடுஞ்சாலைகள்,
           தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு பராமரிக்கிறது.இரண்டு தடம் முதல் நான்கு தடச்சாலைகளாக பராமரிக்கப்படுகிறது.விரைவான போக்குவரத்திற்கு பயன்படுகிறது.மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.

மாநில நெடுஞ்சாலைகள்,
             மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோமீட்டர் கற்களில் பச்சை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

பெரிய மாவட்டச்சாலைகள்,
          பெரிய மாவட்டச்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோ மீட்டர் கற்களில் நீல வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

மற்ற மாவட்டச்சாலைகள்,
           மற்ற மாவட்டச்சாலைகளை மாநில அரசின் உதவியுடன் பஞ்சாயத்து யூனியன் பராமரிக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

கிராமச்சாலைகள்,
            கிராமச்சாலைகளை பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.ஒரு தடச்சாலையாகும்.எதிரில் வாகனம் வந்தால்  இரு வாகனங்களும் சாலையை விட்டு விலகிச்செல்ல வேண்டும்.கிலோ மீட்டர் கற்களில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.  (பரமேஸ்வரன் டிரைவர்)
                   
   சாலையின் பாகங்களாக,,,,,
               வாகனம் செல்லும் பாதை,பக்கவாட்டிலுள்ள புயங்கள்,கேம்பர்,நடைபாதை,கெர்ப்,வேகத்தடை,தொடர்வேகத்தடை,சூப்பர் எலிவேசன்,காப்புக்கற்கள்,பிரதிபலிப்பான்கள்,காப்புச்சுவர்,வட்டச்சுற்றுப்பாதை,தீவுத்திடல்,சேனலைசர்,வழிப்படுத்தும் சேனலைசர்,தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள மீடியன்,விட்டு விட்டு கட்டப்பட்டுள்ள மீடியன்,தடுப்புச்சுவர்,மாற்றுப்பாதை,சுரங்கப்பாதை,சிறு பாலங்கள்,தரைமட்டப்பாலம்,உயர் பாலம்,தாழ்வான பாலம்,மேம்பாலம் என பலவகைகளாகப்பிரிக்கலாம். 

சாலை வரைகோடுகள்,
       போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்காக சாலையில் வரையப்படும் கோடுகளை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம்.அவை நீளவாட்டில் வரையப்படும் கோடுகள்,அகலவாட்டில் வரையப்படும் கோடுகள்,மற்ற வரைகோடுகள் ஆகும்.

 சாலையின் நடுவில் வரையப்படும் கோடுகளும்,தடங்களின் கோடுகளும் நீளவாட்டில் வரையப்படுகின்றன.

சாலையின் அகலவாட்டில் , ஜீப்ரா கிராஸிங் கோடுகள்,பாதசாரிகள் கடக்கும் கோடுகள்,வாகனங்களை நிறுத்தும் கோடுகள் வரையப்படுகின்றன.

மற்ற வரைகோடுகளாக சாலை ஓரக்கல் கோடுகள்,திசை காட்டும் கோடுகள்,தடங்களின் எண்கள், கொண்டை ஊசி திருப்பம் கோடுகள்,வேகத்தடைக்கோடுகள்,நிறுத்தி வைக்கும் கோடுகள்,பேருந்து நிறுத்தும் கோடுகள்,ஐலேண்ட்,சேனலைசர்,மீடியன்,ரவுண்டானா போன்ற வரைகோடுகள்,
 ஸ்டாப்,ஸ்லோ,கார்,சைக்கிள் போன்ற எழுத்துக்கள் என வரையப்பட்டிருக்கும்.

