Wednesday, September 9, 2015

தகவல் அறியும் உரிமைச்சட்டம்-

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மற்ற அரசுத்துறைகளுக்கு புகார் அனுப்பியோ,மனு கொடுத்தோ
 ஒரு மாதம் ஆன பிறகும் நடவடிக்கை இல்லையா??
..வருத்தமோ கவலையோ வேண்டாம்.,
      மனதை வலுப்படுத்துங்கள் அதற்கான ஆலோசனை பாருங்கள்.,
              10 ரூபாய் நீதிமன்ற வில்லை,ஒரு வெள்ளை பேப்பர் போதும்.,அவர்களை வேலை செய்ய வைக்க.,

No action taken on your petition,then what you do?

Read the below legal guidelines.

தகவல் சட்ட விண்ணப்பத்தில் பார்வை பத்தியில் உங்கள் மனு ஏற்கப்பட்டது என்பதற்கு நீங்கள் வைத்துள்ள ஒப்புகை ரசீது நகலை இணைத்து அதனை குறிப்பிட்டு..,
...
பின் வருமாறு கேள்விகளை கேளுங்கள் ..,
..

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தின் மீது எவ்வகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய “தினசரி முன்னேற்ற அறிக்கை” என்ற விவரங்களை / ஆதாரங்களை தரவும். ஆதாரம் : Petitions - Petitions presented to Government Officers - Procedures for dealing with grievance Petitions - Instructions Issued. G. O. Ms. No. 114, Dated : 02.08.2006. Personal and Administrative Reforms (A) Department. Chief Secretary to Government).

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தின் மீது எந்தெந்த அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் வசம் இருந்தது, அவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றிய விவரங்கள் தயவு செய்து தரவும்.

எந்தெந்த அதிகாரிகளிடம் / அலுவலர்களிடம் எவ்வளவு காலம் இந்த புகார் இருந்த்து.
அவர்கள் ஒவ்வொருவரும் இதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்ற விவரங்களை / ஆதாரங்களை தரவும். ஆதாரம் : From the Government Of India, Ministry Of Personal, Public Grievance and Pensions, New Delhi, D. O. No. G-13013 / 1 / 2006-PG Dt. 05.05.2006. TN GO Ms. No. 114, Dt. 02.08.2006.

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தினை பெற்றுக் கொண்ட தங்கள் அரசு அலுவலகம் / பிற அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் ஒவ்வொருவரிடமும் என் விண்ணப்பம் பெறப்பட்டதற்கும் பின்னர் வேறு பிரிவுகளுக்கு அனுப்ப்பட்ட்தற்கும் உரிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் : G. O. Ms. No. 89, P & AR (A), Dept. Dt.13.05.1999 ).

மேற்சொன்ன பார்வை 1-ல் சொல்லப்பட்ட புகார் கடிதத்தினை பெற்றுக் கொண்ட தங்கள் அரசு அலுவலகம் / பிற அரசு அதிகாரிகள் / அலுவலர்கள் மேற்சொன்ன ஆதாரங்களின் படி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தக்கவாறு செயல்படவில்லை. எனவே, இந்த அதிகாரிகள் விதிகளை மீறிய குற்றத்திற்கு உள்ளாகிறார்கள் எனில் நடத்தை விதிகளின்படி (Conduct Rules) தவறான நடத்தைக்கான குற்றத்திற்கும் ஆளாகிறார்களா என்பதையும் மேற்கண்ட விதிகளை மீறியதன் மூலம் அவர்கள் நடத்தை விதிகளை மீறிவிட்டதைக் காட்டும், இந்த அதிகாரிகளுக்கான, “நடத்தை விதிகள்” என்னென்ன என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் : Para 167 (1) The Tamil Nadu Government Business rules and Secretariat Instructions) G. O. Ms. No. 66, P & AR (A) Dept. Dated 23.02.1993

மேற்கண்ட விதிகளை மீறியதற்காக மற்றும் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்த அதிகாரிகள் மீது, துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எத்தனை நாட்களுக்குள் அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும். ஆதாரம் G. O. Ms. No. 26, P & AR (A) Dept. dated 15.02.2008

முன்னுரிமை கொடுக்கப்பட்டு சிறப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட புகார்கள் / விண்னப்பங்கள் / திருப்பி அனுப்பபட்ட கடிதங்கள் / புகார்கள் / குறைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், “கண்காணிப்புத்துறை” எப்பொழுது அத்தகைய விசாரணையை மேற்கொள்ளும் என்பவை பற்றிய விவரங்கள் / ஆதாரங்கள் தரவும்
மேற்கண்ட பார்வை 1-யில் சொல்லப்பட்ட, எனது புகாருக்கு பிறகு பெறப்பட்ட புகார்கள் / விண்ணப்பங்கள் / திருப்பி அனுப்பபட்ட கடிதங்கள் / மேல் முறையீடுகள் / குறைகள் இவற்றில் ஏதேனும் அலுவல் கடித வரிசை எண் இல்லாமல் முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசேசமாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணங்கள் தரவும'

மேற்சொன்ன இனங்களுக்குரிய தகவல்கள் / ஆவணங்களில் எவையேனும், சட்டப்பிரிவு 8 (1) (b)-ன் படி தடை செய்யப்பட்டிருப்பின், ஆதாரங்களுடன் முழு விவரங்கள் தரவும்

சட்டப்பிரிவு 7 (8) (iii)-ன் படி, முதல் மேல் முறையீட்டு அலுவலரின் முழு முகவரி தரவும் .

இப்படி கேள்வி கேளுங்கள்.,
உங்கள் மனு மீது நடவடிக்கை எடுப்பார்கள்.,

No comments:

Post a Comment