Wednesday, April 6, 2011

(14) மாவட்ட நிர்வாகத்தின் தேர்தல் விழிப்புணர்வு

                             
அன்பு நண்பர்களே,
      paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
                06-04-2011 புதன்கிழமை இன்று ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சி ஒன்றியம்,ஆசனூரில்  ஈரோடு  மாவட்ட நிர்வாகக்குழு சார்பாக  பொதுமக்களுக்கான தேர்தல் விழிப்புணர்வுப் பிரச்சார ஊர்வலம்  மற்றும் கலைப்பயணக்குழு மூலமாகவும் நாடகம் ,நாட்டுப்புற பாட்டுக்கள் என கலைநிகழ்ச்சிகள் நடத்தி  பிரச்சாரம்  நடைபெற்றது.

         நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேர்தல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தினை துவக்கி வைத்து பொதுமக்களிடையே வருகிற 13-04-2011 புதன் கிழமை அன்று நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்லில் அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு வாக்களிக்க யாரிடத்தும் எவ்வித இலவசமாக அதாவது பணமோ,பொருளோ வாங்காமல் நம்முடைய சுய சிந்தனையோடு நமக்கு சுறுசுறுப்போடு மக்கள் நலனுக்காக பாடுபடக்கூடிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.       
    இந்த விழிப்புணர்வு பயணக்கூட்டத்தில் மரியாதைக்குரிய நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மரியாதைக்குரிய பொன்குமார் அவர்கள்,மரியாதைக்குரிய பேரா.ந.மணி (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) அவர்கள், மரியாதைக்குரிய ராஜம்மா A.E.O.(துவக்கப்பள்ளி கல்வி அதிகாரி -தாளவாடி) அவர்கள்,   மரியாதைக்குரிய சத்தி வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

        கலைப்பயணக்குழு வாயிலாகவும் நாடகங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.paramesdriver.blogspot.com //Sathy&Thalavadi

No comments:

Post a Comment