     இன்னும் தொடரும்......
 அன்புடன்
 C.பரமேஸ்வரன்,    
         9585600733
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

தொடரும்.......................2016 ஜனவரி 9 ந் தேதி 

Thursday, January 7, 2016

நடிகர் சோ...பத்திரிக்கையாளர் சோ...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். தனி மனிதரின் சுதந்திரத்தை எள்ளி நகையாடலாமா? இதோ சோ என்ற தனிப்பட்ட சிந்தனையுள்ள மனிதரின் செயல்பாடு பற்றி பார்ப்போம்.
..
சோவைக் குறித்து எல்லோரும் சொல்லும் ஒரு குறை அவர் ஒரு பார்ப்பனர் என்பதுவே..
அதைத்தாண்டி அவரிடம் என்ன குறை கண்டீர்கள் என்று கேள்வி கேட்டால் அதற்கு விடை எவரிடமும் இருக்காது.
அவர் ஒரு அரசியல் புரோக்கர்..சரிதான்..அதனால் அவர் அடைந்த பலன் என்ன? ஆதாயம் என்ன? பணம் சம்பாதித்துவிட்டாரா? அதிகாரத்திற்கு வந்தாரா..அல்லது தன் செல்வாக்கைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்துவிட்டாரா..
அவர் அவாளுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்..சரி அதனால் என்ன? ஒரு நாடார் இன்னொரு நநாடாருக்கும் ஒரு தேவர் இன்னொரு தேவருக்கும் ஒரு முதலியார் இன்னொரு முதலியாருக்கும் சப்போர்ட் செய்வதில்லையா.. நமக்கிருக்கும் அந்த உரிமை அவருக்கு மட்டும் அந்தணராய் பிறந்துவிட்டதாலேயே இருக்கக்கூடாதா?
சரி..அப்படியே வைத்துக்கொள்வோம்..தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ‘அவாளுக்கு’ அவர் செய்த நன்மைகள் என்ன? அவர் தனது சமூகத்திற்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான் என்ன?
ம்..அவர் ஏன் ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குகிறார்? ஜாதி உணர்வில்தானே..? ஓ அப்படியா..அப்படியென்றால் 1991 முதல் 1996 முடிய நடந்த ஜெயலலிதா ஆட்சியை அதிகம் எதிர்த்தவர்கள் யார்? இரண்டு பேர்தான். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி..இன்னொருவர் சோ.. ஆனால் அதற்கான பலனை அனுபவித்தது கலைஞர். அதுதானே உண்மை? தமிழ்மாநிலக் காங்கிரஸை உருவாக்கி..ரஜினியை அதற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்து..அதிமுக ஆட்சியை விரட்டியது சோ..தானே? ஏன் அன்றைக்கு ஜெயலலிதா ஜாதி மாறியிருந்ததா? அல்லது அன்றைக்கு கலைஞர் பிராமண ஜாதிக்கு மாறியிருந்தாரா?
இன்றைக்கு நாமெல்லாரும் தூக்கிப்பிடிக்கும் காமராஜரை அன்றைக்கு உயரத் தூக்கிப்பிடித்தது..சோ..மட்டும்தான். அன்றைக்கு காங்கிரஸே காமராஜரைத் தூக்கி எறிந்துவிட்டதே.. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தப்பட்டது சோ மட்டும்தானே. திமுக அன்றைக்கு காமராஜரை எள்ளி நகையாடியது. தமிழர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்றைக்கு வெட்கமேயில்லாமல் காமராஜர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புகழை நாம் பாடிக்கொண்டிருக்கின்றோம்.
