Sunday, August 19, 2012

Drivers India - ஓட்டுனர்களுக்கான வலைப்பக்கம்

மரியாதைக்குரிய நண்பர்களே,
                      இனிய வணக்கம். 
                ஓட்டுனர்களாகிய நமக்கு தொழில்ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகி அதன் காரணமாக சமூகத்தின் பார்வையிலும் கொடூரமானவர்களாக காணப்பட்டு வருகிறோம். அத்துடன் பிறர் செய்யும் தவறுகளுக்கு ஆள்பலம்,பணபலம்,சட்ட யுக்தி என பல காரணங்களை வைத்து கூலிக்கு வேலை செய்யும் நாம் எளிதாக தண்டிக்கப்பட்டும், கேவலப்பட்டும் வருகிறோம்.சமூகத்தின் அந்த தவறான பார்வையை அகற்றி நாமும் சராசரி மனிதர்களே,சூழ்நிலை நம்மை குற்றவாளியாக்குகிறது. என்பது போன்ற பல பிரச்சினைகள் பற்றிய விவாதங்கள் செய்து தீர்வு காண நாமும் தெளிவு பெற,ஓட்டுனருக்கென்றே தனி வலைப்பக்கம் driversindia.blogspot.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் ஓட்டுனரே! ஓட்டுனர்கள் அனைவரும் முறைப்படி சங்கம் கட்சிசார்பற்ற முறையில் அமைத்து நமக்காக நமது நன்மைக்காக செயலாற்றுவோம்.பொதுச்சேவையும் நம்மால் இயன்ற அளவு செய்வோம்.சமூகத்திடம் நல்ல உறவு வைத்துக்கொள்வோம். எனவே ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாகி நல்ல விசயங்களை,சமூகத்திடன் பகிர்ந்து நம்மையும் பாதுகாத்து,நம்ம குடும்பத்தையும் பாதுகாத்து ஓட்டுனர் பணி ஒப்பற்ற உயர்வான பணி! கலையும் கூட! என்பதை உணர்வோம். உணரச்செய்வோம்.என 
        PARAMES DRIVER - THALAVADY - ERODE

Monday, July 30, 2012

புதிய தலைமுறை தொலைக்காட்சி: ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி: ஆ.ராசாவுடன் சிறப்பு நேர்காணல்: ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கியதற்கான காரணம், இதுகுறித்து தமது கட்சியின் நிலைப்பாடு, 15 மாத சிறைவாசம், தோழமைக் கட்சி துணையாக வந்ததா என்பன போன்ற...

Tuesday, March 27, 2012

அன்பு நண்பர்களே,வணக்கம்.


இது ஒரு புத்தகத் திருவிழா.கோபி மாநகரில் நடைபெற்ற இந்த புத்தகத்திருவிழா விகடன் பிரசுரம் நடத்தியது.













         



Wednesday, March 7, 2012

உலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்


அன்பு நண்பர்களே,
     PARAMES DRIVER-வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..08-03-2012  உலக மகளிர் தினம்.
உலக மகளிர் தின விழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள்-எளையம்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கல்லூரி தாளாளர் திருமிகு.பேராசிரியர்.டாக்டர்.மு.கருணாநிதி B.Pharm.,M.S.,Ph.D.,அவர்களதுமிகச்சிறப்பாக ஆற்றிவரும் மகளிருக்கான கல்விப்பணிக்காக சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.






              மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.

             முத‌லி‌ல் அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம்  ''கொங்கு தென்றல்'' சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை  தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

         உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

           18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

               இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. 

       இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.
             எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌  த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.

            இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.

        அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

     இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.

            இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

         அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன. 

நம்மை ஈன்ற தாயும் ஒரு பெண்.நமது வாழ்க்கைத்துணையும் ஒரு பெண்.நமது வாரிசும் ஒரு பெண்.என்ற சிந்தனையோடு நாமும் பெண்ணுக்கு சம உரிமை கொடுத்து பெண்ணைப் படிக்க வைப்போம்.பெண்ணைப்போற்றுவோம்.பாரதத்தை வலிமையாக்குவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். வாழ்க பெண்ணியம்! வளர்க பாரதம்!!
   PARAMESDRIVER -TAMILNADU SCIENCE FORUM - THALAVADY - ERODE DISTRICT.


விப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012

    




















 அன்பு நண்பர்களே,
    PARAMES DRIVERவலைப்பக்கத்திற்கு வருகை தந்துள்ள தங்களை வருக! வருக!! என வரவேற்கிறேன்.திருச்செங்கோடு-விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 07-03-2012 இன்று  விப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக்கூட்டம்   நடைபெற்றது.
மின்தடை காரணமாக பதிவிடுதலில் காலதாமதம் ஏற்படுகிறது.பொறுத்தருளவும்.





