Thursday, July 9, 2015

ஹெல்மெட் அணியலாமா?

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
    ஹெல்மெட் அணிவது பற்றிய ஃபேஸ்புக் விமர்சனத்திற்கு எனது பதிலுரை தங்களது மேலான கவனத்திற்காக...


    Rajesh Reddy இன் புகைப்படம்.
    Parameswaran Driver, Rajesh Reddy இன் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
    ஹெல்மெட் அணிவது யாருடைய நலனுக்காக? என சிந்தியுங்க....அவசியம் படியுங்க!..தங்களுடைய மேலான விமர்சனங்களை தெரிவியுங்க...
    அவசியம் படியுங்க,
    ஹெல்மெட் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்க..அவசியம் தலைக்கவசம் அணியுங்க....
    .சிந்தியுங்க மக்களே,சிந்தியுங்க!!!!.............
    மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம். தலைக்கவசம் அணியுமாறு சொல்வது நமது உயிர்ப் பாதுகாப்பிற்கு என்பதை மறந்து விட்டு ஏதோ நீதிமன்றத்தின் அதிகாரத்திற்காக? என்பது போல் அல்லவா ஆளாளுக்கு எதிர்மறையான விமர்சனம் செய்யறாங்க!.
    சாலையில் விபத்து என்று நேர்ந்தால் இழப்பீடு கோரி நீதிமன்றம்தாங்க செல்கிறோம்.விசாரிக்கும் நீதிமன்றமானது விபத்துக்காரணம் தலைக்கவசம் அணியாமையால் ஏற்பட்ட தவறே என வழக்கை தள்ளுபடிசெய்து தீர்ப்பளித்தால் என்ன செய்வீர்கள்? இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு விதிகள் தெரிந்து வைத்துள்ளனரா? என கேட்டறிய வேண்டும்.அடுத்து புதுப்பிக்கும் சாலைகளின் தரத்தைக் கண்காணித்து அரசு ஒதுக்க்கப்படும் நிதியை முழுமையாக செலவழித்து தரமான மூலப்பொருட்களால்தான் சாலைகள் போடப்படுகின்றனவா? இனிமேலாவது ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலையை பரிசோதனை செய்ய முன்வருவீர்களா? தரமில்லாமல் போட்ட ஒப்பந்ததாரரைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க முன் வருவீர்களா? பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியுமா? (அவைகளும் இந்தியாவின் ஒரு பகுதி தானே) நான் அறிந்தவகையில் கர்நாடகாவில் ஆங்காங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் ஆதாரங்களைக்கொண்டு வேகமாக மோட்டார் வாகனங்களில் வேகமாக சென்றாலோ,தலைக்கவசம் அதாங்க ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தாலோ அந்த வாகனத்தின் பதிவு எண்படி உரிமையாளர் முகவரிக்கே தபால்மூலமாக அபராதம் மற்றும் தண்டனைக்கான அறிவிப்பு சென்றுவிடும்.உடனே அபராதத்தை கட்டியே தீர வேண்டும்...இப்போது சொல்லுங்க தமிழ்நாட்டில் நாம் எங்கே இருக்கிறோம்? பக்கத்து மாநிலம் எப்படி சென்றுகொண்டிருக்கிறது?
    அரசியலில் தங்களுக்கு வேண்டாத கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களும் நமது மந்திரிகளே! என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம் சட்டத்தை எதிர்ப்பது ஏனோ?.
    நுண்ணறிவு ஜீவிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.தங்களுடைய ஒற்றுமை மற்றும் அதிகார பலத்தால்,

             மத்திய மோட்டார் வாகன சட்டம்1988-ன் பிரிவு 129 மற்றும்மத்திய மோட்டார் வாகனச்சட்டம்1988 ன்பிரிவு 206 ஐ நீக்கினால் சந்தோசம்தாங்க!...........

      
       இதுபற்றி தங்களுடைய
    கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்.

         இந்த விமர்சனங்களால் சமூகத்திற்கு பயன் அளிக்க வேண்டும் என்பதே எனது பணிவான எண்ணம்..
    என அன்பன்
    C.பரமேஸ்வரன்.(+919585600733)
    paramesdriver@gmail.com
    www.consumerandroad.blogspot.com
    நியாயமான கோரிக்கை தானே நண்பர்களே
  • Parameswaran Driver மரியாதைக்குரிய ராஜ்பிரின்ஸ் அவர்களே,வணக்கம்.தங்களது விருப்பத்திற்கு மிக்க நன்றிங்க!......
  • Parameswaran Driver

    உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

No comments:

Post a Comment