விடுதலைப்புலிகளைக் குறித்து எம்.ஜி.ஆர் காலத்திலேயே தீர்க்கதரிசனமாய் சொன்ன ஒரே மனிதர் சோ..மட்டும் தான். அவர்களால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு அழிவு ஏற்படும் என்று. அதன்படியே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனம்பாக்க விமான நிலையத்திலேயே வைத்து இலங்கைத் தமிழ் தலைவர்களை வேட்டையாடினர். அதன்பிறகுதான் எம்.ஜி.ஆர் விழித்துக்கொண்டார். தேவாரத்திற்கு அதிகாரம் கொடுத்து விடுதலைப்புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டி ஒடுக்கினார். பின்னர் கலைஞர் ஆட்சியில் தரைவிரித்து ஆடினர். தமிழர்களுக்கு தனி மாநிலம் கொடுத்து ஒரு உடன்படிக்கையைக் கொண்டு வந்து சிங்கள அரசை ராஜீவ்காந்தி அடிபணிய வைத்தார். ஆனால் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அதற்கு உடன்பட மறுத்தனர். இந்தியாவிலிருந்து படை அனுப்பிவைக்கப்பட்டது.வரதராஜப் பெருமாள் முதல் இலங்கைத் தமிழக முதல்வரானார்.பதிலுக்கு ராஜீவ்காந்தியை நமது நாட்டிற்கே வந்து கொலை செய்தனர். இந்தியாவின் ஆதரவு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விடுதலைப்புலிகளுக்கு பறிபோனது. கடைசியில் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளினாலேயே ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினமும் அழிந்தது.
இதை 1980களிலேயே சொன்னவர் சோ ஒருவர்தான்.
திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். அதில் தவறென்ன? அவரது விமர்சனங்களுக்கு பதில் என்ன? அவர் பார்ப்பனர் என்பதா?
விடுதலைப்புலிகளை..தீவிரவாதத்தை..தமிழ்த் தீவிரவாதத்தை அவர் எதிர்க்கிறார். அதிலும் அவர் தவறென்ன?
தேசீய அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்..இந்திராகாந்திக்கு மாற்றாக ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வர உதவினார். காரணம்..இந்திராகாந்தி காமராஜரை உதாசீதனப்படுத்தினார்..அதிகார மமதை கொண்டார்..அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தான் இந்திராகாந்தி நிதானத்திற்கு வந்தார். 1996ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எறியப்பட்ட பிறகுதான் அவரும் பெருமளவிற்கு நிதானத்திற்கு வந்திருக்கிறார்.
அந்தணர் என்போர் யார் என்று சோ..விடத்திலே துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அவர் பதில்..” மனு தர்மத்தின்படி மனிதர்களுள் 4 ஜாதிகள் உண்டு. அவர்கள்,1.சத்ரியர்கள்..(அரசர்கள்), 2.அந்தணர்கள்(அரசர்களுக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்),3.சூத்திரர்கள்(அரசர்களின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்) மற்றும் 4.வைசியர்கள்(அந்த 3 பேருக்கும் தேவையான பொருட்களைக் கண்டறிந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வியாபாரிகள்). ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?
சரி..நான் சொல்ல வந்தது அதுவல்ல செய்தி..படத்தைப் பாருங்கள்..எவ்வளவு அரசியல்வீதியாக எதிர்த்தாலும் கலைஞரால் அவரைப் புறக்கணிக்கவோ பகைக்கவோ முடியவில்லை. அதுதான் சோ..வின் பலம்.
ஒரே நேரத்தில் கலைஞரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடிகிறது..ஜெயலலிதாவையும் அழைக்க முடிகிறது. அததான் சோ..வின் நேர்மை.
அவர் கையில் வைத்திருக்கும் பத்திரிகையைப் பாருங்களேன்..அதுதான் சோ..வின் எளிமை. அதுதான் சூத்திரனாகிய (கலைஞர் பாஷையில்) என்னையும் சோ..வை ரசிக்க வைத்திருக்கிறது 1991ம் ஆண்டிலிருந்தே..(என்னால்எல்லாம் மற்றவர்களைப் போல் சோ இறந்து 40 அண்டுகளுக்குப் பிறகு புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை.அவர் உயிரோடு இருக்கும் போதே பாராட்டிவிடுகின்றேன். அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..!)