 







































     


    

Wednesday, February 22, 2012

இரவு வானம்

புதன், 10 ஆகஸ்ட், 2011

இரவு வான் நோக்குதல் ஆகஸ்ட் 2011

கோள்களின் நிலைகள்
ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை

சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:
புதன்: இம்மாத ஆரம்பத்தில் மாலை நேரக் கோளாக இருக்கும் புதன், மூன்றாம் வாரத்தில் Aகாலை நேர கோளாக மாறுகின்றது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் ஓரளவு இக்கோளைக் காண இயலும். இக்கோள் சிம்மம் விண்மீன் தொகுதியில் உள்ளது.
செவ்வாய்: காலை சுமார் 2 மணிக்கு இக்கோள் உதமாகிறாது. அதிகாலை கிழக்கு வானில் நன்கு தெரியும். இக்கோள் மிதுனம் தொகுதியில் உள்ளது.
வியாழன்: இம்மாதம் காலைவானில் பிரகாசமான இருப்பது இதுவே ஆகும். இதைக் காலை மேற்கு வானில் நன்கு காணலாம். இது மேஷம் தொகுதியில் உள்ளது.
( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த ஜனவரி மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)
சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:
வெள்ளி: இம்மாத அதிகாலை விடியும் நேரத்தில் கிழக்கு அடிவானில் உள்ளது. பின்னர் இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து மாலை நேர கோளாக மாறுகின்றது. இக்காலம் முழுவதும் சூரியனுக்கு மிகமிக அருகில் உள்ளதால் இதைக்காண இயலாது இக்கோள் கடகம் விண்மீன்தொகுதியிலிருந்து சிம்மம் தொகுதிக்குச் செல்கிறது
சனி: சனிக்கோளை சூரியன் மறையவும் மேற்கு அடிவானிலிருந்து சுமார் 30 டிகிரி உயரத்தில் தெரியத் தொடங்கும். இம்மாதம் முழுவதும் கன்னி விண்மீன் தொகுதியில் சித்திரை நட்சத்திரத்திற்கு சற்று மேற்கில் காணலாம்.
சில முக்கிய வான் நிகழ்வுகள்:
ஆகஸ்ட் 13: முழுநிலவு
ஆகஸ்ட் 16: வெள்ளிக் கோள் சூரியனுக்கு நேர் பின்புறமாக அமைதல் (superior conjucation)
ஆகஸ்ட் 17: புதன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைதல்.
ஆகஸ்ட் 18: நிலவு சேய்மைத் தொலைவில் இருத்தல் ( apogee).
ஆகஸ்ட் 23: நெப்டியூன் சூரியனுக்கு நேர் எதிரே அமைவதால் சூரியன் மறையவும் கிழக்கே உதிக்கும். தொலை நோக்கி வழியாக இக்கோளை காணலாம்.
ஆகஸ்ட் 25: செவ்வாய் அதிகாலை கிழக்குவானில் பிறைநிலவுக்கு சுமார் 5 டிகிரி கிழக்கே இருத்தல்
ஆகஸ்ட் 29: அமாவாசை.
ஆகஸ்ட் 30: நிலவு பூமிக்கு அண்மைத் தொலைவில் உள்ளது (perigee)
செப்டம்பர் 3: புதன் சூரியனிலிருந்து அதிகபட்சமாக 18 டிகிரி மேற்காக பிரிந்து இருத்தல். அதிகாலை கிழக்குவானில் புதனை சுமார் 5.15 5.45 மணிக்குள் ஓரளவு காண இயலும் நாள்.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தமிழகத்தில் நன்கு தெரியும் சில நாட்கள்:
ஆகஸ்ட் 12: பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது தென்மேற்கு திசையில் மாலை சுமார் 7.04க்குத் தெரியத்தொடங்கி வடகிழக்கு நோக்கி சுமார் 7.11 வரை செல்லக் காணலாம். அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரயமானது தென் மாவட்டங்களில் சுமார் 76டிகிரியாகவும் வட மாவட்டங்களில் சுமார் 67 டிகிரியாகவும் இருக்கும்.

வியாழன், 17 ஜூன், 2010

ஆனி மாத இரவு வான் (June 2010 sky chart)


ஆனி மாத இரவு வான் ( June 2010 sky chart for Tamil Nadu)
June 2010 sky chart

சனி, 3 ஏப்ரல், 2010

சித்திரை மாத இரவு வான்

சித்திரை மாத இரவு வான்
உபயோகிக்கும் முறை:
தலைக்கு மேலாக இவ்வரைபடத்தை அதில் உள்ள திசைகளுக்கு நேராக பிடித்துக்கொண்டு பார்க்கவும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

டிசம்பர் மாத இரவு வான்
உபயோகிக்கும் முறை:
தலைக்கு மேலாக இவ்வரைபடத்தை அதில் உள்ள திசைகளுக்கு நேராக பிடித்துக்கொண்டு பார்க்கவும்.

திங்கள், 1 ஜூன், 2009

June 2009 sky chart for Tamil Nadu

Night Sky Map for Tamil Nadu- June 2009
2009 ஜூன் மாத தமிழ் நாட்டிற்கான வான் வரை படம்

படத்தினை தெளிவாகக் காண அதை சொடுக்கவும்


Night Sky Chart for TamilNadu in May 2009

தமிழ் நாட்டிற்கான மே மாத இரவு வானம்