Sunday, November 4, 2012

அன்பு நண்பர்களே,வணக்கம். இது நம்ம ஊர் சமூக சேவைங்க!



















Wednesday, October 31, 2012

KARATTUR-SATHY-சொர்க்க பூமி மேம்பாடு-2012

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
            பரமேஸ்டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.சத்தியமங்கலம் வட்டம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரட்டூர் கிராமத்திற்கு சொந்தமான மயானம் என்னும் சொர்க்கபூமி புதர் மண்டி மிக மோசமான அவலநிலையில் இருக்கிறது.




         நீண்டநாள் முயற்சிக்குப்பிறகு தற்போதுதான் கரட்டூர் பொதுமக்கள் வழிகாட்டிதலில் மகாசக்தி ஆண்கள் குழு செயல்பட்டு அதன் முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடுதல்,அமரர்களை அடக்கம் செய்ய மண் ஓட்டி சமதளத்தை உயர்த்துதல்,மூலிகைப்பண்ணை,மற்றும்பூங்கா அமைத்து பராமரித்தல்,தண்ணீர்த்தொட்டி அமைத்தல்,உள்புற சாலையை தற்காலிகமாக புதுப்பித்தல்,மின்விளக்கு அமைத்தல்,என துவங்கப்பட்டுள்ளது.





















வாருங்கள் பொதுமக்களுக்காக சமூக சேவை செய்யும் இந்த இளைஞர்களை வாழ்த்துவோம்.வரவேற்போம்.

Friday, October 5, 2012

கொங்குத் தென்றல்: தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012...

கொங்குத் தென்றல்: தேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012...: மரியாதைக்குரிய நண்பர்களே,             வணக்கம். கொங்கு தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.கணித மேதை ராமானுஜருக்கு சிறப்பளி...

கொங்குத் தென்றல்: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்-தேசியக் கருத்தரங்கம்-2...

கொங்குத் தென்றல்: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்-தேசியக் கருத்தரங்கம்-2...: மரியாதைக்குரிய நண்பர்களே,        வணக்கம்.                  சென்னை தரமணி-மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் அமைந்துள்ள உலகத்தமிழாராய்...

Sunday, August 19, 2012

Drivers India - ஓட்டுனர்களுக்கான வலைப்பக்கம்

மரியாதைக்குரிய நண்பர்களே,
                      இனிய வணக்கம். 
                ஓட்டுனர்களாகிய நமக்கு தொழில்ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகி அதன் காரணமாக சமூகத்தின் பார்வையிலும் கொடூரமானவர்களாக காணப்பட்டு வருகிறோம். அத்துடன் பிறர் செய்யும் தவறுகளுக்கு ஆள்பலம்,பணபலம்,சட்ட யுக்தி என பல காரணங்களை வைத்து கூலிக்கு வேலை செய்யும் நாம் எளிதாக தண்டிக்கப்பட்டும், கேவலப்பட்டும் வருகிறோம்.சமூகத்தின் அந்த தவறான பார்வையை அகற்றி நாமும் சராசரி மனிதர்களே,சூழ்நிலை நம்மை குற்றவாளியாக்குகிறது. என்பது போன்ற பல பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் செய்து தீர்வு காண நாமும் தெளிவு பெற,ஓட்டுனருக்கென்றே தனி வலைப்பக்கம் driversindia.blogspot.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் ஓட்டுனரே! ஓட்டுனர்கள் அனைவரும் முறைப்படி சங்கம் கட்சிசார்பற்ற முறையில் அமைத்து நமக்காக நமது நன்மைக்காக செயலாற்றுவோம்.பொதுச்சேவையும் நம்மால் இயன்ற அளவு செய்வோம்.சமூகத்திடம் நல்ல உறவு வைத்துக்கொள்வோம். எனவே ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாகி நல்ல விசயங்களை,சமூகத்திடன் பகிர்ந்து நம்மையும் பாதுகாத்து,நம்ம குடும்பத்தையும் பாதுகாத்து ஓட்டுனர் பணி ஒப்பற்ற உயர்வான பணி! கலையும் கூட! என்பதை உணர்வோம். உணரச்செய்வோம்.என 
        PARAMES DRIVER - THALAVADY - ERODE

Monday, July 30, 2012

புதிய தலைமுறை தொலைக்காட்சி: ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி: ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்: ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கியதற்கான காரணம், இதுகுறித்து தமது கட்சியின் நிலைப்பாடு, 15 மாத சிறைவாசம், தோழமைக் கட்சி துணையாக வந்ததா என்பன போன்ற...

Tuesday, March 27, 2012

அன்பு நண்பர்களே,வணக்கம்.


இது ஒரு புத்தகத் திருவிழா.கோபி மாநகரில் நடைபெற்ற இந்த புத்தகத்திருவிழா விகடன் பிரசுரம் நடத்தியது.