Tuesday, December 8, 2015

உசாரய்யா! உசாரு!!...........வெள்ள நிவாரண உதவி செய்பவர்களே உசாரு!!!......

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களது உழைப்பையும்,நேரத்தையும்,நிதியையும் செலவழித்துக்கொண்டு கடலூர் சென்றால் அங்கு சுறையாடி திருடி கொள்ளையடிக்கும் சிலரைப்பற்றி நினைத்தால் மிகவும் வேதனையை தருகிறது...கோபிசெட்டிபாளையத்திலிருந்து உதவும் எண்ணத்துடன் சென்ற நமது நண்பர்கள் பட்ட வேதனையை இங்கு பதிவிட்டுள்ளேன். கடலூர் நோக்கி நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் உதவும் நெஞ்சங்களே எதற்கும் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஒரு ஆளும்கட்சி அடிமை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னல் மிகுந்த வலி கொண்டது. மஞ்சக்குப்பம் என்ற கிராமத்தில் 11 லாரி வைத்திருக்கும் ராகவன் என்ற நபர்தான் அவர். ஆதலால் உங்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட ஆட்சியர் கைப்பேசி எண்ணும் 9444139000, மாவட்ட வருவாய் அலுவலர் எண்ணும் தந்துள்ளேன். 9445000907


 எங்கள் குழுவிற்கு தங்குவதற்கும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுத்த திண்டிவனம் மருத்துவர் illayaraja அவர்களுக்கு எங்கள் புல்வெளி அறக்கட்டளை மற்றும் தென்றல் கலைக்கூடம், கோபி ஆயுள் காப்பீட்டுக்கழக பணியாளர்கள், கோபி காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட நண்பர்கள், போக்குவரத்து ஊழியர் நண்பர்கள், சமையல் கலைஞர் சங்கர் உள்ளிட்ட நண்பர்கள், ல.கள்ளிப்பட்டி கண்ணப்பர் அறக்கட்டளை பெருமக்கள் அனைவரின் பங்களிப்பும் பாராட்டிற்குரியது.



Monday, November 30, 2015

சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள்..

மரியாதைக்குரியவர்களே,

 வணக்கம்.

        சமையல் உணவுப் பெயர்களை ஆங்கிலத்தில் அறிவோம்!!!

அன்றாடம் பயன்படுத்தும் சமையலறை பொருட்கள் பெயர்களை ஆங்கிலத்தில் அறிவோம்!!!
ஜாதிக்காய் – Nutmeg – நட்மெக்
ஜாதிபத்திரி – Mace – மெக்
இஞ்சி – Ginger – ஜின்ஜர்
சுக்கு – Dry Ginger – டிரை ஜின்ஜர்
பூண்டு – Garlic – கார்லிக்
வெங்காயம் – Onion – ஆனியன்
புளி – Tamarind – டாமரிண்ட்
மிளகாய் – Chillies – சில்லிஸ்
மிளகு – Pepper – பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் – Red chillies
பச்சை மிளகாய் – Green chillies
குடை மிளகாய் – Capsicum
கல் உப்பு – Salt – ஸால்ட்
தூள் உப்பு – Table salt
வெல்லம்/கருப்பட்டி – Jaggery – ஜாக்கரீ
சர்க்கரை/சீனி – Sugar – ஸுகர்
கற்கண்டு – Sugar Candy
ஏலக்காய்/ஏலம் – Cardamom – கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை – Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு – Cashew nuts
கிஸ்மிஸ் – Dry Grapes
லவங்கம்,கிராம்பு – Cloves – க்லெளவ்ஸ்
கசகசா – Poppy – பாப்பி
உளுந்து – Black Gram – பிளாக் கிராம்
கடலைப் பருப்பு – Bengal Gram – பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு – Moong Dhal/ Green Gram – மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு – Moong Dal
கடலைப்பருப்பு – Gram Dal – கிராம் தால்
உழுத்தம் பருப்பு – Urid Dhal
துவரம் பருப்பு – Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு – Millet – மில்லட்
கேழ்வரகு – Ragi – ராகி
கொள்ளு – Horse Gram – ஹார்ஸ் கிராம்
கோதுமை – Wheat – வீட்
கோதுமை ரவை – Cracked Wheat
சோளம் – Corn
சோளப்பொறி – Popcorn
எள்ளு – Sesame seeds / Gingelly seeds
நெல் – Paddy – பாடி
அரிசி – Rice – ரய்ஸ்
அவல் – Rice flakes
பச்சை அரிசி – Raw Rice
புளுங்கல் அரிசி – Par boiled rice
கடலை மா – Gram Flour
மக்காச்சோளம் – Maize – மெய்ஸ்
வாற்கோதுமை – Barley – பார்லி
பச்சை பட்டாணி – Green peas
சேமியா – Vermicelli
சவ்வரிசி – Sago
ரவை – Semolina
கொண்டை/கொண்டல் கடலை – Chickpeas/Channa
கடுகு – Mustard – முஸ்டார்ட்
சீரகம் – Cumin – குமின்
வெந்தயம் – Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் – Anise seeds
பெருங்காயம் – Asafoetida – அசஃபோய்டைடா
மஞ்சள் – Turmeric – டர்மரிக்
ஓமம் – Ajwain / Ajowan
தனியா – Coriander – கோரியண்டர்
கொத்தமல்லி தழை – Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை – Curry Leaves
கஸ்தூரி – Musk – மஸ்க்
குங்குமப்பூ – Saffron – சஃப்ரான்
பன்னீர் – Rose Water – ரோஸ் வாட்டர்
கற்பூரம் – Camphor – கேம்ஃபர்
மருதாணி – Henna – ஹென்னா
துளசி – Tulsi
எலுமிச்சை துளசி – Basil
எண்ணெய் – Oil – ஆயில்
கடலை எண்ணெய் – Gram Oil – கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் – Cocoanut Oil – கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் – Gingili Oil/Sesame oil – ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் – Neem Oil – நீம் ஆயில்
பாமாயில் – Palm Oil
ஆலிவ் ஆயில் – Olive Oil
பால் – Milk – மில்க்
பால்கட்டி – Cheese – ச்சீஸ்
நெய் – Ghee – கீ
வெண்ணெய் – Butter – பட்டர்
தயிர் – Curd/Yoghurt – க்கார்ட்
மோர் – Butter Milk – பட்டர் மில்க்
கீரை – Spinach – ஸ்பீனச்
அவரை – Beans – பீன்ஸ்
கர்பூரவள்ளி – Oregano
நார்த்தங்காய் – Citron – சிட்ரான்
திருநீர்பச்சை – Ocimum-basilicum
சீத்தாப்பழம் – Custard-apple
மாதுளை – Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் – Pumpkin
கருங்காலி மரம் – Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் – Bermuda Grass
வல்லாரை கீரை – Pennywort (Centella asiatica)
புதினா இலை – Mint leaves
வெற்றிலை – Betel leaves
நொச்சி இலை – Vitexnegundo (Chaste Tree)
அத்தி – Fig
கீழாநெல்லி – Phyllanthus nururi
தாழை மரம் – Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை – Purple-fruited pea eggplant
துத்திக்கீரை – Abutilon indicum
பிரமத்தண்டு – Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் – Coccinia grandis
முடக்கத்தான் கீரை – Cardiospermum halicacabum
குப்பைமேனி – Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி – Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை – Aloe Vera
நாவல் பழம் – Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி – Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி – Heliotropium
நிலக்குமிழஞ் செடி – Gmelina Asiatica
நெல்லிக்காய் – Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) – Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் – Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு – Sida caprinifolia
அகத்திக்கீரை – Sesbania grandiflora
செண்பகப் பூ – Sonchafa (champa)
சுண்டைக்காய் – Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி – Hibiscus(Shoe Flower)
கரும்பு – Sugar cane
நீர்முள்ளி – Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ – Star Anise
பூவரசு – Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை – Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி – Indian winter cherry
கத்தரிக்காய் – Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் – Guava
மரவள்ளிக் கிழங்கு – Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு – Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு – Yam
விளாம் பழம் – Wood apple
முள்ளங்கி – Radish / parsnip
புடலங்காய் – Snake gourd
பாகற்காய் – Bitter gourd
வெண்டைக்காய் – Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை – Peanut
வாழைக்காய் – Ash Plantain
வாழைப்பழம் – Banana
ஊறுகாய் – Pickle
உருளைக் கிழங்கு – Potato
தேங்காய் – Coconut
இளந்தேங்காய் – Tender Coconut
இளநீர் – Tender Coconut water
பதநீர்/பயினி – Neera /Palmyra juice
கள்ளு – Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு – Lime
ஆப்பச் சோடா – Baking Soda
தீப்பெட்டி – Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி – Incence Stick

Monday, November 2, 2015

வருங்கால வைப்புநிதி -

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். மாதச் சம்பளம் வாங்கும் பலருக் கும் தங்களது சம்பளம்
எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர,
மொத்த சம்பளம் எவ்வளவு?
அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்?
எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது.
வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது
வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.
இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை.
எவ்வளவு பிடிக்கிறார்கள்?
***************************************
பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும். பணியாளர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்துக்கும் 3.67 சதவீத தொகை வருங்கால வைப்பு நிதியாகவும், 0.50 சதவீத தொகை காப்பீட்டுக்கும் செலுத்தப்படும். ஆனால் சமீப காலமாக சிடிசி (cost to company) முறையில், நிறுவனங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையையும் சம்பளத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
சம்பளத்தில் 12 சதவீதம் என்பது விதிமுறையாக இருந்தாலும் கூட, எவ்வளவு அதிகமாக சம்பளம் இருந் தாலும், புதிய விதிமுறைகளில் குறைந்தபட்சம் 1,800 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் பல நிறுவனங்கள் இதை பின்பற்றுகின்றன. இந்த தொகையையும் நிறுவனங்கள் பென்ஷன், காப்பீடு என்று பிரித்து முதலீடு செய்கின்றன.
நிரந்தர கணக்கு எண்
*******************************
புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசு ஆரம்ப காலங்களில் செய்த முக்கியமான பணி நிரந்தர வைப்பு நிதி எண் ( யுஏஎன் - Universal Account Number) கொண்டுவந்ததுதான். இதன் மூலம் பி.எஃப். தொகையை கையாளுவது எளிதாகிவிட்டது. பலர் அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால் புதிய நிறுவனத்துக்கு சென்றவுடன் பழைய பிஎஃப் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் பல கோடி ரூபாய் தொகை யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக யுஏஎன் கொண்டுவரப்பட்டது. இதனால் புதிய நிறுவனத்துக்கு செல்லும் போது யுஏஎன் எண்ணை கொடுக்கும் பட்சத்தில் ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் சேர்ந்துவிடும். பயனாளிகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிஎஃப் தொகையை கையாளலாம்.
தெரிந்துகொள்வது எப்படி?
****************************************
சில வருடங்களுக்கு முன்பு பி.எஃப். கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது இணையம் வந்த பிறகு அனைத்தும் எளிதாகிவிட்டது. யுஏஎன்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் இணையத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாதமும் நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா, வட்டி எப்போது வரவு ஆனது. பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல் களையும பார்த்துக்கொள்ள முடியும்.
இணையதளம் தவிர பி.எஃப் கணக்கை நிர்வகிக்க செயலி இருக் கிறது. அரசின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நம்மு டைய கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். தவிர அந்த இணையதளத்தில் இருக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கணக்கில் இருக்கும் தொகையை அறிந்துகொள்ளலாம்.
பணம் எடுப்பது எப்படி?
***********************************
பி.எஃப். பணத்தை எடுக்க முடியும் என்றாலும் முடிந்த வரைக்கும் எடுக் காமல் இருப்பது நல்லது. தற்போதைய சூழலில் ஓய்வு காலத்துக்காக யாரும் தனியாக சேமிப்பது இல்லை, சேமிக்க முடியவில்லை. அதனால் ஓய்வு காலத்துக்கு கைகொடுப்பது இந்த பிஎஃப் தொகை என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
பணியில் சேர்ந்து ஐந்து வருடத் துக்குள் பி.எஃப். தொகையை எடுக்க வேண்டும் என்றால் 10 சதவீத வரி (டிடீஎஸ்) பிடித்தம் செய்யப்படும். 5 வருடங்களுக்கு மேல் என்றால் வரிபிடித்தம் செய்யப்படமாட்டது. அதேபோல இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேலையில் இல்லை என்றாலும் பி.எஃப். தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளன. அதனை பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். பணம் எடுப் பதை தவிர சில தேவைகளுக்கு முன் பணம் கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம், குழந்தைகளில் கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு எடுத்து கொள்ளலாம்.
ஆன்லைன் பரிவர்த்தனை
******************************************
வரும் மார்ச் மாதம் முதல் ஆன் லைனிலேயே பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை செலுத்தலாம். மூன்று மணி நேரத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பி.எஃப். தொகை அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும். இந்த வசதியை பிஎஃப் ஆணையர் கே.கே.ஜலான் தெரிவித்திருக்கிறார். தற்போது ஆதார் எண் இருப்பவர்கள் 3 நாட்களில் தங்களது தொகையினை பெற்றுக் கொள்ள முடியும்.
பங்குச் சந்தையில் பி.எஃப்.
***************************************
ஓய்வு காலத்துக்காக சேமிக்கப்படும் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்களே என்று அச்சப்பட தேவையில்லை. இப்போது பி.எஃப். ஆணையத்தில் 8.5 லட்சம் கோடி ரூபாய் தொகை இருக்கிறது. இவை அரசாங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்போவதாக பி.எஃப். அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த தொகையில் முக்கியமான குறியீடுகளாக பிஎஸ்இ இடிஎப் மற்றும் என்எஸ்இ இடிஎப்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூடுதலாக கிடைக்கும் தொகையில் அதிகபட்சம் 15 சதவீதம் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்
**********************
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர் ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
ஓய்வுகாலத்துக்கு இன்னும் கூடுதலாக முதலீடு செய்ய விரும்பினால் அதற்கும் வாய்ப்பு உண்டு. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 12 சதவீதம் தவிர இன்னும் அதிகமாக பிடிக்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் பணி யாற்றும் நிறுவனத்திலேயே எழுதி கொடுத்து பிடித்தம் செய்யலாம். இந்த விருப்ப தொகை விபிஎப் ஆக முதலீடு செய்யப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சேமிக்கும் பழக்கம் இல்லாத மாத வருமானம் கொண்டவர்கள் தங்களது ஓய்வு காலத்தை பொருளாதார சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் பிஎஃப் திட்டம் உண்மையிலேயே ஓய்வு காலத்தை வசந்தமாக்கும் திட்டம்தான்.
நடப்பு நிதி ஆண்டில் பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சிறிய அளவிலான தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் சிறிதளவு வட்டி உயர வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான காரணமே முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று முன்னர் கூறப்பட்டது.
நன்றி : தி இந்து நாளிதழ் - 26.10.2015
குறிப்பு: பி.எஃப். அலுவலகத்தில் தாங்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலமாக, 01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், தங்களது பி.எஃப். இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். (தகவல் உதவி ; முகநூல் நண்பர் .Ramesh Tirupur) பதிவிட்ட முகநூல் நண்பர் திருமிகு.செல்வம் பழனிசாமி அவர்களுக்கு நன்றி.

Thursday, October 29, 2015

பூண்டு மருத்துவ மகிமை

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். பூண்டு மருத்துவம் பற்றி அறிவோம் வாங்க.

பூண்டை தனித்து சாப்பிடும்போது எப்படி சாப்பிடனும்..?
நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.
சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள். வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.
வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும். பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் முன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.
* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.